Sunday, August 2, 2026

நாஞ்சில்நாடன் விருது விழா -2026




சிறுவாணி வாசகர் மையம் வழங்கும் நாஞ்சில்நாடன் விருது-2026 க்கு திரு.இரா.மணிகண்டன் (கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு)  தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

விழா நாள்: ஆகஸ்ட் 09 மாலை 5.30 முதல்...

இடம்: ஆர்த்ரா ஹால்  அண்ணாசிலை அருகில், அவிநாசி சாலை, கோவை

----------

கோவையில் சிறுவாணி வாசகர் மையம் 2017 உலகப் புத்தக தினம் அன்று துவக்கப்பட்டது. வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கவும் ,சிறந்த எழுத்தாளர்களின் எழுத்துக்களை இன்றைய தலைமுறைக்குக் கொண்டு செல்லும் பணியையும் இந்த மையம் செய்து வருகிறது .

இந்த அமைப்பின் மூலம் "மாதம் ஒரு நூல்" எனச் சிறந்த படைப்புகள் உறுப்பினர்களுக்கு  அனுப்பி வைக்கப்படுகிறது. இதன் தலைவராக தி சுபாஷிணி, ஒருங்கிணைப்பாளராக ஜி. ஆர். பிரகாஷ் ஆகியோர் உள்ளனர்.

கௌரவ ஆலோசகர்களாக திரு.நாஞ்சில்நாடன், திரு.வ.ஸ்ரீநிவாசன், திரு.ஆர்.ரவீந்திரன் (RAAC)ஆகியோர் வழிநடத்துகின்றனர். ஓவியர் ஜீவா புத்தகங்களுக்கான அட்டைப்படங்களை வடிவமைத்துத் தருகிறார்.

 

கடந்த ஒன்பது ஆண்டுகளில் தமிழகம் மற்றும் மற்ற மாநிலங்களிலிருந்தும் 500+ உறுப்பினர்கள் உள்ளனர்.

 

எழுத்தாளர் நாஞ்சில்நாடன் பெயரில் வழங்கும் விருது பற்றி சிறு அறிமுகம் ;

 

கலை, இலக்கியம்  சமூகம் ஆகிய துறைகளில் நேர்மையாகவும் துணிச்சலாகவும் தொடர்ந்து செயல்படுபவர்களுக்கு வழங்கப்படும் இந்த விருது பரிசுத் தொகை ரூபாய் 50,000/- ,கேடயம் மற்றும் சான்றிதழ் அடங்கியது .இவ்விருதை நிறுவியவர் திரு.வி.கிருஷ்ணகுமார் அவர்கள்.

 

முந்தைய ஆண்டுகளில் விருது பெற்றவர்கள்;

ஓவியர் ஜீவா (2018),

முனைவர் ப. சரவணன் ( 2019) ,

பத்திரிகையாளர்,எழுத்தாளர் கா.சு.வேலாயுதன் (2020),

மணல்வீடு திரு.ஹரிகிருஷ்ணன்(2021)

சமூகச் செயற்பாட்டாளர் 'கௌசிகா' திரு. செல்வராஜ்(2022)

மொழிபெயர்ப்பாளர் திரு.அருட்செல்வப் பேரரசன்(2023)

கவிஞர் இசை(2024)

எழுத்தாளர் வேலாயுத முத்துக்குமார் (2025)

------------------

விருதாளர் திரு.இரா.மணிகண்டன்

 

நொய்யல் ஆறு, அதைச் சார்ந்த நீர்நிலைகளைப் பாதுகாப்பது, கோயம்புத்தூர் நகரத்தில் மக்களுக்கும் நீர்நிலைகளுக்கும் இடையிலான தொடர்பை மேம்படுத்துவது, பசுமைப் பரப்பளவை அதிகரிப்பது, பல்லுயிர்ச்சூழலைப் பெருக்குவது, பொதுமக்களுக்கு சுற்றுச்சூழல் விழிப்புணர்வை மேம்படுத்துவது எனும் நோக்கங்களோடு 2017 முதல் திரு.இரா.மணிகண்டன் தலைமையில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு செயல்பட்டுவருகிறது.

.இவ்வமைப்பின் தன்னார்வலர்கள் வாரம்தோறும் ஏரிகள், குளங்கள், குட்டைகள்,தடுப்பணைகள் போன்ற நீர்நிலைகளைப் பாதுகாக்கத் தூர்வாருதல், நெகிழிக் குப்பைகளை அகற்றுதல் போன்ற தூய்மைப் பணிகளைச் செய்துவருகிறார்கள்.இவர்களின் செயல்பாடுகளால் கோவையைச் சுற்றியுள்ள நீர்நிலைகள் தற்போது நீர்நிறைந்து காணப்படுகின்றன.

பசுமைப் பரப்பளவை அதிகரிக்கும் விதமாக பல்லாயிரக்கணக்கான மரக்கன்றுகள் கோவையின் பல்வேறு இடங்களில் நடப்பட்டுள்ளன.

வெள்ளலூர் கிராமத்தில் வெள்ளலூர்க் குளம் பட்டாம்பூச்சி பூங்கா, 

காளப்பட்டியில் சங்க இலக்கியப் பூங்கா,

சீரபாளையத்தில் சமூகப் பூங்கா ஆகியவை இவரது எண்ணத்தில் உருவாகியுள்ளன.

திரு.இரா.மணிகண்டன் அவர்களின் சீரிய இச்சேவைகளுக்காக மத்திய,மாநில மற்றும் தனியார் அமைப்புகளால் கௌரவிக்கப்பட்டுள்ளார்.

 

சிறுவாணி வாசகர் மையம் நாஞ்சில்நாடன் விருது (2026), திரு.இரா. மணிகண்டன் அவர்களுக்கு  வழங்குவதில் பெருமகிழ்ச்சி அடைகிறது.

 

தொடர்புக்கு - ஜி.ஆர்.பிரகாஷ்  

               9940985920   , 8778924880

 

 

 

கோவை புத்தகத் திருவிழா (2026) ல் சிறுவாணி வாசகர் மையம்

 




கோவை புத்தகத் திருவிழா (2026) ல்

சிறுவாணி வாசகர் மையம். (Siruvani Vasagar maiyam)

https://www.facebook.com/share/p/1EHJPDBSZd/

அனைவருக்கும் வணக்கம்.

கோவை புத்தகத் திருவிழா ஜூலை 17 ம் தேதி துவங்கி நேற்றுடன் பத்துநாட்கள் இனிதே நிறைடைந்தது.

நமது சிறுவாணி வாசகர் மையம் அரங்கு 35 ல் பங்குபெற்றதையும் அறிவீர்கள்.

கோவை புத்தகத் திருவிழாவில் பங்குபெற


ஊக்குவித்த திரு.நாஞ்சில்நாடன்,

திரு.வ.ஸ்ரீநிவாசன் ,

திரு.ஆர்.ரவீந்திரன்....


பங்குபெற வாய்ப்பளித்த புத்தகத் திருவிழாவின் தலைவர்

திரு.ராஜேஷ்,திரு.விக்னேஷ்,திரு.முகுந்தன் ஆகியோருக்கும் மனமார்ந்த நன்றி.

🙏🙏🙏


வாழ்நாள் சாதனையாளர் விருதுபெற்ற பேராசிரியர் க.ரத்னம் ஐயா அவர்கள் சிறுவாணி அரங்குக்கு வருகைதந்து சிறப்பித்தார்.அவருக்கு வணக்கமும் நன்றியும்.

---------

சிறுவாணி  வாசகர் அரங்குக்கு வருகைதந்து பெருமைப்படுத்திய நண்பர்கள்/ எழுத்தாளர்கள்/உறுப்பினர்கள் ;

முடிந்தவரை பெயர்களை க் குறிப்பிட்டு நன்றிகூற முயல்கிறேன்.

பட்டியலில் விடுபட்டவர்கள் இருப்பின் அது எனது நினைவுக் குறைபாடே.

மன்னிக்கவும்.

-----------

திரு நாஞ்சில் நாடன், ஓவியர் ஜீவா, எழுத்தாளர்  எஸ். ராமகிருஷ்ணன், காலச்சுவடு பதிப்பாளர் திரு. கண்ணன்,எழுத்தாளர் பா.ராகவன்,எழுத்தாளர் சாருநிவேதிதா,திரு.மரபின் மைந்தன் முத்தையா,திரு.D.பாலசுந்தரம் ஐயா,

திரு.சுதேசமித்திரன், திரு.அரவிந்த் வடசேரி, மொழிபெயர்ப்பாளர் நிர்மால்யா, ஐயா பொதிய வெற்பன், திரு.கோணங்கி, திரு.முருகேச பாண்டியன், திரு.அய்யப்ப மாதவன்,

திரு.கா.சு.வேலாயுதன்,

'லயம்'திரு.காலசுப்பிரமணியன்,

புரவலர் 

திரு.V. கிருஷ்ணகுமார்,புரவலர் திரு.சத்தியமூர்த்தி....


புன்னகை அம்சப்ரியா,

காலச்சுவடு திரு அய்யாசாமி

திரு.CGS.மணியன்,ஓவியர்.சுந்தரம் முருகேசன் ....


கவிஞர் யவனிகா ஸ்ரீராம்,

சிவக்கவிமணி அவர்களின் பேரர்கள் திரு.சிவசுப்பிரமணியன்,திரு.கந்தசாமி,எழுத்தாளர் சு.வேணுகோபால்,


எழுத்தாளர்கள் திரு.லா.ச.ரா சப்தரிஷி,திரு.சங்கரராம பாரதி,

திரு.கே.என்.செந்தில்,திரு.ஸ்கந்தசுப்ரமணியன்,திரு.வேடியப்பன்(டிஸ்கவரி),

திரு.ஜீவகரிகாலன்(யாவரும்),

இயக்குநர் ராம்-ன் தந்தையார் திரு.சங்கரநாராயணன்,

திரு.நாகசந்திரன்,

திரு.இயகாகோ சுப்பிரமணியம்,திரு.போகன்சங்கர்...யூட்யூப் நண்பர்கள்...


திரு.கண்ணன் தண்டபாணி,

திரு.ஜான்சுந்தர், 

திரு.அவைநாயகன்,

திரு.மயன் மகேஸ்குமார்,திரு.மணிவண்ணன் சண்முகம்,லஷ்மிஹர்,

மற்றும் 

அனைவருக்கும் நன்றி.🙏

 

நியூஸிலாந்து நண்பர்கள் திரு.சாய்,திரு.பாண்டியராஜ் மற்றும் கனடா,ஆஸ்திரேலியா,அமெரிக்காவிலிருந்து வருகைதந்த நண்பர்கள்...


ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி திரு.பரமசிவன்,

எழுத்தாளர் சுரேஷ்வெங்கடாத்ரி தினமும் வந்திருந்து உதவிசெய்தார்கள் அவர்களுக்கும் பேராசிரியர்.விஜயராகவன், கவிஞர் கோவை சுபா ஆகியோருக்கும் நன்றி. 🙏🏻🙏🏻


பவித்ரா பதிப்பக நூல்களின் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட எழுத்தாளர்கள் ஜி.ஏ.பிரபா,திரு.ம.முருகன்,கவிஞர் ஜெயஸ்ரீ வெங்கடேசன் மற்றும் திரு வெங்கட்ராகவன் ஆகியோருக்கு நன்றி.


வரும் ஆகஸ்ட் 09 ல்

நாஞ்சில்நாடன் விருது -2026 நிகழ்வின் தலைமை விருந்தினர் திரு.பாலகுருசாமி (முன்னாள்) துணைவேந்தர் அவர்கள்,

விருதுபெறும் இரா.மணிகண்டன் (கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு) அரங்குக்கு வருகைதந்தார்.அவருக்கு நன்றி.


புத்தகத் திருவிழாவிற்காக பணிநேரத்தை மாற்றிக் கொடுத்து உதவிய எங்கள் நிறுவன மேலாளர்...


மேலும் நமது சிறுவாணி வாசகர் மையத்திற்கு வருகைதந்த வாசகர்கள்,புதிதாக இணைந்துள்ள வாசகர்கள்,


எனது மகளுக்காகப் புத்தகங்களைத் தேடித்தேடி ,பரிந்துரை செய்து வாங்கித் தந்த பேராசிரியை.மாதங்கி,


இத்தனை நண்பர்களையும் எழுத்தாளர்களையும் சந்திக்கக் காரணமாயிருந்தது சிறுவாணி வாசகர் மையம் அமைப்பு.


இதனை உருவாக்கிய திரு.நாஞ்சில்நாடன்,

ஆடிட்டர் கிருஷ்ணகுமார்,மூத்த சகோதரியாக விளங்கும் தி.சுபாஷிணி மற்றும் ஆலோசகர்கள்,


பாரதி வண்ணப்படங்கள் 35000 என்கிற எண்ணிக்கையை இந்த புத்தகத் திருவிழாவில் நிறைவு செய்தது மகிழ்ச்சி.


மேலும் புத்தகத் திருவிழாவிற்கு வந்திருந்த 200 க்கும் மேற்பட்ட பள்ளி  மாணவர்களுக்கு வாசிப்பைப் பற்றி எடுத்துச்சொல்லி,

பல்வேறு நூல்களை அன்பளிப்பாக வழங்கியது மனதுக்கு நிறைவாக இருந்தது.


எனது குடும்பத்திலிருந்து அம்மா,மனைவி மற்றும் மகள்.


சிறுவாணியின்வாட்ஸ்அப் குழுக்களில் தொடர்ந்து ஊக்குவித்தவர்கள் ,

அனைவருக்கும் மனமார்ந்த நன்றி.

🙏🙏🙏🙏🙏🙏


தொடர்ந்து தங்கள் அன்பையும் ஆதரவையும் வேண்டுகிறேன்.


ஜி.ஆர்.பிரகாஷ்

ஒருங்கிணைப்பாளர்

சிறுவாணி வாசகர் மையம்

கோவை

-------------

 https://youtu.be/GUDaYT3enJo?si=1S6wCji9OFCM6rCS

 SVM from 4th minute


-----------------------

 https://youtu.be/Le9pDvQcv8Y?si=XtK6ErTFwnbM2wl9

 

4.51 minutes

----------------------

https://youtu.be/SjXMmzv8SKM?si=mdCMhkEczuABzB6I


Time: 26:40

----------------------

கோவைக்கு சுவை சேர்ப்பது 'சிறுவாணி நீர்'


அது நாவில்பட்டு தாகம் தீர்த்து உடலில் நிறையும்.


அது போன்றே 'சிறுவாணி வாசகர் மையம்' நூல்கள் கைககளில் தவழ்ந்து கண்களில் நுழைந்து இதயத்தை நிறைக்கின்றன.


 10ஆண்டில் வெற்றிகரமாக செயல்பட்டு வரும் இந்த வாசகர்மையம் நம் இன்றைய மிகப்பெரிய குறைகளான நேரமின்மை மற்றும் சிறந்த  நூல்களை எங்கு தேடிச்சென்று வாசிப்பது..என்பதை களைந்து  குறைந்த விலையில் பல நூல்களை நம் இல்லத்திற்கே தேடிவந்து மாதம் ஒரு நூல் என வருடத்திற்கு 12நூல்கள் நம் வாசிப்பிற்கு தருகிறார்கள். 6லிருந்து 100 வயதுவரை இதன் வாசகர்கள்.  100 வயதிற்கு மேல் உள்ளவர்கள் கூடஇதன் வாசகர்களாக (உறுப்பினர்களாக) இருக்கலாம். நான் அறிந்திட்டில்லேன். ஏனெனில் சிறந்த வாசிப்பு சுவாசிக்க வைக்கும். வாழ்வை ருசிக்க வைக்கும்.


இதன் தலைவராக திருமதி. மதிப்பிற்குரிய அம்மா சுபாஷிணி திருமலை அவர்கள் செயல்படுகிறார்கள்.


சிறந்த படைப்புகள் நம்மை வந்தடைய கௌரவ ஆலோசகர்களாக திரு.  நாஞ்சில் நாடன், திரு. வ.ஸ்ரீநிவாசன், திரு.ஆர்.ரவீந்திரன் (RAAC) செயல்படுகிறார்கள்.


ஒரு குடும்பம் புத்தகம் வாசிக்கும் பார்த்திருக்கிறோம். ஒரு குடும்பமே புத்தகத்திற்காக உழைத்து பார்த்திருப்போமா?!

அத்தகைய சிறந்த குடும்பம்தான் திரு. ஜி.ஆர். பிரகாஷ், ஒருங்கிணைப்பாளர் அவர்களின் குடும்பம்.

வாசகர்மையத்திற்காக அத்தனை சிறந்த பங்களிப்பு அவர்களுடையது.


நூல்கள் நாவல்கள், சிறுகதைகள்,கட்டுரைகள், என அனைத்து தரப்பு சிறந்த நூல்கள் நம்மை வந்தடையும். சிறுவாணி வாசகர் மையத்தின்   1,25,50,75, 100 நூலகளாக நாஞ்சில் நாடன் ஐயா அவர்கள் நூல்கள் வந்துள்ளன. 100வது நூலாக "சொல்லாழி"! 


பல அறிய வாசிக்க வந்த நூல்களில் குறிப்பிடத்தக்க சில நூல்கள் திரு. லாச.ராஅவர்களின் பூர்வா,இதழ்கள்,கழுகு,விளிம்பில்,கல்சிரிக்கிறது பிராயச்சித்தம்;

இந்திரா பார்த்த சாரதிஅவர்களின் 'வேர்ப்பற்று';'கல்குமிழிகள்' ந. பிச்சமூர்த்தி அவர்களின் சிறுகதைகள்; பெண் எழுத்தாளர் ராஜம் கிருண்ணன் அவர்களின் 'கதவிற்கு அப்பால்';

இவ்வருடம் கோவை புத்தகத் திருவிழாவில் சாதனையாளர் விருது பெற்ற பேராசிரியர் க.ரத்னம் ஐயாவின் 'கல்லும் மண்ணும்';

மற்றும் பல சிறுகதை நூல்கள் மற்றும் சிந்தனைத்தூண்டும் பல கட்டுரை நூல்கள்.


இந்தாண்டு ஏப்ரல் - செப்டம்பர் வரையில்:

சிட்டி (சிறுகதைகள்), நவரச நினைவுகள் சௌகார் ஜானகி, சொல்லாழி, காவிரிக்கரையில் திருவையாறு,என்றும் அன்புடன், வந்தே மாதரம் என்ற அற்புத நூல்கள் நம்மை வந்தடைந்து கொண்டிருக்கின்றன.


நூல்களின் முகப்புப் படங்கள் ஓவியர் ஜீவா அவர்களின் கை வண்ணம்.

நூல்கள் வந்துவிட்டன ..ஆனால் அதை இன்னும் வாசிக்க வில்லையெனில் அவரின் அட்டை பட ஓவியமே நம்மை வாசிக்க தூண்டி இழுக்கும்.


அச்சில் வராத ஆனால் வாசிக்க வேண்டிய பல அற்புத நூல்களை தேடித்தேடி பதிப்பித்து நம்மிடையே கொண்டு சேர்க்கும் அரிய உழைப்பு சிறுவாணி வாசகர் மையத்தினுடையது.


தேன் சுவை தமிழால் சிந்தனையைத்தூண்டி,

அரிய நூல்களால் உள்ளம் நிறைத்து,

இல்லம் தேடி வரும் 'சிறுவாணி வாசகர் மைய' நூல்களும், அவர்களின் உழைப்பும்  நிச்சயம் தமிழன்னையால் ஆசிர்வதிக்கப்பட்டவை.!


கோவை புத்தகத் திருவிழாவில் மட்டுமே பங்குபெறும் சிறுவாணி வாசகர் மையம், பவித்ரா பதிப்பகப் புத்தகங்களை வாங்கிடவும், வாசகர் மைய சந்தாதாரரர் ஆகிடவும்


சிறுவாணி வாசகர் மையம்/பவித்ரா பதிப்பகம்

கோவை புத்தகத் திருவிழா-2026

அரங்கு எண் 35


Jayasri venkatesan fb

--------------------

Let's enjoy this weekend!


 கோவையின் ஒரு Hidden Gem பற்றி இன்று பார்ப்போம். அதுவும்  ஜீலை 26 அன்றோடு அனுமதி முடிகின்றது!

 

புத்தகக் கண்காட்சி! அரங்கு A - ஸ்டால் 35

சிறுவாணி வாசகர் மையம் /பவித்ரா பதிப்பகம்


இவர்கள் தங்கள் வாசகர்மையம் மூலம் பல அரிய புத்தகங்களை வாசகர்களிடையே 10 ஆண்டுகளாக வெற்றிகரமாக வீட்டின் வரவேற்பு அறைக்கே கொண்டு சேர்க்கின்றார்கள்.


பல அரிய நூல்களான வேரும் விழுதும், நவம், உனது ஆத்ம பிரயத்னம்,போக்கிடம்,தக்கர் பாபா,விளிம்பில், பிஞ்ஞகன், கல்லும் மண்ணும், கம்பனும் சிவனும், காப்பிய இமயம் முதலிய பல அரிய நூல்கள்.

நாவல்கள் மட்டுமின்றி சிறுகதைகள், வாழ்க்கை வரலாறு,  கட்டுரைகள் நம்மிடையே கொண்டு சேர்க்கிறார்கள்.


அது சரி நாம் இந்த நூல்களை ஏன் படிக்க வேண்டும்?!


வாசிப்பு என்பது சிறு குழவியின் தீண்டலால்..போர் வீரனின் ஆயுத தாக்குதல் நம்முள் செய்யும், ஒரு புயலின் தாக்குதல் தென்றலாக வருடும்...மாயாஜாலமெல்லாம் நல் புத்தகங்கள் வாசிப்பில் நம்முள் நிகழும்.


 நம் மொழியின் சிறப்பை, வரலாற்றை, உண்மை சம்பவங்களை, கலாச்சாரத்தை பின் எப்படி அறிய முடியும்.

நூல்கள் வெறும் கற்பனையில் எழுதப்பட்டவை மட்டுமல்ல.  அவை உண்மையை தாங்கி காலம் கடந்து எடுத்துச் சொல்லும் காகித கல்வெட்டுகள்!

அதை காலம் கடந்தும் உயிர்ப்போடு வைக்க வாசகர்களால் மட்டுமே இயலும்!


மேலே குறிப்பிடப்பட்டவை அவற்றுள் மிக சில நூல்களே!  நம் இல்லம் தேடி  இத்தகை சிறந்த புத்தகங்கள் வருவதற்கு சிறுவாணி வாசகர் மைய சந்தாதாரர் ஆகவும், இன்னும் பல அரிய நூல்களை வாங்கவும்,


சிறுவாணி வாசகர் மையம்/பவித்ரா பதிப்பகம்

அரங்கு A - ஸ்டால் 35 கொடிசியா வர்த்தக வளாகம்


Let your weekend is fully "Booked"!!

Jayasri venkatesan

----------------------------

Thursday, July 16, 2026

சிட்டி (பெ.கோ. சுந்தரராஜன்) சிறுகதைகள்



சிட்டி
(பெ.கோ. சுந்தரராஜன்)
சிறுகதைகள்


சிட்டியின் கதைகள் அக்காலத்தில் எழுதப்பட்டிருந்தாலும் இன்றைய சமூகக் கோட்பாடுகளுக்கும் நிலைக்கும் ஏற்றவையேயாகும். ஆகையால் அவை சிரஞ்சீவித்தனம் பெற்று விடுகின்றன. 
-
நரசய்யா       
                                                                   

நவீன தமிழ் வாசகர்களுக்கு ‘சிட்டி' எனும் மூத்த இலக்கிய ஆளுமையை அறியத் தரும் விதமாக ‘சிறுவாணி வாசகர் மையம்' இந்த நூலை வெளியிடுகிறது.  
நாஞ்சில்நாடன்



                                                             




 

நவரஸ நினைவுகள் சௌகார் ஜானகி (எழுத்து -எஸ்.சந்திரமௌலி)



நவரஸ நினைவுகள் 
சௌகார் ஜானகி
எழுத்து -எஸ்.சந்திரமௌலி

* “உனக்கு எது சரி என்று தோன்றுகிறதோ அதைச் செய்யத் தயங்காதே” என்பார் அப்பா. “சரி எது? தவறு எது?’ என்பதைப் பகுத்தறியும் பக்குவமும் அவர் அளித்த பலம்தான். “சிம்பிளாய் இரு; கையில் காசில்லாவிட்டால் கடன் வாங்கியாவது செலவு செய்யணும்னு நினைக்காதே” என்று அப்பா சொன்னதை நான் மறந்ததே இல்லை.

* ஜொலிப்பும் பந்தாவும் மிக்க சினிமா உலகில் எளிமையை விரும்புகிறவளான நான் எதிர்நீச்சல் போட்டு சமாளித்தது ஒரு பக்கம் இருக்க, சின்னச் சின்ன மகிழ்ச்சிகள் பலவற்றைத் தியாகம் செய்யவும் வேண்டியிருந்தது. 

* பணத்திலும் பகட்டிலும் மிதக்கும் திரையுலகில் பணத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்த போதிலும் பணம் மட்டுமே முக்கியமல்ல, உண்மையும், உழைப்பும் மனத் திருப்தியும்தான் வாழ்க்கையின் ஜீவ நாடிகள் என்ற கொள்கையைக் கை விடாமல் என்னால் வாழ முடிந்தது.

* எதையுமே மனத்தில் வைத்துக் கொள்ளாமல் வெளிப்படையாகப் பேசி விடுகிற குணம் எனக்கு. இதனால் திரையுலகிலேயே எனக்குப் பல பிரச்னைகள் ஏற்பட்டிருக்கின்றன. இத்தகைய சுபாவமுள்ள நான் எப்படி அரசியலுக்குப் பொருத்தமாக இருக்க முடியும்?

* இந்த நாட்டின் நல்ல பிரஜையாக, அரசாங்கத்தை மதித்து, மனசாட்சிக்கு விரோதமில்லாமல் வருமான வரி கட்டினேன்; இப்போதும் கட்டிக் கொண்டு வருகிறேன்.

பத்மஸ்ரீ சௌகார் ஜானகி
----------
கல்கியில் வெளிவந்த
கட்டுரைத் தொடர்:





 

சொல்லாழி - நாஞ்சில்நாடன்





 

                                        சொல்லாழி - நாஞ்சில்நாடன்

தமிழ் நவீன கவிதை இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவரான ந. பிச்சமூர்த்தி குறிப்பிட்டது போல் இந்தக் கட்டுரைகளும் பாதையில்லாக் காட்டில் பயணம் போகும் முயற்சியே!                                                                 

சிறுவாணி வாசகர் மையத்தின் முதல் நூலாக, இருபத்தைந்தாவது நூலாக, ஐம்பதாவது நூலாக, எழுபத்தைந்தாவது நூலாக எனது புத்தகங்கள் வெளியாகி உள்ளன. தற்போது நூறாவது நூலாக 'சொல்லாழி' வெளிவருகிறது.

-நாஞ்சில்நாடன்

காவிரிக்கரையிலே திருவையாறு- வழக்குரைஞர் நா.பிரேமசாயி நீ.சீனிவாசன்



காவிரிக்கரையிலே திருவையாறு-

வழக்குரைஞர் நா.பிரேமசாயி

நீ.சீனிவாசன் 

 (ஆறும் ஊரும்-1)


விலை ரூ.200/- (+50/- அனுப்பும் செலவு)


.... ... ... இவ்வளவு பெருமைகளையும் தன் கரையிலே அடக்கிக்கொண்டு அமைதியாக ஓடிக்கொண்டிருக்கிறது திருவையாற்றுக் காவிரி. 

இக் காவிரிக்கரை திருவையாற்றின் வரலாற்றினை, காட்சிகளாக, நம் கையைப் பிடித்து அழைத்துச் சென்று காட்டுவது போல் காட்டியுள்ளது இந்நூல்.

மொத்தத்தில்,  திருவையாற்றின் வரலாற்றினை அறிய விரும்புவோருக்கு ஒரு கையேடாக இந்நூல் விளங்குகிறது. பயன் பெறுக!


-பேராசிரியர் கோ. விஜயராமலிங்கம்

என்றும் அன்புடன் - ரம்யா வாசுதேவன்



என்றும் அன்புடன் 
ரம்யா வாசுதேவன் 

விலை ரூ200/-
+(50/- அனுப்பும் செலவு)
கட்டுரைகள் 

எல்லாத் தலைப்பும் உங்களுக்குத் தெரிந்ததுதான். அனுதினமும் இலையில் பரிமாறப்படும்  நாம் அறிந்த காய்கறிகள் போன்றவைதான். ஆனால், ருசியில்  பேதமுண்டல்லவா? உங்கள்  வாழ்வு சுவையானதா? உவர்ப்பானதா? மண்டைக்கு ஏறும் காரமா? திகட்டும் இனிப்பா? முஷ்டியை மடக்கியபடி இருக்கும் வன்மமா? என இந்நூலை வாசிக்கும் கணந்தோறும் உங்களை நீங்களே பார்த்தபடி இருப்பீர்கள்.

இந்த நூல், தகிக்கின்ற கோடையில் நிழல் தரும் குடை.  திசை அறியாது பயணிப்போரின் திசைகாட்டி.
- கிருஷ்ணா 





 

நாஞ்சில்நாடன் விருது விழா -2026

சிறுவாணி வாசகர் மையம் வழங்கும் நாஞ்சில்நாடன் விருது-2026 க்கு திரு.இரா.மணிகண்டன் (கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு)  தேர்வு செய்யப்பட்டுள்...