Tuesday, September 13, 2022

நாஞ்சில்நாடன் விருது (2022)விழா நிகழ்வுகள்

 



சிறுவாணி வாசகர் மையம் வழங்கிய நாஞ்சில்நாடன் விருது விழா 2022 ,(நாள்:-21.08.2002) காணொளிகளின் முழுத்தொகுப்பு.


https://youtu.be/FFDdsCC2TZ0


(தனித்தனியே)

மாவட்ட ஆட்சியர் டாக்டர் G.S.சமீரன் விருது வழங்கி உரை


https://youtu.be/6jNlmWd34UU


நாஞ்சில் நாடன் உரை

https://youtu.be/ns7fJ2qAK0o


வழக்கறிஞர் கே.சுமதி வாழ்த்துரை


https://youtu.be/Oia8qk4g36Y


"சொல்வனம்" வ.ஸ்ரீநிவாசன் வாழ்த்துரை


https://youtu.be/SpPglsP8rlA


CGS. மணியன் வாழ்த்துரை


https://youtu.be/ADwuJ6nL8nE


விழாவில் சிறப்புப் பாராட்டுப்பெற்ற கதைசொல்லி ரம்யா வாசுதேவன் ஏற்புரை


https://youtu.be/tCh7g-MFpJ8


ஆர்.ரவீந்திரன் விருது அறிமுகவுரை


https://youtu.be/nkmlrw7LtAg


நாஞ்சில்நாடன் விருது 2022

விருதாளர் கௌசிகா செல்வராஜ் ஏற்புரை


https://youtu.be/8ohytTZPHZc

----------------------------------------------------------------------------------------------


https://photos.app.goo.gl/F7boc3VEBYQWfGHq8                                                                                       நாஞ்சில்நாடன் விருது விழா -2022 photos - part 1


https://photos.app.goo.gl/Qp9DcN91tS8Gqyic8                                                                                             நாஞ்சில்நாடன் விருது விழா -2022 photos - part 2


-------------------------------------------------------------------------------------------------

நாஞ்சில்நாடன் விருது விழா 

21.08.2022இல் கிக்கானி பள்ளியில் நடைபெற்றது.

கோவை மாவட்ட ஆட்சியர் டாக்டர். G.S.சமீரன் IAS அவர்கள் தலைமை விருந்தினராகக் கலந்துகொண்டு விருது வழங்கிச் சிறப்பித்தார்.அவரது ஆற்றொழுக்கான உரையும்,தமிழ் உச்சரிப்பும் அரங்கை  ஆச்சர்யப்படுத்தின.சிறப்பான உரை நல்கிய அவர்  முதுகுளம் ராகவன்பிள்ளை,பத்மராஜன் கந்தர்வனோ,மானிடனோ! நூல்கள் மூலம் ஒரு படைப்பாளியாகவும் விளங்குகிறார்.

கோவைக்குக் கிடைத்த நல்லதொரு ஆட்சியர் நமது விருது விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்ததை, நமக்கான அங்கீகாரமாகக் கருதி மகிழ்வதோடு ஆட்சியருக்கு நன்றியையும் தெரிவிக்கிறோம்.

வணிகநோக்கின்றி வாசிப்பைப் பரவலாக்கும் நோக்கில் செயல்பட்டு வரும்  சிறுவாணி வாசகர் மையம் தங்களை வணங்குகிறது.

https://youtu.be/6jNlmWd34UU

இவ்வாய்ப்பை ஏற்படுத்தித் தந்த  திரு.ஆர்.ரவீந்திரன்,அவர்களுக்கு நன்றி.

-------------------------------------------------------------------------------------------------------------

வழக்கறிஞர் சுமதி அவர்கள் நாடறிந்த பேச்சாளர். வழக்கறிஞராகப் பல்லாண்டுகள் அனுபவம்.சோ போன்ற ஆளுமைகளோடு பழகியவர்.ராணுவ வீரர்களைப் போற்றும் எஸ். ஃபௌண்டேஷனின் நிறுவனர்.இருந்தாலும் தமது எளிமையான அணுகுமுறையால் எங்களின் மனம் கவர்ந்தவர்.

