Thursday, October 25, 2018

"விளிம்பில்".-லா.ச. ரா-- மே-2017(2)



மே-2017
விளிம்பில் 
லா.ச. ராமாமிர்தம்

சுயசரித நவீனம்

பக்கங்கள் 128   விலை 100 /-
ISBN 978-81-940780-1-2
***************************************************************************************************************************

Suresh Venkatadri
May 27, 2017

"காரியங்களை அரைகுறையாக விட்டுவிட்டுப் போகிறேன் என்று கவலைப்பட்டு பிரயோசனமில்லை.காரியங்கள் எப்போதும் அரை குறையாகத்தானிற்கும்.விட்ட இடத்திலிருந்து பின்னவர் தொட்டுத் தொடரத்தான் காரியங்கள்.காரியம் என்று ஒன்று தனியா? வாழ்வதைவிடக் காரியம் எது? ஏது?"
--லா.சா. ரா. "விளிம்பில்".

கோவை சிறுவாணி வாசகர் மையம் வெளியிட்டுள்ள லா.சா.ராவின் விளிம்பில் நூல் கிடைக்கப்பெற்றேன். திறந்தவுடனேயே ஒரு முத்து.
*********************************************************************************************************************************
விளிம்பில்
- - - - - - -
நமது சிறுவாணி வாசகர் மையத்தின் இரண்டாவது வெளியீடு.
லா.ச.ராமாமிருதம் என்ற தபஸ்வி, தமது நிஷ்டை கலையும் வேளைகளில் உணர்வு
களை எழுத்தில் கோர்க்கும் நவரத்தின மாலைகளில் ஒன்று.
லா.ச.ரா. அவர்களைப் பல ஆண்டுகளுக்கு முன்பு தென்காசி பஞ்சவடி இல்லத்தில் 

தரிசித்திருக்கிறேன். ( அன்றைக்கு இதை எழுதியிருந்தால் 'சந்தித்திருக்கிறேன்' என்று
குறிப்பிட்டிருப்பேன் ! )
அந்த நேரம் நான் 'ஜனனி' மட்டும் வாசித்திருந்தேன். அப்போது எனக்கிருந்த ரசனை
யின் ரேஞ்சுக்கு ( சப்தரிஷி சொல்வது போல ) ஆகாசத்தை ஆலிங்கனம் செய்ய
முடியவில்லை.
அதன்பின் என் அருமைச் சித்தப்பா தீப. நடராஜன் அவர்களின் வழிகாட்டலாலும் தூண்
டுதலாலும் எனது வாசிப்பு, ரசனையின் அகலமும் ஆழமும் அதிகரித்து, எனக்கும் 

வயதேறி, "மிக ஓர் காலம் இனி இல்லை" என்ற விளிம்பில் இருக்கும் இன்றைய நிலையில்,லா.ச.ரா.வைத் தொட்டுச் சற்று உணரமுடிகிறது.
"ரமண மகரிஷியையோ, பகவான் ராம கிருஷ்ணரையோ, சங்கீத மும்மூர்த்திகளை
யோ, இவர்கள் வகுத்த பாதையை ஆய நாம் இன்னும் தகுதி பெறவில்லை"
என்றும்,
"எல்லாப் பாதைகளுமை ரோமுக்கு நடத்திச் செல்கின்றன என்று மொழி. பாதைகள்
ரோமாபுரியைக் காட்டலாம். ஆனால் யாருமே ரோமாபுரியைச் சேரவில்லை.
( இந்தப் பத்தியை முழுவதும் வாசியுங்கள்)
என்றும், தத்துவமாகட்டும்,
"வயது ஏறஏற எங்களிடையே பேச்சின்  அடிக்கடி குறைந்து விட்டது"  எனவும்,
"எங்களையும் அறியாமல் எங்களிடையே  நேரும் அபூர்வமான சமய இளக்கங்களில்
பலகணிகள் அபூர்வமாய்த் திறப்பதுண்டு"  எனவும்,
உ றவியல் ஆகட்டும்,  எண்ணத்தைச் செதுக்கி ஏட்டில் வடிக்கும்
வல்லமையில் சிறந்தவரின் இந்த நன்னூலைத் தந்தமைக்கு நன்றி.


நன்றி திரு.கி.ரா.திருமலையப்பன்

-----------------------------------------------------------------------------------------------------------------------------
சிறுவாணி வாசகர் மையத்தின் "மாதம் ஒரு நூல்" திட்டத்தில்....

