Sunday, September 1, 2019

செப்டம்பர் 2019 ஒரு சிற்பியின் சுயசரிதை- எஸ். தனபால்

செப்டம்பர் 2019 
ஒரு சிற்பியின் சுயசரிதை! - எஸ். தனபால்

நண்பர்களுக்கு வணக்கம்.

கலை, இலக்கியம், ஆளுமைகள் எனப் பல பிரிவுகளிலும் பதிப்பில் இல்லாத புத்தகங்களைத் தேடிக் கண்டெடுத்து மீண்டும் அச்சாக்கி வெளியிடுவதும், கவனம் செலுத்த வேண்டிய புதுப் புலங்களை நோக்கி நகர்வதுமே நம் சிறுவாணி வாசகர் மையத்தின் தொடர் முயற்சியாக இருக்கிறது.

அம்முயற்சியில் நுண்கலைகள் சார்ந்த புத்தகங்களையும் அச்சில் கொண்டுவர வேண்டும் என்பதே நம் எல்லோருடைய விருப்பமும் கூட. இது சார்ந்து நம் தலைமை ஆலோசகர்களுடன் தொடர் விவாதமும் உரையாடலும் நிகழ்ந்தது.

அந்த வகையில் 25 வருடங்களுக்கு முன்பு ஆனந்த விகடன் இதழில் ஓவியரும் சிற்பியுமான எஸ். தனபால் தொடர்ந்து பத்து மாதங்களுக்கு எழுதிய "ஒரு சிற்பியின் சுயசரிதை!" தொடரைக் காலச்சுவடு பதிப்பகத்துடன் சேர்ந்து சிறுவாணி வாசகர் மையம் வெளியிடுகிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். நண்பர் கிருஷ்ண பிரபு பதிப்பாசிரியராகப் பொறுப்பேற்று நூலாக்கப் பணியைச் செய்து கொடுத்திருக்கிறார்.

செப்டம்பர் மாதத்தில் மதுரை புத்தகக் கண்காட்சியில்  இந்நூலைக் காலச்சுவடு வெளியிடுகிறது.
~~
புத்தகத்தின் பின்னட்டைக் குறிப்பு:

ஒரு சிற்பியின் சுயசரிதை  நூலுக்கு இரண்டு சிறப்புகள்.

ஓவியம், சிற்பம் ஆகிய கவின்கலைத் துறைகளில் சாதனை நிகழ்த்திய தமிழகக் கலைஞர்களில் எவரும் தன்வரலாற்றை எழுதியதில்லை. ஒரு கலைஞர் அவரது வாழ்க்கை அனுபவங்களிலிருந்து கலையையும் கலை அனுபவங்களிலிருந்து வாழ்க்கையையும் எப்படி அமைத்துக் கொண்டார் என்பதைப் பிறர் வாயிலாகவே தெரிந்துகொள்ள முடிகிறது. தனது வாழ்க்கையையும் கலையையும் குறித்து நேர் அனுபவங்களின் பின்புலத்துடன் தமிழில் எழுதப்பட்ட முதல் சுயசரிதை இதுவே.

இந்தத் தன்வரலாறு ஆனந்த விகடன் வார இதழில் தொடராக வெளியானது. அரசியல் பிரமுகர்களும் திரைப் பிரபலங்களும் உழைப்பால் உயர்ந்தவர்களும் சொல்லும் வெற்றிக் கதைகளே வெளியாகி வந்த வெகுஜன இதழொன்றில் பெருவாரியான வாசகர்களுக்கு அறிமுகமில்லாத ஒரு கலைஞரின் சுயசரிதை வெளியானதும் அது கணிசமான வாசகர்களை ஈர்த்ததும் குறிப்பிடத்தக்க நிகழ்வுகளாகும்.

ஒரு கலைஞரின் தன் வரலாறாக மட்டுமல்லாமல் விடுதலைக்கு முன்னும் பின்னுமான முக்கால் நூற்றாண்டுக் காலத் தமிழக வாழ்க்கையின் கலை,  சமூக, அரசியல் பின்புலங்களை அனுபவ அறிவுடனும் ஆழ்ந்த நோக்குடனும் சுவையாகவும்  முன்வைக்கிறது தனபாலின் சுயசரிதை.
~~
சிற்பி தனபாலின் ஓவியங்களும், சிற்பங்களும், அரிய புகைப்படங்களும் சிறப்புத் தாளில் (Art paper) அச்சாகி உள்ளது என்பது கூடுதல் சிறப்பு.

செப்டம்பர் 2019க்கான புத்தகமாக 'ஒரு சிற்பியின் சுயசரிதை நூல், சிற்பி எஸ். தனபாலின் தேர்ந்தெடுத்த  படைப்புகளுடன் அச்சாக்கி சிறுவாணி வாசகர் மையம் தனது உறுப்பினர்களுக்கு வழங்க இருக்கிறது.

இது போன்ற  ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளில் தொடர்ந்து கரம் கோர்க்கும் சிறுவாணி வாசகர் மைய நண்பர்களுக்கு மனமார்ந்த நன்றி.
-----------------------------------------------------------------------------------------------------------------


ஒப்பற்ற கலைஞன் தனபாலின்  சுயசரிதை , சிறுவாணியின் சாதனைகளின் சமீபத்திய உச்சம். பெருமைக்குரிய வெளியீடு. ஆவலுடன் காத்திருக்கிறேன்.
jeeva nandan
-------------------------------------------------------------------------------

எங்களுக்குள் புதைந்து கிடக்கும் ரசனையைத் தட்டி எழுப்புவதில் சிறுவாணி வாசகர் மையம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது வாழ்த்துகள். புத்தக வரவிற்கு ஆவலுடன் காத்திருக்கிறோம்.
Madavan narayanan
----------------------------------------------------------------------------------------------------------------------


ஒரு சிற்பியின் சுயசரிதை! - எஸ். தனபால்

"உங்க புத்தகம் எப்ப வெளிவருது?"

கடந்த பதினைந்து ஆண்டுகளாக இக்கேள்வி என்னைத் துரத்துகிறது. என்றாலும், இப்பொழுதுதான் நேரம் கனிந்திருக்கிறது போல. திருவிழாவில் Sight அடிக்கச் சென்றவன் கழுத்தில் பூமாலை விழுந்து கும்ப மரியாதை பெற்றதுபோல ஆகிவிட்டது கதை. இது தனபாலின் புத்தகம்தான், ஆனால் நானும் சொந்தம் கொண்டாடிக்கொள்ளலாம். ஒரு சிற்ப ஆளுமையின் குடைநிழலில் ஒதுங்க இப்போதைக்குச் சந்தர்ப்பம் வாய்த்திருக்கிறது.

கோவை, ஈரோடு, திருப்பூர் என நடந்து முடிந்த புத்தகக் கண்காட்சியிலேயே இந்நூல் வெளிவந்திருக்க வேண்டும். தி.ஜாவைத் தேடித் திரிந்த முன்னிரவு நேரத்தில் சென்னையின் பரபரப்புமிக்க  சாலை விபத்தொன்றில் தூக்கி வீசப்பட்டு முப்பது நாட்களுக்கும் மேல் ஓய்வெடுக்கும் படி ஆனது. பள்ளிக் கல்வித் துறையின் கணிதப் பாடப் புத்தகத் தமிழ் நூல்களின் வேலையும் கொஞ்சம் போல அழுத்தியது. விடுபட்டு வருவதற்குள் இரண்டு மாதங்கள் ஓடி விட்டன. இதோ மதுரை புத்தகக் கண்காட்சியில் வெளியிட வேண்டி ஓவிய மற்றும் சிற்பத் துறை ஆளுமையான தனபாலின் தன்வரலாற்று நூல் தயாராகிவிட்டது. இத்திரு வினையில் நானும் ஓர் அங்கமாக இருந்திருக்கிறேன்.

ஓவியரும் சிற்பியுமான எஸ். தனபால் (1919-2019) சென்னையில் பிறந்தவர் என்றாலும், இவர் பெண்ணெடுத்தது மதுரையில்தான். தொடர் வெளிவந்து  இருபத்தைந்து வருடங்கள் கழித்துக் களமாட மதுரையின் மாப்பிள்ளை புத்தகக் கண்காட்சிக்கு வருகிறார். இத்தொடர் முதன்முறையாக நூலாக்கம் செய்யப்பட்டு அச்சாகி வெளியாகிறது.

தொன்னூறுகளில்
விகடனில் தனபால் தொடராக எழுதிய வாழ்க்கை அனுபவப் பதிவுகளை, அவருடைய பிறந்தநாள் நூற்றாண்டை ஒட்டிப் புத்தகமாக்கும் முயற்சியில் காலச்சுவடு பதிப்பகமும், சிறுவாணி வாசகர் மையமும் இணைந்து செயல்பட்டிருக்கிறார்கள்.

காலச்சுவடு ஏப்ரல் மாத (2019) இதழ் 'தனபால் சிறப்பிதழாக'வும் வெளியிட்டிருந்தார்கள். 'தடம்', 'காக்கைச் சிறகினிலே' போன்ற இதழ்களும் தனபாலுக்குச் சிறப்பு செய்து கௌரவப்படுத்தின. தி இந்து தமிழ்த் திசையும் ஒரு முழுப் பக்கக் கட்டுரையை வெளியிட்டிருந்தார்கள்.

ஓவியர் பாலசுப்ரமணியன் குப்புசாமியால்  தனபாலின் இளைய மகன் ரவியைத் தொடர்புகொள்ளும் வாய்ப்பு சென்ற ஆண்டின் இறுதியில் அமைந்தது. அப்படித்தான் தனபாலின்  விகடன் தொடரின் நகலைப் படிக்கும் வாய்ப்பும்  கிட்டியது. அந்நகலை சுபாஷிணி (சிறுவாணி வாசகர் மையம் - தலைவர்) ஆண்டிக்குப் படிக்கக் கொடுத்தேன். அவருக்கு தனபாலின் தொடர் மிகப் பிடித்திருந்ததால் சிறுவாணி வாசகர்களுக்காகப்  புத்தகமாக்க விரும்பினார்.

இத்தொடரை நூலாக்குவதில் பல நடைமுறைச் சிக்கல்கள் இருந்தன. காலச்சுவடு கண்ணனிடமும் இம்முயற்சியைப் பற்றிச் சொல்லியிருந்தேன். அவரும் ஆர்வமுடன் இணைந்துகொண்டார். அதன் பிறகான அடுத்தடுத்த முன்னெடுப்புகளைச் சிறுவாணியும் காலச்சுவடுமே கவனித்துக்கொண்டார்கள்.

ஓரிடத்தில் இப்பணி நமக்குச் சரிவராது, ஒதுங்கிக் கொள்ளலாம் என்று தோன்றியது. நவ கிரகங்கள் போல நாங்கள் எல்லோரும்  ஒவ்வொரு திசையில் இருந்தோம். சூழல் கனிந்து ஒரு புள்ளியில், ஓர் இடத்தில் எல்லோரும் புரிந்துணர்வுடன் இணையும்படி ஆனது. பதிப்புரையில் கொஞ்சம் போல அதையெல்லாம் மனதில் இருத்தி எழுதியிருக்கிறேன். அப்படித்தான் இப்பணி சாத்தியம் ஆனது.

தொன்னூறுகளில் விகடன் இதழில் பிரசுரம் ஆன தொடர் என்பதால், ஒரு நல்ல மழை நாளிலோ அல்லது குளிர் இரவிலோ ஒரேயோர் அமர்வில் படித்துவிடக் கூடிய புத்தகம்தான் இது. தற்போது ரேடானில் பணியாற்றும் சுபா வெங்கட்தான் தனபால் பகிர்ந்த சம்பவங்களை எழுத்தாக்கி இருக்கிறார். அவரை அன்போடு இந்தத் தருணத்தில் நினைவுகூற விரும்புகிறேன்.

தன்வரலாற்றில் விருப்பம் உள்ளவர்களுக்கு இந்நூல் நல்ல வாசிப்பு அனுபவத்தைக் கொடுக்கும்  என்றே நினைக்கிறேன். வரலாறு, சமூக அரசியல் சார்ந்தும் சில விஷயங்கள் இதில் உண்டு. அது ஓவியத் துறையுடன் மேற்பரப்பின் மையத் தளத்தில்  பிணைந்தும் இருக்கிறது.

பின்னிணைப்பாக தனபாலின் சிற்பங்கள், ஓவியங்கள், புகைப்படங்கள் ஆகியவை சிறப்புத் தாளில் (Art paper) அச்சிடப்பட்டுள்ளன. ஓவியர்களும், ஓவியத் துறையில் ஆர்வம் உள்ளவர்களும், கலை சார்ந்த ஆர்வம் உள்ள இளம் தலைமுறையினரும், கலைப் புரவலர்களும் இந்நூலை வாசித்துப் பார்க்கலாம்.

கொஞ்சம் கால அவகாசம் கிடைத்திருந்தால் இதனினும் சிறப்பாகச் செய்திருக்கலாம் என்ற எண்ணம்தான் மேலெழுகிறது. எனினும் இவ்வருடம்  வெயிலின் இறுக்கம் அதிகமோ அதிகம்தான்.  புழுக்கத்தில் தலை கிறுகிறுக்க ஓவியர் பாலசுப்ரமணியனுடன் வியர்வை சொட்டச் சொட்ட தக்‌ஷிணசித்ரா, லலித் கலா அகாடமி, ஓவியக் கல்லூரி, தனபாலின் குடும்பத்தார் வீடு, ஓவியர் நரேந்திர பாபுவின் வீடு மற்றும் அலுவலகம் எனச் சக்கரம் போலச் சுழன்றது எல்லாம் நினைவில் நிழலாடுகிறது.

நடிகர் சிவக்குமார், ஆ.இரா. வேங்கடாசலபதி, கவிஞர் சுகுமாரன், பெருந்தேவி அக்கா, எழுத்தாளர் அரவிந்தன், இதழழகு கோபு ராசுவேல் ஆகியோர் முக்கியமான தருணத்தில் குழப்பங்களை நிவர்த்தி செய்தும், ஊக்கமளித்தும் உடனிருந்து உதவினார்கள்.

மதுரை புத்தகக் கண்காட்சியின் காலச்சுவடு அரங்கில்  இன்னும் ஓரிரு நாட்களில் இப்புத்தகம் வாங்கக் கிடைக்கும்.

விலை: ரூபாய் 180/-

புத்தகம் சார்ந்த நிறைகுறைகள் இருப்பின் காலச்சுவடு பதிப்பாளரின் மின்னஞ்சலைத் தொடர்பு கொள்ளவும்:

publisher@kalachuvadu.com

Krishnaprabhu
-----------------------------------------------------------------------------------------------------------------




























வாசக நண்பர்களுக்கு,
வணக்கம்.
ஓவியரும் சிற்பியுமான எஸ். தனபாலின் பிறந்தநாள் நூற்றாண்டு விழாவினைப் போற்றும் விதத்தில் காலச்சுவடு (மார்ச் 2019) சிறப்பிதழைச் கொண்டுவந்து கௌரவம் செய்தது.

அதன் தொடர்ச்சியாக, தனபாலின் சுயசரிதையும் நூலாக்கம் பெற்றிருக்கிறது. ஆனந்த விகடன் இதழில் தொன்னூறுகளின் மத்திய ஆண்டுகளில் - தொடர்ந்து பத்து மாதங்களுக்கு 'ஒரு சிற்பியின் சுயசரிதை!' என - அவரெழுதிய தொடர் வாசகர்களிடம் பரவலான கவனமும் பெற்றுள்ளது. சிறுவாணி வாசகர் மையத்துடன் இணைந்து காலச்சுவடு பதிப்பகம் அத்தொடரைப் பதிப்பித்துள்ளது. சிற்பி தனபாலின் தேர்ந்தெடுத்த படைப்புகளும் புகைப்படங்களும் 'Art Paper'இல் பின்னிணைப்பாகவும் கொடுக்கப்பட்டுள்ளது. தென்னிந்திய நவீன ஓவிய ஆளுமை குறித்த முதல் புத்தகம் இதுவென்பது கூடுதல் சிறப்பு.

பரிந்துரை சுட்டி:

https://www.thehindu.com/society/remembering-s-dhanapals-lost-sculpture-of-periyar-the-arch-iconoclast/article29409497.ece

ஓவியம் சார்ந்து காலச்சுவடு பதிப்பகம் ஏற்கனவே வெளியிட்டுள்ள புத்தகங்களின் பட்டியல்:

1. தமிழக ஓவியங்கள் – ஐ. ஜோப் தாமஸ்
2. அர்ச்சுனன் தபசு – சா. பாலுசாமி
3. நாயக்கர் காலக் கலைக் கோட்பாடுகள் – சா. பாலுசாமி
4. மாமல்லபுரம்: புலிக்குகையும் கிருஷ்ண மண்டபமும் – சா. பாலுசாமி
5. சோழர் காலச் செப்புப் படிமங்கள் – ஐ. ஜோப் தாமஸ்
6. சோழர்கால விஸ்வரூபச் சிற்பங்கள் – எஸ். ஏ. வி. இளஞ்செழியன்
7. மேற்கத்திய ஓவியங்கள் பகுதி I & II - பி. ஏ. கிருஷ்ணன்

நவீன ஓவியம், நவீன கலைகள் சார்ந்த மேலும் சில புத்தக வேலைகளும்  முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன என்பதை மிகுந்த மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறோம். வாசகர்களின் ஆதரவின்றி இதுபோன்ற நுண்கலை சார்ந்த ஆவணப்படுத்தும் எழுத்துப் பணிகள் சாத்தியமே இல்லை.


காலச்சுவடு பதிப்பகம்.

------------------------------------------------------------------------------------------

                         காலச்சுவடும் சிறுவாணி வாசகர் மையமும் இணைந்து வெளியிட்டுள்ள நூல் ’ஒரு சிற்பியின் சுயசரிதை.’ ஓவியரும் சிற்பியுமான எஸ். தனபால் (1919-2000), 1993-ல் ஆனந்த விகடனில் தம் கலை வாழ்க்கையின் முக்கிய சம்பவங்கள் குறித்த  தொடர் ஒன்றை எழுதினார். அத்தொடரின் தொகுப்பாகவும் அவர் வாழ்க்கைக் குறிப்புகள், அவருடைய முக்கிய ஓவியங்கள், சிற்பங்கள், அவர் பங்கேற்ற நாட்டிய நாடகங்களின் சில காட்சிகள் ஆகியவற்றைப் பின்னிணைப்பாகக் கொண்டும் இந்நூல் வெளியாகியிருக்கிறது. கிருஷ்ண பிரபு பதிப்பாசிரியர். தமிழ்ச் சூழலில் ஒரு ஒவியரின், சிற்பியின் சுயசரிதை என்ற நிலையில் இது முதல் நூல். அதனால் வரலாற்று முக்கியத்துவம் கொண்டது.

1970களில் சிறுபத்திரிகைகளோடு, குறிப்பாக நடை, கசடதபற, பிரக்ஞை, அஃக் போன்றவற்றோடு, சென்னைக் கலைக் கல்லூரியின் ஓவியர்கள், சிற்பிகள் கொண்ட நெருங்கிய உறவு நினைவுக்கு வருகிறது. அவ்விதழ்களின் மேலட்டைகளிலும் உள்பக்கங்களிலும் அவர்களுடைய படைப்புகள் வெளியாகும். அவர்களைக் குறித்த கட்டுரைகளும் அவர்களுடனான பேட்டிகளும் கூடுதல் சிறப்பு. ஆதிமூலம், பாஸ்கரன், தட்சிணாமூர்த்தி, கிருஷ்ணமூர்த்தி, வரதராஜன், அச்சுதன் கூடலூர் (இவர்களில் பலரும் தனபாலின் மாணவர்கள். பாஸ்கரன் அவருடைய மருமகனும்கூட.) போன்றோரின் படைப்புகள் அக்கால வாசகர்களுக்குப் பரிச்சயமானவை. பிரக்ஞை இரண்டாவது இதழில் (நவம்பர் 1974) தனபால் (அப்போது அவர் சென்னைக் கலைக் கல்லூரியின் முதல்வர்) குறித்த ஒரு கட்டுரையை விஷ்வம் (வீராச்சாமி?) எழுதியுள்ளார். ’ஒரு சிற்பியின் சுயரிதை’யில் இல்லாத அவருடைய இன்னொரு ’தாயும் சேயும்’ சிற்பத்தின் பதிப்பு இவ்விதழில் உண்டு. ’மேற்கத்தியக் கலையின் பாதிப்பு என்று எதுவும் நமக்கு இல்லை. அதன் அறிமுகத்துக்கு முன்பே நமது ஓவியமும் சிற்பமும் உச்ச கட்டத்தை அடைந்திருந்தன. ஆயில், கான்வாஸ் போன்ற உத்திகளைத்தான் நாம் அவர்களிடமிருந்து கற்றோம்,’ என்ற அவருடைய பார்வை இக்கட்டுரையின் முக்கிய அம்சம். சில குறிப்பிட்ட இதழ்களை ஓவியர்களே வடிவமைத்ததும் உண்டு.

தம்முடைய மாணவப் பருவம், கலைக் கல்லூரி அடைந்த மாற்றங்கள், சக மாணவர்கள், தம்முடைய மாணவர்கள் என்று பல வரலாறுகளையும் தனபால் துல்லியமாகப் பதிவு செய்திருக்கிறார். கூடவே 1930கள் தொடங்கி 1960கள் வரையிலான சென்னை நகரின் வரலாறும் இணையாகப் பயணிக்கிறது. மயிலாப்பூர் கச்சேரி வீதியின் ட்ராம் வண்டி தொடங்கி, மயிலைக் கோயில்கள், எழும்பூர் புனித ஆண்ட்ரூஸ் சர்ச் வரை பரவியிருந்த கல்லூரியின் நிலம், இடையே பாலம் வந்து இரண்டையும் பிரித்த கதை என்று பலவும் விரவிக் கிடக்கின்றன இந்நூலில். பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியில் நிறுவப்பட்ட கல்லூரியில் தொடக்கத்தில் மர வேலை, பருத்தித் துணியில் அச்சிடப்படும் டிசைன்கள், கார்பெட் உருவாக்கம், நகை செய்தல், அலுமினியப் பாத்திரங்கள் செய்தல் என்று பெரிதும் கைவேலை தொடர்பான திறன்களே கற்பிக்கப்பட்டிருக்கின்றன. பிறகுதான் ஓவியம், சிற்பம், செராமிக் கலை என்பவை அறிமுகப்படுத்தப்பட்டன. அரசின் தொழில் துறையால் நிர்வகிப்பட்ட நிறுவனம் என்பதால் அது சார்ந்த நல்லவையும் கெட்டவையும் உண்டு.

தனபாலின் ஓவிய ஆர்வத்தைக் கண்ட அவருடைய தமிழாசிரியர் தமிழறிஞர் மயிலை சீனி. வேங்கடசாமிதான் அவரை ஓவியக் கல்லூரியில் சேரத் தூண்டியிருக்கிறார். கல்லூரியின் முதல் இந்திய முதல்வரான ராய் சவுத்ரியின் மாணவர் தனபால். கே.ஸி. எஸ். பணிக்கர் தனபாலின் வகுப்புத் தோழர். ஓவியப் பிரிவில் படித்த தனபாலை சிற்பக் கலைமீது கவனம் கொள்ள வைத்தவர் ராய் சவுத்ரி. முறையான பயிற்சியை ஓவியத்தில் பெற்றாலும் ராய் சவுத்ரி போன்றோரைக் கவனித்தே சிற்பக் கலையைக் கற்றிருக்கிறார் தனபால். காமராஜ், பெரியார், திரு.வி.க. ராதாகிருஷ்ணன், பாரதிதாசன் ஆகியோரின் சிலைகளைச் செய்திருக்கிறார். அவை தொடர்பான பல சுவாரசியமான தகவல்கள் நூலில் உண்டு. ப. ஜீவானந்தமும் பாரதிதாசனும் குடும்ப நண்பர்களாகவே இருந்திருக்கிறார்கள். அந்தக்கால அரசியல்வாதிகள் கலைஞர்களைக் கௌரவமாகவே நடத்தியிருக்கிறார்கள். கலையின் அருமையையும் உணர்ந்தே இருந்திருக்கிறார்கள். மிகக் கறாரான ஆளுமையான ராஜாஜி தொடர்பான நெகிழ்வான ஒரு சம்பவம் நூலில் உண்டு.

மிக முக்கியமாகக் குறிப்பிட வேண்டிய விஷயம் தனபாலுக்கு இசை, நடனம், நாடகம் ஆகியவற்றின் மீதிருந்த ஈர்ப்பும் பயிற்சியும். இசையின் அடிப்படைகளைக் கற்றிருக்கிறார். நாட்டிய நாடகங்களில் பங்கேற்றிருக்கிறார். இந்தக் கலைகளின் கலவை மிக அபூர்வமானது.

தனபாலை நான் சந்தித்தது கிடையாது. ஆனால் அவருக்கு நெருக்கமான இரண்டு ஆளுமைகள் தொடர்பான அனுபவங்கள் உண்டு. 1986-ல் நான் தொகுத்த லத்தீன் அமெரிக்கச் சிறுகதைகள் நூலின் அட்டைப் படத்துக்குத் தன் ஆந்தை ஓவியத்தைக் கொடுத்ததுடன் நூலின் தலைப்பை அடுத்த நாள் அதில் எழுதியும் கொண்டுவந்து அன்புடன் தந்தவர் ஆர்.பி. பாஸ்கரன். இது நிகழ உதவி செய்தவர் வசந்தகுமார். இன்னொரு ஆளுமை தனபாலின் மாணவரான க. மு. கோபால். எனக்குத் தூரத்து உறவினர். கலைஞனுக்கே உரிய சில விசேஷ குணங்கள் கொண்டவர். சேலத்தில் ஆர்ட் ஹவுஸ் என்ற பெயரில் திரைப்பட பேனர் வரையும் கூடம் ஒன்றை வைத்திருந்தார். வட்ட வடிவில் இருந்த ஓலைக் குடிசை அது. பலமுறை அதை சைக்கிளில் கடந்து போயிருக்கிறேன். மாலை வேளைகளில் வெளியே உட்கார்ந்திருப்பார். பேசியதில்லை. நான் அப்போது பள்ளிச் சிறுவன். சில ஆண்டுகள் கழித்து இயற்கை உணவு, உள்ளூர்ப் பதார்த்தங்கள் மட்டுமே விற்கும் ஒரு ஹோட்டலையும் சேலத்தில் நடத்தினார். அதுவும் ஓலை வேய்ந்த கூரையைக் கொண்டதுதான். நண்பர்களோடு அங்கு போன நினைவிருக்கிறது. ஈஞ்சம்பாக்கம் ஓவியர் கிராமத்தில் பின்னாளில் தங்கி உலோக சிற்பங்கள் செய்தார் என்று அறிந்தேன். தனபால் கோபாலைப் பற்றி இந்நூலில் எழுதியிருக்கிறார்.

நான் பெரும் மகிழ்ச்சியுடன் நண்பர்களுக்குப் பரிந்துரைக்கும் நூல் இது.

