Saturday, October 12, 2019

நவம்பர் 2019- கஸ்தூரிதிலகம் - பரணீதரன்



நவம்பர் 2019- 
கஸ்தூரிதிலகம்   - பரணீதரன்


பக்கங்கள் 258 விலை 250/-

ISBN 978-81-942051-2-8

                கஸ்தூரிதிலகத்தில் அன்னை கஸ்தூரிபா வின் வாழ்க்கை மட்டுமல்ல,காந்தியடிகளின் வாழ்க்கையும் இணைந்திருக்கிறது.
இந்நூல் இவர்களின் அரசியல் வரலாற்றையோ,சமூகப் பணிகளின் வரலாற்றையோ விளக்குவதென்று சொல்வதற்கில்லை.இது அவர்களின் சீரிய தாம்பத்ய வாழ்க்கையின் வரலாறு என்பதுதான் மிகப் பொருத்தமானது.


                   இந்த நூலைப் படிப்பவர்கள் கஸ்தூரிபா வும் காந்திஜிக்குச் சரிநிகர் சமானமான ஓர் மகாத்மாதான் என்பதை உணரமுடியும்.
                                                                                          அணிந்துரையிலிருந்து...............

----------------------------------------------------------------------------------------------------------


 
 
  
பரணீதரன் அவர்கள்
இவரது இயற் பெயர் டி.எஸ்.ஸ்ரீதர்.(94)
ஆனந்த விகடனில் ஸ்ரீதர் என்ற பெயரில் அரசியல் கார்ட்டூன்களும், ஜோக்குகளும் பல ஆண்டுகளுக்கு வரைந்திருக்கிறார்.
மெரீனா என்ற புனைப் பெயரில் இவர் எழுதிய நகைச்சுவை கலந்த நாடகங்கள் பல விகடனில் தொடராக வெளிவந்திருக்கின்றன. பின்னர் இவை நாடகமாகவும் மேடையில் நடிக்கப்பட்டன. தனிக் குடித்தனம், ஊர்வம்பு, மாப்பிள்ளை முறுக்கு போன்ற இவரது பல நாடகங்கள் அந்நாளில் மேடையில் சூப்பர் ஹிட்!
பரணீதரன் என்ற பெயரில் இவர் எழுதிய ஆன்மீக கட்டுரைகள் பல்லாயிரக்கணக்கான வாசகர்களால் விரும்பிப் படிக்கப்பட்டன. காஞ்சி மகா பெரியவர் அவர்களிடம் அதீத பக்தி கொண்டிருப்பவர் பரணீதரன். காஞ்சி மகானுடன் பல இடங்களுக்கு பயணப்பட்டிருக்கிறார். அந்ந அனுபவங்கள் பல கட்டுரைகளாக மலர்ந்திருக்கின்றன. அதேபோல், இவர் புனித ஆலயங்கள் பலவற்றுக்கு சென்று கட்டுரைகள் பல எழுதியிருக்கிறார்.  பகவான் ரமணர், சேஷாத்திரி சுவாமிகள், ஷீரடி சாய்பாபா போன்ற மகான்கள் பலரின் வாழ்க்கைக் கதைகள் எழுதியிருக்கிறார்.
ஆனந்த விகடனில் பல்லாண்டு காலம் பணிபுரிந்து, அதன் இணை ஆசிரியராக ஓய்வு பெற்றவர் டி.எஸ். ஸ்ரீதர். இன்றும் அவரை சந்தித்து வாழ்த்து பெற வரும் வாசகர்கள் பலர்.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------



 12.10.2019

இன்று கஸ்தூரி திலகம் நூலை பதிப்பிக்க உரிமை தந்த பரணிதரன் அவர்களின் தங்கை மகன் வி எஸ் வி அவரகளைப் பார்க்க சென்றேன்.அவர அன்புடன் வரவேற்று உபசரிததார்கள். நான் அவரிடம் கஸ்தூரி திலகம் நூலை அளித்தி நமது நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்து கொண்டேன். அவர் ஆனந்த விகடனில் இசை பற்றிய கட்டுரைகளை எழுதி வருபவர்.

வியெஸ்வி அவர்கள்


பின் இந்நூலாசிரியர் பரணிதரன் அவர்களைக் காணவேண்டுமே என்றேன். அவர் வசிக்கும் வீட்டு விலாசத்தையும் அவரைக் கவனித்துக் கொள்ளுபவரிடம் போன் பண்ணி நான் வரப்போவதையும் தெரிவிக்கவும் செய்தார். 
பரணிதரன் சார் ஒரு குழந்தையாய் இருந்தார். புத்தகத்தை சொல்லி கொடுத்தேன். பார்த்து சிரித்தார். தெரிந்து கொண்டாரா  தெரியவில்லை. முகத்தில. மலர்ச்சி இருந்தது. சிரிப்புத்தான் அவருக்கு.   பிறந்த குழந்தையை பாதுகாப்பதுபோல் கேர்டேக்கர் ஹேமாதான் உணவு ஊட்டி, உடை உடுத்திவிட்டு கவனித்துக்கொள்கிறார். புத்தகம் கொடுத்து ஆசீர்வதிக்க கேட்டேன். கைகளால ஆசீர்வதித்தார். பேச்சு இல்லை. குழந்தை போல. சிரிக்கின்றார் .  அந்த சிரிப்பின் சந்தோஷம் மகிழ்வை அளித்தது. அவரை கவனித்துக்கொள்ளும் ஹேமமாலினி அம்மையாருக்கு நன்றியைத் தெரிவித்துவிட்டு மீண்டும் ஒரு நாள் வருகிறேன் என்று சொல்லிவிட்டு வந்தேன்.

தி.சுபாஷிணி
சிறுவாணி வாசகர் மையம்,

தலைவர்
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------









சிறுவாணி வாசகர் மைய வெளியீடுகளோடு
 எழுத்தாளர் திரு.நாஞ்சில்நாடன் , ஓவியர் ஜீவா அவர்கள்...
கோவை" விஜயா பதிப்பகம்" திரு.வேலாயுதம் ஐயா அவர்கள்-
-----------------------------------------------------------------------------------------------------------
------------------------------------------------------------------------------------------------------------

                   

அக்டோபர் 2019 நவில்தொறும்.....- எம்.ஏ.சுசீலா



அக்டோபர் 2019 வெளியீடு

நவில்தொறும்.....-  எம்.ஏ.சுசீலா
கட்டுரைகள்

பக்கங்கள் 158   விலை 150/-

ISBN 978-81-942051-11




எழுத்தாளரும் மொழிபெயர்ப்பாளருமான பேராசிரியர் எம்.ஏ.சுசீலா அவர்களிடம் "நவில்தொறும் ...." 


 


சிறுவாணி வாசகர் மைய வெளியீடுகளோடு
எழுத்தாளர் திரு.நாஞ்சில்நாடன் , ஓவியர் ஜீவா அவர்கள்...
கோவை" விஜயா பதிப்பகம்" திரு.வேலாயுதம் ஐயா அவர்கள்-
-------------------------------------------------------------------------------------------------------------
--------------------------------------------------------------------------------------------------------------
மார்க்ஸிய மெய்யியலாளரும் கோவையின் மூத்தஅறிஞருமான திரு.கோவை ஞானி ஐயா அவர்களிடம் சிறுவாணி வாசகர் மையப் புத்தகங்கள்.
22.10.19


 
-------------------------------------------------------------------------------------------------------------------
 .








கனவு மழை -வ.ஸ்ரீநிவாசன் சிறுகதைகள்

கனவு மழை வ.ஸ்ரீநிவாசன் சிறுகதைகள்  பக்கங்கள்;166          விலை;ரூ 180/- நாஞ்சில்நாடன் அனைத்துக் கதைகளிலுமே நேர்த்தியான முதிர்ச்சி தெரிகிறது....