(மே-2017)

புத்தகம் 2. 
"விளிம்பில்"– லா. ச. ராமாமிருதம்

 
 ’விளிம்பில்’   லா.ச.ரா சொல்ல,  அவர் மகன் லா.ச.ரா.சப்தரிஷி, தான் எழுதியதாகக் குறிப்பிடுகிறார். புத்தகத்தின் சில பகுதிகளையும் மீண்டும் சுருக்கமாகச்  சொல்கிறார் ‘தந்தை போற்றுதும்’ என்ற கடைசி கட்டுரையில்! (“இந்த பதினாறு வருடங்களில், ஐந்து முறை படித்திருப்பேன். இருந்தாலும், என்னுரைக்காக மறு, மறு, மறு, மறு, மறு, மறு வாசிப்பு.  புதிதாகப் புரிந்தது. புரிந்து கொண்டேயிருக்கிறது.” - லா. ச .ரா. சப்தரிஷி.)

தனது எண்பதாவது வயது வரை, தன் அனுபவங்கள், சிந்தனைகள், மனைவியின் எண்ண ஓட்டங்கள்,மனதில் பதிந்து போன சில  நிகழ்வுகள், தத்துவார்த்த விவாதங்கள், "அவள்"அருளும் அவர் சிலிர்ப்பும்  எனத் தன் சுயவரலாற்றுச் சுருக்கத்தினை, சொற்ச்சித்திரமாக வரைந்துள்ளார் லா. ச .ரா.  

விளிம்பில்  நிற்கும் வயாதானவர்களின்  நியாயங்களை, எல்லா வயதினரும்  புரிந்துகொள்ளும்படி எழுதியிருப்பது சிறப்பு.

லாசரா தன் வீடு பற்றியும், தன் டாக்டர் பற்றியும் கூறுகிறார் –

‘புது வீடு கட்டும் முயற்சி -மூன்று வருடங்களாக.  பஞ்சாயத்து ஆபீசில்  மேஜைக்கு மேஜை  லஞ்சம்  கொடுத்தும்  காரியம் சித்தியாகவில்லை. கோப்புகள் நகர்வதுடன் சரி’. 

வீட்டை விற்று விட நினைக்கிறார் லா ச ரா - அப்போது, ‘உங்களுக்கென்ன,  உங்கள் மேல் ஒரு சொட்டு  மழைவிழாமல் பார்த்துக் கொள்வது எங்கள் பொறுப்பு’. – என்கிறார்கள் மகன்கள். வீட்டை விற்றால் திரும்ப இடம் கிடைக்காது என்பது அவர்கள் வாதம்.

குடும்ப டாக்டர், “எல்லாம் சாப்பிட வேண்டியதுதான்,  பட வேண்டியதுதான்.  இல்லாட்டி நான் பிழைக்கிறது எப்படி?  மரணம் ஒருநாள் வருவது எப்படி? நான்தான் சொன்னேனே, we have no choice in life Sir, நீங்க எழுத்தாளர்;  Science, Religion, Art, Philosophy, கீதை  எல்லாம் சொல்ற ஒரே message என்ன தெரியுமா?  “ CARRY ON! “ அதுதான் டைம்லெஸ்ஸா  நடந்துட்டிருக்குது. அதுதான் Reality.”  என்று சொல்வதாக எழுதுகிறார்! 

“நீங்கள் என்ன கிருஷ்ண பரமாத்மான்னு உங்களுக்குள்ளே நெனைப்பா? நீங்கள் சாப்பிட்டால் மத்தவா  வயிறும்  நெறைஞ்ச  மாதிரின்னு? அரைச்சவாளுக்கு ஆட்டுக்கல், வார்த்தவாளுக்கு தோசைக்கல் என்கிற 
கதையாய்ப் போச்சே! இப்படி உங்களுக்குப் பசிச்சால், அதிகப் பசியும் ஒரு வியாதிதான்,  டாக்டரைக்  கேளுங்கோ!”

கிராமத்தில், “ என்ன குருட்டு யோஜனை?  புது வேஷ்டியில் நெய்க்கறை பண்ணிண்டாச்சா?  நெருப்புப் பத்திக்க  எந்நேரம் ஆகும்?  வேளையில்லே பொழுதில்லே அதென்ன  வெட்டி முறிக்கிற  யோசனையோ?”  – அவர் மனைவி!

”சில விஷயங்களில் அவளுடைய ஞாபக சக்தி அபாரமாயிருக்கிறது. காலங்களின் மூலை  முடுக்குகளிலிருந்து அவள் சம்பவங்களைச் சொல்லும்போது, சற்றுஆச்சர்யம், கொஞ்சம் வேடிக்கை, ஒரு தினுசான சந்தோஷமாயிருக்கிறது. கிராமப் பண்பு பற்றி ஒரு தனி வரலாறே எழுதுமளவுக்கு, அவளிடம் அத்தனை  நினைவுகள், விஷயங்கள் மண்டிக் கிடக்கின்றன என்று இப்போதுதான் அறிகிறேன் “ என்கிறார். கிராமத்தில் தாத்தா, பாட்டியுடன் இருந்த நாட்களையும், பெருமாள் கோயில் சர்க்கரைப் பொங்கல், புளியஞ்சாதம், திதியோன்னம் என அவர் மனைவி விவரிப்பதைச் சொல்லி, வியந்து போகிறார்! 

