நன்றி:திரு. கா.சு. வேலாயுதன்
T K Kalapriya
ஆண்டுக்கு 1600/-- ரூபாய் சந்தா செலுத்தினால், “சிறுவாணி வாசகர் மையம்” மாதம் தோறும் கூரியர் மூலம் நல்ல புத்தகங்களை அனுப்பி வைப்பார்கள். ஆண்டுக்கு 12 புத்தகங்கள் சேகரமாகும். பதிபபகங்களுடன் இணைந்து தேர்ந்தெடுக்கப்பட்ட தலைப்பில் நல்ல புத்தகங்களைப் பிரத்யேகமாகத் தருவித்து/ பதிப்பித்து அனுப்புகிறார்கள் இந்த மாதம் மட்டுமே,580 ரூபாய் பெறுமானமுள்ள மூன்று புத்தகங்களை அனுப்பியிருக்கிறார்கள். அதில் சிற்பி தனபால் சுய சரிதை அற்புதமான புத்தகம். அது குறித்து நண்பர் ஆர்.சிவக்குமார் இன்று முகநூலில் பிரமாதமான குறிப்பு எழுதியிருக்கிறார். நண்பர்கள் அதிக அளவில் சந்தா செலுத்தி மாதந்தோறும் நல்ல நூல்களைப் பெற்றுக்கொள்ளுங்கள்.நீங்கள் செலுத்தும் பணத்தை விடவும் பெறுமதி மிக்க புத்தகங்கள் உங்களை வந்தடையும் — with Raveendran Ramasamy.