ஆர். சிவகுமார், மொழிபெயர்ப்பாளர்  (Krishnaprabu)

-----------------------------------------------------------------------------------------------------------------







Thursday, August 15, 2019

ஆகஸ்ட்-2019 ரா.கி.ர.டைம்ஸ் ரா.கி.ரங்கராஜன்





 



ஆகஸ்ட்-2019  வெளியீடு
ரா.கி.ர.டைம்ஸ்

ரா.கி.ரங்கராஜன் (கட்டுரைகள்)
பக்கங்கள் 216   விலை 200/-

ISBN 978-81-942051-0-4
-----------------------------------------------------------------------------------------------------------------
.ரா.கி.ர.டைம்ஸ்“ – ரா.கி.ரங்கராஜன் வெளியீடு-சிறுவாணி வாசகர் மையம், கோவை. வாசிப்பனுபவம்
----
பதிப்பகம்:- பவித்ரா பதிப்பகம், 24-5, சக்தி மஉறால், சின்னம்மாள் வீதி, கே.கே.புதூர் போஸ்ட், கோயம்புத்தூர்-641038 (siruvanivasagar@gmail.com)
-----
 குமுதத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் திரு ரா.கி.ரங்கராஜன் அவர்கள். நாற்பது ஆண்டுகள் பணிபுரிந்த அவர் ஏராளமான சிறுகதைகள், நாவல்கள், மொழிபெயர்ப்புகள் என்று எழுதியுள்ளார். டைம்ஸ் என்ற வாராந்திர செய்தித்தாளில் சுமார் 12 வருடங்கள் தொடர்ச்சியாக நாலு மூலைஎன்ற தலைப்பில் அரசியல், நாட்டு நடப்புகள், சினிமா, விளையாட்டு, நகைச்சுவைத் துணுக்குகள் போன்ற பல்வேறு விஷயங்கள் குறித்து அரைப்பக்கக் கட்டுரைகள், பெரிய கட்டுரைகள் என்று எழுதியுள்ளார். அண்ணா நகர் டைம்ஸ் என்ற பத்திரிகையில் வெளிவந்த நாலு மூலைஎன்ற தலைப்பிலான கட்டுரைகளைக் கதம்பமாகத் தொகுத்து ரா.கி.ர. டைம்ஸ்என்ற தலைப்பில் தற்போது கோவை, சிறுவாணி வாசகர் மையம் வெளியிட்டிருக்கிறது.

 ரா.கி.ர.வின் மூன்று நாவல்கள் திரைப்படமாகியுள்ளன. பல படைப்புக்கள் சின்னத்திரையிலும் வெளிவந்துள்ளன.. சுஜாதா இவரைப்பற்றி மிகப் பெருமையாகச் Disciplined, Beautiful writing என்று சொல்லி இவர் எழுத்தைப் பெருமைப்படுத்துகிறார். திரு.ரா.கி.ர.வின் திக்திக்கதைகள்என்று ஒரு தொகுப்பு மிகவும் ஸ்வாரஸ்யமானது. ஜனரஞ்சகமான எழுத்துக்குச் சொந்தக்காரரான இவர் எத்தனை விஷய ஞானம் உள்ளவர் என்பதை இவரது கதைகள் மூலமும், கட்டுரைகள் மூலமும் நாம் அறிந்து கொள்ளலாம்.

 குரங்கும் சாணக்கியனும் என்ற கட்டுரையில் குல்லா வியாபாரியைப் பற்றிய கதையைச் சிறுவர்களுக்குச் சொல்லும் இவர், அதன் மூலம் சாணக்கியனின் அரசியல் வித்தகத்தை அவரது வரிகள் மூலம் அழகாக விவரிக்கிறார்.

சாணக்கிய நீதி இதோ-
 அரசர்கள் எளிய குடிமகன்போல் வாழ்கிற தேசங்களில் குடிமக்கள் அரசர்களைப் போல் வாழ்வார்கள். தோல்வியின் இன்னொரு பெயர் பொறாமை ஆணவம் மிக்கவரை மரியாதை காட்டி வெற்றி கொள்ளலாம். முட்டாள்களை அவர்களுடைய முட்டாள்தனத்தைப் பொருட்படுத்தாமல் இருப்பதன் மூலம் வெற்றி கொள்ளலாம். அறிவாளியை உண்மையின் மூலம் வெற்றி கொள்ளலாம் ஒரு வேலையைச் செய்யத் தொடங்கிய பிறகு தயக்கத்தாலோ தோல்வி பயத்தாலோ அதை நிறுத்தாதீர்கள். விஷமில்லாத பாம்பானாலும் சீறுவது அவசியம். வளைந்து கொடுத்தால் வீழ்ச்சிகளைத் தவிர்க்கலாம். எப்போதும் நிமிர்ந்தே நிற்பது மரங்களுக்கும் ஆபத்து. மனிதர்களுக்கும் ஆபத்து. உங்கள் ரகசியங்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ளாதீர்கள். உங்களாலேயே அதை ரகசியமாக வைத்துக் கொள்ள முடியாதபோது மற்றவர்களாலும் முடியாது.

 அர்த்த சாஸ்திரம் என்ற அறிவுநூலை இயற்றிய மேதை பிறக்கும்போதே முப்பத்திரண்டு பற்களோடு பிறந்தவராம். கௌடில்யன், விஷ்ணுகுப்தன் என்ற பெயர்களும் இவருக்கு உண்டு. நந்த வம்சத்தை ஆண்ட அரசனால் அவமதிக்கப்பட்டபோது தன் குடுமியை அவிழ்த்துக் கொண்டார். இவனை அழிக்கும்வரை அவிழ்ந்த குடுமியை முடிக்க மாட்டேன் என்று சபதம் செய்து, சந்திரகுப்தனை அரசனாக்கிப் பழி தீர்த்துக் கொண்டார் என்பது வரலாறு.

 வாழ்க்கை வரலாறுகள் வீணா? என்ற தலைப்பில் இட்லிதான் என்னை உலகை வலம் வரச் செய்த்து. என் வாழ்க்கையில் மறுமலர்ச்சி ஏற்படுத்திய இட்லியை நான் எவ்வாறு மறக்க முடியும்என்று நூலாசிரியர் காமத் எழுதிய இட்லி ஆர்கிட் மன உறுதிஎன்ற விசித்திரமான தலைப்பைத் தாங்கிய புத்தக்கத்தைப்பற்றிய அறிமுகம் இந்நூலில் நமக்குக் கிடைக்கிறது. இந்தியாவெங்கும், உலகம் முழுவதிலும் கிட்டத்தட்ட நானூறு ரெஸ்ட்டாரென்ட்களையும் மூன்று நான்கு நட்சத்திர உணவுவிடுதிகளையும் வெற்றிகரமாக நடத்தும் அதிபர் காமத்தின் சொந்தக் கதையை இந்தப் புத்தகம் சிறப்பாக விவரிக்கிறது.

 தத்தாத்ரேயரை நாம் அறிவோமா? உறிந்து மதத்தின் பெருமையை நிலைநாட்டிய மகான்களில் ஒருவர் இவர். இவருக்கு இந்தியாவில் பல இடங்களில் கோயில்கள் உள்ளன. மூன்று தலைகளும் நான்கு கைகளும் கொண்டவராக அவருடைய திருவுருவம் காட்சி தருகிறது. சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய மூவரையும் குறிப்பிடுவதாகவும், கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் என்ற மூன்றைக் குறிக்கின்றன என்றும் கருத்து.
இருபத்து நான்கு குருமார்கள் என்ற அவருடைய உபதேசம் மிகவும் பிரசித்தி பெற்றது என்று அறிகிறோம். பூமி, தண்ணீர், அக்னி, காற்று, பிரபஞ்சம், நிலா, சூரியன், புறாக் கூட்டம், மலைப்பாம்பு, சமுத்திரம், விட்டில் பூச்சி, வண்டு, தேனீ, காட்டு யானை, மான், மீன், வேசி, சின்னப்பறவை, குழந்தை, இளம் பெண், “பாம்பு, அம்பு, சிலந்திப் பூச்சி, ஒரு புழுஇப்படியாக்க் கூறி ஒவ்வொன்றுக்கும் அளித்திருக்கும் காரண காரியங்களுடன் கூடிய விளக்கம் நம்மை மெய் சிலிர்க்க வைக்கிறது. இப்படியெல்லாம் நாம் நினைத்துப் பார்த்திருக்கிறோமா என்று மனம் எண்ணுகையில் வெட்கமுறுகிறது. இந்த உலகில் ஞானிகள் எப்படிஎப்படியெல்லாம் உருவாகியிருக்கிறார்கள் என்பதை நினைக்கும்போது நாம் ஒன்றுமேயில்லை என்று சிறுத்துப் போகிறோம்.

எனக்குத் தமிழ் தெரியாது, வித்வான்களும் மனிதர்கள்தான், முன் தூங்கி முன் எழுவது எப்படி? அன்பு கொல்லுமா? தேவை பழி போட ஒரு ஆள், சில நேரங்களில் சில தாத்தாக்கள், அரைக்கால் அர்ச்சுனன், டெல்லியில் சில புத்திசாலிகள், ஒழிக உம்மணாம் மூ!ஞ்சிகள், மனிதனும் மசாலா தோசையும், புள்ளோசை என்று விதவிதமான தலைப்புகளில் இந்தப் புத்தகத்தில் இருக்கும் கட்டுரைகள் அந்தந்தத் தலைப்புகளுக்காகவே உள்ளே செல்லும் ஆர்வத்தைத் தூண்டி, என்னதான் சொல்கிறார் பார்ப்போம் என்று படிக்க வைத்து விடுகிறது.

எல்லாவற்றுக்கும் மேலாக எழுத்தாளர் சுஜாதா அவர்களைப் பற்றிச் சொல்லியுள்ள இரண்டு கட்டுரைகளும் இப்புத்தகத்திற்கு சிகரம் வைத்தாற்போல் அமைந்துள்ளன.
கிருஷ்ணதேவராயரைப்பற்றிய கதையை இவரை எழுத வைத்தது, அவரை அரசன் என்பதை விட சாதாரண மனிதன் என்று வரித்து எழுதுங்கள்..அதாவது அவனுக்கு முதுகு அரித்தது, சொரிந்து கொண்டான் என்று எழுதுங்கள் என்று சுஜாதா சொல்லியது….அந்த நாவலை எழுதி முடித்து, முழுக்கப் படித்து …“ராட்சஸன்யா நீஎன்று பாராட்டியது….கறுப்பு, சிவப்பு, வெளுப்பு என்ற தலைப்பில் சிப்பாய்க் கலகம் என்று சொல்லப்பட்ட முதல் இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றினை சுஜாதா எழுத் தலைப்பட்டு அது மூன்றே வாரங்களில் குமுதத்தில் நிறுத்தப்பட்டது, ஒரு குறிப்பிட்ட வாரக் குமுத்தை சுஜாதா தயாரித்தது என்று சுவாரஸ்யமான விஷயங்களை உள்ளடக்கிய இந்தக் கட்டுரையோடு இந்தப் புத்தகம் முடிவடையும்போது, அத்தோடு ஒதுக்கி வைத்து விடுவோம் என்று அலமாரியில் அடுக்காமல்அவ்வப்போது எடுத்துப் படிப்போம் என்று அருகிலேயே வைத்துக் கொள்ளத் தூண்டுகிறது.

வாசிப்புப் பழக்கத்தை மேம்படுத்துவதற்காக ஏற்படுத்தப்பட்ட கோவை சிறுவாணி வாசகர் மையத்தின் மாதம் ஒரு நூல்திட்டத்தின் கீழ் வெளியாகியுள்ள திரு  ரா.கி.ரங்கராஜனின் இந்த ரா.கி.ர.டைம்ஸ்என்ற இந்தப் புத்தகம் வாசிப்பை விரும்பும் அன்பர்கள் அல்லாது அனைத்துத் தரப்பினரும் படித்து அறிய வேண்டிய முக்கியமான, தவிர்க்க முடியாத, தவிர்க்கக் கூடாத புத்தகம் என்று சொல்வதையே விரும்புகிறேன்.

கோவை, சிறுவாணி வாசகர் மையம் வெளியிடும் புத்தகங்கள் ஒவ்வொன்றும் அரிய பொக்கிஷம். அதிலும் வாங்காமல் விட்டுப் போன அசோகமித்திரனின் புத்தகமும் பூங்கொத்தாய் இப்போது என் கையில். அவர்களின் இலக்கியப் பணி மெச்சத் தகுந்தது. தொடர்ந்து கை கொடுக்க வேண்டியது நம் கடமை...

நன்றி-உஷாதீபன்
--------------------------------------------------------------------------------------------------------------------------
navina virutcham Azagiya singar
-------------------------------------------------------------------------------------------------

கோவையின் மூத்த வாசகர் 
"விஜயா பதிப்பகம்" திரு.வேலாயுதம் ஐயா 
கைகளில் "ரா.கி.ர.டைம்ஸ்".

---------------------------------------------------------------------------------------------------------------------------


ஓம்சக்தி இணைஆசிரியர் 
திரு.பெ.சிதம்பரநாதன் அவர்களிடம் 
சிறுவாணி வெளியீடுகள்.
----------------------------------------------------------------------------------------------------------------------------------



      அழகான ரா.கி.ர.டைம்ஸ் புத்தகம்  கிடைக்கப் பெற்றேன். காலையில் உஷாதீபன் அவர்களின் குறிப்பை வாசித்ததிலிருந்து கொரியர்க்காரர் எப்போ வருவாரோ என ஆவலோடு காத்திருந்தேன். 
நன்றி.  திரு.Tirumalaiyappan 
-------------------------------------------------------------------------------
Books to be read are piling up on a stool beside my bed,,, Life goes hectic,,, Tiring body slows down the activity of the mind,,, The routine of monotonous and tedious travelling back home from office was broken y’day as I was going to a swanky pub to meet my old friends (of course, it does not mean that friends are old),, It was nice talking to them all,,, Life requires such breaks from routine mundane activities to have a fresh perspective on things,,, Similarly, if you are a reader, you have to change the genre of books that you have been reading once in a while,,, 

Recently I came across two such refreshing books,,, One is a Tamil book,  Ra.Ki.Ra Times, anthology of writings by legendary Ra.Ki.Rangarajan, a man who epitomises the middle alphabet of Aa.Ra.Su pathilgal (AaRaSu Answers) in Kumudam magazine,,, I have subscribed to Siruvani Vasagar Mayyam (Siruvani Readers Group) and I am getting  interesting, thoroughly readable and carefully chosen for publication books from them,,,  I would recommend this group for people who are interested in reading quality Tamil writings,,,  Other one is Word Play by Gyles Brandreth, which is “a cornucopia of puns, anagrams and other curiosities of the English language” as the wrapper of that book delineates,,, Both of these books are, I would say that, for light reading,,, Still you will be absorbed into them,,, 

Two jokes I read from those books and enjoyed much are,,,

A wife complains to her professor husband about the offensive habit of their daughter who has always been singing degraded and vulgar movie songs,,, Professor husband meets his daughter’s school teacher and complains about it,,, She takes him to the head-mistress,,, Having heard of his whining, head-mistress promises to set up a committee with that professor as its head to advise the parents to do something to get rid of this disgusting habit,,, Professor, being happy at his new role as the chairperson of the committee, starts car and drives it away singing gleefully in loud voice “Why this kolaveri, kolaveri, kolaveri di !!!”,,, 
(From Ra.Ki.Ra Times by Ra.Ki.Rangarajan),,,

A king, getting thoroughly bored of his punster jester ordains to execute him immediately and bans the usage of puns in his kingdom with hanging as the punishment for the violators of this new law. The punster is being dragged to gallows,,, But king suddenly at the surge of sympathy for his old pal decides to pardon him but with a condition that he should never pun again in his life,,, A message with this regards has been sent out and the hanging of the punster is being stopped at right moment,,, Hearing this, the punster exhales with the following, uncontrollable words - “No noose is good news”,,,  Well, old habits die hard and that poor guy is hanged,,, Story does not end here,, His brother is being asked to be an undertaker and so he is carting the coffin to the burial ground,,, On the way, the coffin falls from the cart due to rough road,,, That undertaker brother of deceased punster involuntarily utters that “We will have to rehearse that”,,, And They hang him too,,,
(From Word Play by Gyles Brandreth)

Ganesan krishnamurthy
31.08.2019
---------------------------------------------------------------------------

அட!

நான் சிறுவாணியை வியக்கிறேன்...அடுத்து என்ன செய் வார்கள் என்றே தெரியாமல் "சடக்" இன்ப அதிர்ச்சி கொடுப்பார்கள்.
இந்த மாத இன்ப அதிர்ச்சி...சுஜாதாவுக்குச் சவால் விடும் (இவர்தான் சீனியராக இருந்தாலும்).. அலட்சிய எழுத்துப்பாணி கொண்ட
ரா.கி. ரங்கராஜன் படைப்பு.

அட்டையின் கவர்ச்சியில் ஆரம்பிக்கிறது விறுவிறுப்பு.(ஜீவாவின் ஜீவோவியம்)

ஹென்றி ஷாயர் எழுதிய PAPILLON ஐ தமிழில் மொழிபெயர்த்து பட்டாம்பூச்சியைப் பறக்கவிட்டவர் ரா.கி.ரா. அந்தப்புத்தகத்தைப் படித்தேன்.. படிக்கிறேன். படிப்பேன்.. படித்துக்கொண்டேயிருப்பேன்..
என் வயதுக்காரர்கள் எல்லாருமே இதையேதான் சொல்வார்கள்.. மொழிப்பெயர்ப்பு  (என்றே)தெரியாத மொழிபெயர்ப்பு.

நான் அம்பத்தூர் என்பதால். அண்ணாநகர் டைம்ஸ் அவ்வப்போது மிக்சரில் முந்திரிபோல  சுவைத்திருக்கிறேன். . .
இப்போது சிறுவாணியால் கிடைத்திருப்பது முழுக்கமுழுக்க மொறு மொறு வறுத்த முந்திரி.


சுவையுங்களேன்....அடுத்தவர்களுக்கும் சிபாரிசு செய்து சிறுவாணியில் உறுப்பினராகி..... சுவைக்கச்செய்யுங்களேன்.....

நன்றி;- திரு.Saptharishi Lasara 

----------------------------------------------------------------------------









Tuesday, August 13, 2019

The Hindu 16.July 2019 /வாழ்த்துகள்.

The Hindu
16.July 2019

 


------------------------------------------------------------------------------------------------------------------
வறண்டு, எதிர்காலம் இருள் மூடி இருக்கிறதோ என பதிப்பகத்தார் வருத்தமுற்று இருக்கும்  ஒரு சூழலில்,  வணிக நோக்கம் சற்றுமின்றி சிறந்த நூல்களை வாசகர்களிடம் கொண்டு சேர்த்து எழுத்தாளர், வாசகர், பதிப்பாளர் ஆகிய மூன்று புள்ளிகளையும் இணைக்கும் ஒரு பாலமாக சிறுவாணி வாசகர் மையம் இயங்கி வருகிறது. 


2017ஆம் ஆண்டு உலக புத்தக தினத்தன்று ஏப்ரல் 23 இல் துவங்கப்பட்ட இவ்வியக்கம் இரண்டு ஆண்டுகளை கடந்து வெற்றிகரமாக 350 உறுப்பினர்களுக்கும் மேலாக பங்கேற்கும் வளம்மிக்க இயக்கமாக மூன்றாவது ஆண்டைத் துவக்கி உள்ளது.

இவர்களது range வியக்க வைக்கும் ஒன்று. பத்தொன்பதாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட நூல்களிலிருந்து 21ம் நூற்றாண்டின் நவீன எழுத்தாளர்கள் நூல்கள் வரை இவர்களது வெளியீட்டில் வந்துள்ளன.

மூன்றாவது வருடத்தின் துவக்கத்தில்தான்  இருக்கிறார்கள் .இது ஒரு மிக இளைய இயக்கம். அதற்குள்ளாகவே நாவல்கள், சிறுகதைகள், விமர்சனங்கள், பயண இலக்கியம், பக்தி இலக்கியம், தீண்டாமை ஒழிப்பு போன்ற மறுமலர்ச்சிக் கால இலக்கியம் முதலிய அனைத்து வகைகளிலிருந்தும் தரம் மிக்க நூல்களை இவர்கள் தம் உறுப்பினர்களுக்கு வழங்கி உள்ளார்கள்.

ஒருபுறம் பாரதி, தாகூர், இராய.சொ, டி.கே.சி.  லா. ச .ராமாமிர்தம்,
க.நா.சு, அசோகமித்திரன் போன்ற மூத்த எழுத்தாளர்கள் நூல்கள் என்றால் மறுபுறம் நாஞ்சில் நாடன், ஜெயமோகன், சாரு நிவேதிதா, எம்.கோபாலகிருஷ்ணன்,கண்மணி குணசேகரன்,சு.வேணுகோபால் முதலிய புகழ் பெற்ற நவீன இலக்கியத்தில் பெரும் பங்கு ஆற்றி வருபவர்களின் நூல்கள்; மேலும் இளைய தலைமுறையைச் சேர்ந்த  கீரனூர் ஜாகீர் ராஜா,சுநில்கிருஷ்ணன், ஜி. ஏ. பிரபா, வே முத்துக்குமார், ரமேஷ் கல்யாண் முதலிய நவீன contemporary எழுத்தாளர்களது நூல்கள் இவர்களிடமிருந்து வந்துள்ளன. 

இவர்கள் பணி மேலும் சிறக்க வேண்டும்.. திரு பிரகாஷ் GR, திருமதி சுபாஷிணி மற்றும் இம்மையத்தின் இருப்புக்கும், வளர்ச்சிக்குத் துணை நிற்பவர்கள், இவர்கள் ஊக்கத்துக்குக் காரணமாக உள்ள உறுப்பினர்கள், எழுத்தாளர்கள் அனைவருக்கும் நல் வாழ்த்துகள்.

திரு.வ.ஸ்ரீநிவாசன் 
6/8/2019
--------------------------------------------------------------------------------------------------------------------

சிறுவாணியின் பெருமைகள்!

இந்த மாத ஜீவாவின் அட்டையைப்பார்த்ததும் ஏற்பட்ட குஷி என்னை இப்படி எழுதத் தூண்டிவிட்டது.
எண்ணிப்பார்க்கிறேன்..ஆஹா!.... புத்தகம் படிக்கவைக்க  மாதாமாதம் வீட்டிற்கே அனுப்பிவைக்கும் சிறுவாணி....அப்படி அனுப்பிவைத்த புத்தகங்கள்...சுவாரஸ்யமாகவும்.....
இலக்கியத்தரமாகவும்.. 'நவீன இலக்கியத்தரமாகவும்'.... வெவ்வேறு தலைமுறை எழுத்தாளர்களாகவும் அமையும் படி பார்த்துக்கொள்வதன்... உழைப்புத் தரத்தின் பெயரே சிறுவாணி வாசகர் மையம்.

100 வருடங்களுக்கு முந்தைய டி.கே.சி...  தாகூர்..தேசியகவி பற்றி பாரதி.தேசிய கவி.....லா.ச.ரா....வின் விளிம்பில்..
தக்கர்பாபா..கேள்வி மட்டுமே பட்டிருப்போம்...தமிழின் முதல் வெளியீடாய்....
க.நா சு.வின் ஆட்கொல்லி ....
அசோகமித்திரன் புத்தகத்துக்கு... ஒரு சிறப்பு உண்டு. இதுவே அவரின் இறுதியாய் வெளிவந்த புத்தகம்...இளசை மணியன்.. நாஞ்சில் நாடன்...வ.ஸ்ரீ. சார் போன்ற மூத்த எழுத்தாளர்களின் படைப்புகள்.....

அடுத்த தலைமுறையான சு. வேணுகோபால் ..எம்.கோபால கிருஷ்ணன், கண்மணிகுணசேகரன்....
அதற்கடுத்ததாக.....ஜி.ஏ.பிரபா...வே.முத்துக்குமார்...
பிரபல எழுத்தாளர்கள் வரிசையில் ஜெயமோகன்..சாரு நிவேதிதா.....
இளம் எழுத்தாளரில் ரமேஷ் கல்யாண்...இதிலும் ஒருபுதுமை ரமேஷின் முதல் சிறுகதைத் தொகுப்பு... ( ப்ரகாஷின் ரிஸ்கிற்கு செம பலன்...வாழ்த்துக்கள்)...
பிரகாஷின்...இலக்கிய ரசனையும்...அவரின் வழிகாட்டிகள்..சுபாஷிணி திருமலை மலை..மேடம்..வ.ஸ்ரீநிவாசன்,நாஞ்சில் நாடன் ஐயாக்களின்..ஆலோசனைகள்.....ஓவியத்தில் இலக்கியம்படைத்துக்கொண்டிருக்கும் நம் ஜீவாவின்....தூரிகைத் துணை...

350....350.... 350..( உறுப்பினர்களுக்கு மரியாதை மும்முறை)...உறுப்பினர்களின் வலுவான ஆதரவு...அவர்கள் உடனடியாக படித்துவிட்டு ...சட்..விமர்சனம் செய்யும்..வாசகர்கள்...மேலும் பல விதங்களில் ஆதரவுக்காட்டும்.....கோவைவாசிகள்.....இருக்கும் வரை......
பிரகாஷின் உழைப்பின் பலமும்....உறுப்பினர் சேர்க்கையும் கூடிக்கொண்டே போகும் என்பது விதி!
நான் கோவை புத்தகத் திருவிழாவில் இரண்டுநாட்களில்.. தினம் 12 மணி நேரமிருந்து பிரகாஷின் பேய்த்தனமான உழைப்பை வியந்தேன்... அதற்குப்பலனாக..பல பிரபலங்கள் அவர் டேபிளுக்கு வந்து..கௌரவித்ததில் எனக்கு மகிழ்ச்சி!

இந்த இரண்டுவாரங்களில்....'இத்தனை' உறுப்பினர்களை சேர்க்கவேண்டும் என்கிற வெறியை..போனவருடத்தின் புத்தகக்கண்காட்சி சேர்ப்பைவிட அதிகப் பேர்களை சேர்த்தது அவரின் உழைப்பிற்கு கிடைத்த பரிசு.

சிறுவாணிக்கு அடுத்தவருடம் 500 பேர் சேர்ந்தால்... மொட்டை அடிப்பதாக வேண்டிக்கொண்டால் கூடத் தப்பில்லை என்று சில சமயங்களில்  தோன்றுவது கூட பிரகாஷின் லட்சியத்துக்கு செய்யும் மரியாதைதான்... அவ்வளவு WORTH!
நன்றி Saptharishi Lasara   6/8/2019

9 ஆம் வருடத்தில் (மாதம் ஒரு நூல்) இதுவரையிலான புத்தகங்கள்.2025-2026

  சிறுவாணி வாசகர் மையம் 9 ஆம் வருடத்தில் (மாதம் ஒரு நூல்)  உறுப்பினர்களுக்கு இதுவரை அனுப்பியுள்ள புத்தகங்கள்.