புத்தகம் முழுவதும் தனக்கும் தன் மனைவிக்கும் உள்ள அந்த பந்தத்தை, மையச்சரடாய்க் கொண்டு, மற்ற நிகழ்வுகளைப் பூக்களாய் அதில் தொடுத்துச் செல்கிறார் லாசரா –
வலிமையான, சுவாரஸ்யம் குன்றாத விவரணைகள்!

லால்குடி பெருந்திரு அம்பாளைத் தெய்வமாக, தன் பெயர்த்தியாக, மனைவியாக – இல்லை, பெண்மையை  அம்பாளாகக்  கொண்டாடுகிறார். அம்பாள் சன்னதியில், அபிஷேகம், அலங்காரம், ஸதாபிஷேகத்தில் தாலி 
முடிவது, குழந்தைகள் உடன் நிற்பது எல்லாம் அவரது விவரணையில்  காட்சிகளாய்  மனதில்  விரிகின்றன!

”விழுதுகள்தாம் எங்கள் சொத்து.
அதனினும் பெரிது
உனக்கு நான் எனக்கு நீ.”
என்று முடிக்கிறார்!

விளிம்புகளின் சில முத்துச் சிதறல்கள் !

“அந்தப் பிராமணனுக்கு அதிலெல்லாம் ஆசை கிடையாது. அதுக்காக பொம்மனாட்டி நான் அவரைக் கையைப் பிடிச்சு இழுக்க முடியுமா?”

”….ஆயுசு கழியறதா, கரையறதா உங்களுக்கு வித்தியாசம் தெரிந்தால் சொல்லுங்களேன், எழுத்தாளராச்சே!”

“ மரணத்தை சந்தோஷத்துடன் வரவேற்கும் சமயங்களும் உளவோ? “

“ வயது ஏற ஏற எங்களிடையே பேச்சின்  அடிக்கடி குறைந்து விட்டது.”

“ வயது ஏற ஏற குமிழிகள் ஒவ்வொன்றாய்  வெடிக்கும்போது திகைப்பாயிருக்கிறது”.

ஆகவே, எனக்கும் தொந்தரவு இல்லாமல், பிறருக்கும் அலுப்புத் தட்டாமல், கெளரவமாய்க் கிளம்பி விட வேண்டியதுதான்!

“ ஆமாம். மூச்சுப் போனபின் கட்டைதானே? எரியாதா? துணைக்கு சந்தனக்கட்டை கேட்கறதா? “

“ உனக்கு நான். எனக்கு நீ – இது காதல் அல்ல.  சேர்ந்து வாழும் ஏற்பாடு.  இதற்குப் படிந்து அதை  ஒழுங்காய்  நிறைவேற்றத்தான் கல்யாணம். காதல் கண்டு கல்யாணத்தை விட,   கல்யாணம்  கண்டு  வளர்க்கும்  காதல்தான்  பெரிசுன்னு  தெரியலையா? “

லா ச ரா என்னும் படைப்பாளியின் எண்ண ஓட்டங்களை, அவரது சொற்களிலேயே, அவரது வாழ்க்கைச் 
சம்பவங்களுடன் இணைத்து, வாசிப்பது ஒரு புது அனுபவமாகஇருக்கிறது. மீண்டும், மீண்டும்  படிக்கத்  தூண்டுகிறது.

"A ‘MUST READ’ BOOK FOR EVERY ONE "
(டாக்டர் ஜெ.பாஸ்கரன் விமர்சனக் குறிப்பிலிருந்து....)

பக்கங்கள் 128
விலை ரூ 100/-

#விளிம்பில்
#சிறுவாணி_வாசகர்_மையம்
#பவித்ரா_பதிப்பகம்
#Pavithra_pathippagam
#siruvani_vasagar_maiyam

Gpay
8778924880

No comments:

சிறுவாணி வாசகர் மையம் பற்றி... 2017-2025 ஒன்பதாம் ஆண்டில்....

 சிறுவாணி வாசகர் மையம் பற்றி..... கோவையில் சிறுவாணி வாசகர் மையம் 2017 உலகப் புத்தக தினம் அன்று துவக்கப்பட்டது. வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக...