Sunday, March 30, 2025

தீர்மானம் - தி.ஜானகிராமன் January 2025






 தீர்மானம்
தி.ஜானகிராமன்

வெளியீடு January -2025                                                                            விலை ரூ 250/-


குழந்தைகளை மையமாக வைத்து தி. ஜானகிராமன் எழுதிய கதைகளின் தொகுப்பு இந்த நூல்.

எனினும் இவை குழந்தைக் கதைகள் அல்ல. குழந்தைமையை அடித்தளமாகக் கொண்டு மனிதர்களின் நடவடிக்கைகளை எடுத்துக் காட்டுபவை.

தி.ஜானகிராமன் கதைகளில் சித்தரிக்கப்படும் உலகம் ஒளி நிரம்பியது.. கதை மாந்தர்களும் வெளிச்சத்தில் துலங்குபவர்கள். நற்குணர்கள் மட்டுமல்ல; பகையையும் பொறாமையையும் பேராசையையும் ஒழுக்கக் கேடுகளையும் வஞ்சனையையும் வன்மத்தையும் குணமாகக் கொண்டவர்கள் கூட  இழிவானவர்களாகக்  காட்டப்படுவதில்லை. அவர்களுடைய துர்க் குணங்களுக்கு இடையிலும்  வெளிச்சத்தை ஒளிர விடுபவர்களாகவே  காட்டப்படுகிறார்கள்.  எவரும் வெறுக்கத் தகுந்தவர்கள் அல்லர் என்றே சித்தரிக்கப்படுகிறார்கள்.

 மனிதர்கள் மீது சுமத்தப்பட்டிருக்கும் அடையாளங்களைக் கடந்து அவர்களது மானுட இருப்பைக் காண்பதே  தி.ஜானகிராமனின் படைப்பு நோக்கம் என்று எண்ணுகிறேன். 
                        

                                                                                                                - சுகுமாரன்



No comments:

Post a Comment