கல் மண்டபம் என்கிற இவரது நாவலை சிறுவாணி வாசகர் மையம் வெளியிட அனுமதி தந்ததோடு நாஞ்சில்நாடன் விருது விழாவிற்கு அழைத்தவுடன் வருவதற்கு இசைந்து வந்திருந்து வாழ்த்துரை வழங்கினார்.

கம்பனில் துவங்கி பாரதியின் பாஞ்சாலி சபதம்,சகலகலாவல்லி மாலை எனச் சரளமாகப் பெருக்கெடுத்த தமிழை அருகிருந்து கேட்ட தருணங்களை மறத்தல் தகுமோ?

முத்துஸ்வாமி தீட்சிதர் ,பாரதி , கணியன் பூங்குன்றனாரின் புறநானூற்றுப் பாடல் என இவர்களிடமிருந்து துவங்கி விருதாளரைப்  பாராட்டிய பாங்கு சிறப்பு.

 https://youtu.be/Oia8qk4g36Y

சிறுவாணி இலக்கியக் குடும்பத்தில் ஒருவராக மாறிப்போன வழக்கறிஞர் கே.சுமதி அவர்களுக்கு எங்களின் மனமார்ந்த நன்றி.

-----------------------------------------------------------------------------------------------------

திரு. நாஞ்சில் நாடன்

கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக, மொழியின் மீது, சொல்லும் பொருளின் மீது முழுக் கட்டுப்பாடும், மோகமும், போற்றுதலும், நுண்ணறிவும் புலனுணர்வும், மொழியின் பரப்பையும் வீச்சையும் துல்லியமாய்க் கணிக்கும் திறனும் உடையவர். மிக உயர்ந்த தளத்தில் நேர்மையாகவும் அச்சமற்றும் இயங்கி வருபவர்.

"எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல; வேள்வி அல்ல, பிரசவ வேதனை அல்ல; ஆத்ம சோதனையோ சத்திய சோதனையோ அல்ல: பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல: பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல; வாழ்க்கையைப் புரிந்து கொள்ளும் முயற்சி: என் சுயத்தைத் தேடும் முயற்சி! 

எனது கருத்துக்களோடு எவரும் உடன்படலாம். மாறுபடலாம். ஆனால் அவை வாசிக்கவும், பரிசீலிக்கவும், விவாதிக்கவும் படவேண்டும் என்பது  எனது எதிர்பார்ப்பு."  என நேர்மையாக தனது வாழ்வியலை முன்வைப்பவர்.

பழமைக்கும் புதுமைக்கும் பாலமாக மட்டுமின்றி எடுத்துக்காட்டாகவும் விளங்குகின்றன இவரது நூல்களும் எழுத்தும்.

https://youtu.be/ns7fJ2qAK0o

சிறுவாணி வாசகர் மையத்தைத் தொடங்கி வைத்து  எங்களை வழி நடத்திக் கொண்டிருக்கும்,  சமகாலத்தில் வாழும் படைப்பாளுமையான திரு. நாஞ்சில் நாடன் பெயரில் விருது வழங்குவதை பெருமையாக கருதுவதோடு  எங்களின் மனமார்ந்த நன்றியைத் தெரிவிக்கிறோம்.

----------------------------------------------------------------------------------------------

திரு.வ.ஸ்ரீநிவாசன் சொல்வனம் இணைய இதழின் ஆசிரியர் குழுவில் ஒருவர்.ஜே. கிருஷ்ணமூர்த்தியும், ரமணரும் இவரை ஆகர்ஷித்தவர்கள். எழுத்தாளர்கள்  அசோகமித்திரன்,  ஜெயகாந்தன், நாஞ்சில்நாடன் போன்ற பல ஆளுமைகளின் நண்பர். 

"Va.Srinivasan is a brilliant writer and a sterling critic" என அசோகமித்திரன் அவர்களும்,

"எளிமையான,இயல்பான,நட்பான,இணக்கமான மனிதநேயர்" என  நாஞ்சில்நாடன் அவர்களும்

"நுட்பமான மொழித் தருணங்களைத் தொட்டு எடுக்கும்திறன் உடையவர்" என ஜெயமோகன் அவர்களும் இவரைப் பற்றிச் சொன்னவை.

எதைப் பற்றியும் (அ) இது மாதிரியும் தெரிகிறது,

காணக்கிடைத்தவை என்ற இவரது இரு கட்டுரை நூல்களை வெளியிட சிறுவாணிக்கு வாய்ப்புக் கிடைத்தது.

https://youtu.be/SpPglsP8rlA

சிறுவாணி வாசகர் மையத்தின் ஆலோசகரும் எங்கள் குடும்பத்தில் ஒருவருமான திரு.வ.ஸ்ரீநிவாசன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி.

-------------------------------------------------------------------------------------------------------------

திருமதி.ரம்யா வாசுதேவன்-

நாஞ்சில்நாடன் விருது-2022 விழாவில் சிறப்புப் பாராட்டுப் பெற்றவர்.   

சிறந்த கதைசொல்லி,  Under the Tree என்ற கதைசொல்லல் அமைப்பின் மூலம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ் இலக்கியச் சிறுகதைகளை ஒலி வடிவில் நிகழ்த்தியுள்ளார். அவை அனைத்து அரசு நூலகங்களிலும் இப்போது கிடைக்கப் பெறுகின்றன. தவிரவும் ஆன்மிகம்,சுயமுன்னேற்றம் , இதிகாச புராணங்களில் உள்ள வாழ்வியல் கதைகள்,  தொழில் மற்றும் கல்வி சார்ந்த புத்தகங்களை அறிமுகம் செய்துள்ளார்.

தினந்தோறும் பதிவிடும் ஒலிப்பதிவுகளை  50000 க்கும் மேற்பட்ட நேயர்கள் கேட்டு மகிழ்கிறார்கள்.

https://youtu.be/tCh7g-MFpJ8

வாசிப்பை,வாசிப்பின் அனுபவத்தைத் தனது குரல் மூலம் பரவலாகக் கொண்டுசொல்லும்

"ஆயிரம் கதைகள் சொன்ன ஆச்சர்யக் கதைசொல்லி" ரம்யா வாசுதேவன் அவர்களுக்கு சிறுவாணி வாசகர் மையம் தமது பாராட்டுகளைத் தெரிவிக்கிறது.

--------------------------------------------------------------------------------------------

திரு C.G.S மணியன் 

C4TN, Lead India  அமைப்புகளின் மூலம்  பல்வேறு உதவிகளைச் செய்து வருபவர். வெள்ளச் சேதங்களின் போதும்,கோவிட்-19 பாதிப்புகளின் போதும் இவர் முன்னெடுத்த சேவைகளால் பயன்பெற்றோர் ஏராளம்.

தற்போதும் "நம்ம கோவை" மூலம் தன்னார்வலர்களையும்,அரசு நிர்வாகத்தையும் ஒருங்கிணைப்பவர்.

நீர்நிலைகள் மீட்டெடுப்பு, பசுமைப் பரவல் விரிவாக்கம், திடக்கழிவு மேலாண்மை போன்ற சூழல் செயல்பாடுகளில் முன்னாடியாக இருப்பவர்.

இலக்கிய வாசிப்பாளர். பாரதியை நேசிப்பவர்.சிறுவாணி வாசகர் மையம் துவங்கியதிலிருந்து ஆதரவு தருபவர்.

   https://youtu.be/ADwuJ6nL8nE

கோவையின் சமூக செயல்பாட்டாளர் திரு C.G.S மணியன் அவர்களுக்கு எங்களின் மனமார்ந்த நன்றி.

----------------------------------------------------------------------------------------------------

விருது அறிமுக உரை  - திரு ஆர் ரவீந்திரன். 

கோவையின் அனைத்து நற்காரியங்களிலும் முன்னிருப்பவர்.

ஓய்வில்லாமல் அடுத்தடுத்து  தன்னை எப்போதும் சமூகசேவைகளில் ஈடுபடுத்திக் கொண்டிருப்பவர்.

 உடனிருக்கும்  தன்னார்வலர்களின் உயர்வில் மகிழ்வு பெறுபவர். தன்னலமில்லாதவர். 

பாரதியின் உண்மையான ஆர்வலர்,  சமூக, இலக்கிய செயல்பாட்டாளர். உற்றுழி உதவும் பண்பாளர்.

                                              https://youtu.be/nkmlrw7LtAg

சிறந்த வாசிப்பாளரும், சிறுவாணி வாசகர் மையத்தின் கௌரவ ஆலோசகருமான திரு. ஆர் ரவீந்திரன் அவர்களுக்கு நன்றி.

--------------------------------------------------------------------------------------------------

திரு.கௌசிகா  P.K.செல்வராஜ் 

கோவைக்கு, குறிப்பாக கோவை நதிகள், குளங்கள், ஏரிகள் போன்ற நீராதாரங்களுக்குச் செய்த, செய்துவரும் தொண்டு அளப்பரியது...

கௌசிகா நதி கோவைப் பகுதி மக்களால் பல காலமாக கவனிக்கப்படாமல் கிட்டத்தட்ட அவர்கள் மறந்துவிட்ட ஒரு நீர் ஆதாரம். அந்த நதி மட்டுமன்றி அதைப்போன்ற, கைவிடப்பட்ட அல்லது பராமரிக்கப்படாத சுமார் 10 நீராதாரங்களை அடையாளம் கண்டு அவற்றை முறைப்படி அளந்து ஆவணப்படுத்தி அவற்றுக்கு உயிரூட்டியவர் P.K..செல்வராஜ். அதனால் இவர் "கௌசிகா" செல்வராஜ் என்றே மக்களால் அன்புடன் அழைக்கப்படுகிறார்.

நீராதாரங்களைப் பாதுகாக்கும் சமூக,இயற்கை சார்ந்த செயல்பாடுகளை அங்கீகரிக்கும் விதமாகவும், இத்தகைய அரிய பணிகளை அயராது தொடர்ந்து முனைப்போடு செய்வதற்கான ஊக்கியாகவும் செயல்படும் ‘கௌசிகா’ திரு செல்வராஜ் அவர்களுக்கு "நாஞ்சில்நாடன் விருது" வழங்கிக் கௌரவித்ததில்  சிறுவாணி வாசகர் மையம் பெருமை கொள்கிறது.

                                                https://youtu.be/8ohytTZPHZc

அவருக்கும், அவர்தம் குழுவினருக்கும் எங்களின் மனமார்ந்த நல்வாழ்த்துகள்.


தி சுபாஷிணி /தலைவர்                          ஜி ஆர் பிரகாஷ்/ ஒருங்கிணைப்பாளர் 

                                        சிறுவாணி வாசகர் மையம்

                                                        21.08.2022

                                                        கோவை

-----------------------------------------------------------------------------------------------------------------------




                                                                                              




                                                                                                                                                



கனவு மழை -வ.ஸ்ரீநிவாசன் சிறுகதைகள்

கனவு மழை வ.ஸ்ரீநிவாசன் சிறுகதைகள்  பக்கங்கள்;166          விலை;ரூ 180/- நாஞ்சில்நாடன் அனைத்துக் கதைகளிலுமே நேர்த்தியான முதிர்ச்சி தெரிகிறது....