Friday, April 5, 2024

கனவு மழை -வ.ஸ்ரீநிவாசன் சிறுகதைகள்





கனவு மழை
வ.ஸ்ரீநிவாசன்

சிறுகதைகள் 

பக்கங்கள்;166          விலை;ரூ 180/-

நாஞ்சில்நாடன்

அனைத்துக் கதைகளிலுமே நேர்த்தியான முதிர்ச்சி தெரிகிறது. மொழி சம்பவம், உரையாடல், உணர்ச்சி, புனைவு என்பன சார்ந்து எவ்வகை ஆடம்பரம்,  ஆரவாரம், கம்பலை எதுவும் இல்லை அவர் மொழிதலில்.

கொள்கை, கோட்பாடு, தத்துவம் என்று எதையும் எவருக்கும் நிறுவ வேண்டிய எந்த நெருக்கடியும் இன்றி இயல்பாகக் கதை சொல்லிப் போகும் வ.ஸ்ரீ.யின் பாணி சமகால இலக்கியச் சூழலில் காண்பதற்கு அரிது.

சுஜாதா சஞ்சீவி

கதைகளில் மனித சுபாவம், எண்ணங்களின் விசித்திரங்கள், கைவிடப்பட்ட வாழ்க்கை என பல சரடுகள் கோர்க்கப்பட்டு வாழ்க்கையில் பல வர்ணஜாலங்களை காட்டுகின்றன. 

அவரது சிந்தனை முதிர்ச்சி, அகமனப் பார்வை, எண்ண ஓட்டங்கள், உலகநோக்கு எல்லாம் சிறப்பாகப் பதிவாகியுள்ளன. 

ந. ஶ்ரீராம்.

தொகுப்பில் இடம் பெற்றிருக்கும் 21 கதைகளும் வாழ்வினை தரிசிக்கும் 21 சாளரங்களாக நமக்குத் திறந்து விடப்படுகின்றன.

வ. ஶ்ரீநிவாசன்

ஒவ்வொரு மனிதரும் ‘பல கோடி நூறாயிரம்’ கதைகள். பெரும்பாலும் நினைவில் தங்காதவை;  கவனிப்புப் பெறாதவை; சொல்லப் படாதவை.

இந்த எல்லையற்ற கதைக் கடலின், ஓரலையின், ஒரு நுரையின், ஒரு குமிழி இக்கதைகள்.



திரு. அசோகமித்திரன் பொறுப்பாசிரியராய் இருந்த கணையாழியிலும், சொல்வனம் இணைய இதழிலும் 1971 லிருந்து 2015 வரை வெளியான 21 சிறுகதைகள்.

-----------------------------------------

கனவு மழை வாசிப்பு அனுபவம் :

தலைப்பே சிந்தனையைத் தூண்டியது.👌🏻👌🏻👌🏻

கனவிற்கும் நூலறுந்த பட்டத்திற்குமான தொடர்பு அருமை.  

கனவின் மழையில் நனைய முடியுமா? என்றால் எடுத்தாளும் கருத்துக்கள் கருந்துளையின் ஈர்ப்பு கொண்டிருந்தால் கனவின் மழையில் நனைந்திட  முடியும்தானே...

Arul prakash
Tashildar
----------------------------------------------




 

No comments:

சிறுவாணி வாசகர் மையம் பற்றி... 2017-2025 ஒன்பதாம் ஆண்டில்....

 சிறுவாணி வாசகர் மையம் பற்றி..... கோவையில் சிறுவாணி வாசகர் மையம் 2017 உலகப் புத்தக தினம் அன்று துவக்கப்பட்டது. வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக...