Thursday, July 16, 2026

சிட்டி (பெ.கோ. சுந்தரராஜன்) சிறுகதைகள்



சிட்டி
(பெ.கோ. சுந்தரராஜன்)
சிறுகதைகள்


சிட்டியின் கதைகள் அக்காலத்தில் எழுதப்பட்டிருந்தாலும் இன்றைய சமூகக் கோட்பாடுகளுக்கும் நிலைக்கும் ஏற்றவையேயாகும். ஆகையால் அவை சிரஞ்சீவித்தனம் பெற்று விடுகின்றன. 
-
நரசய்யா       
                                                                   

நவீன தமிழ் வாசகர்களுக்கு ‘சிட்டி' எனும் மூத்த இலக்கிய ஆளுமையை அறியத் தரும் விதமாக ‘சிறுவாணி வாசகர் மையம்' இந்த நூலை வெளியிடுகிறது.  
நாஞ்சில்நாடன்



                                                             




 

நவரஸ நினைவுகள் சௌகார் ஜானகி (எழுத்து -எஸ்.சந்திரமௌலி)



நவரஸ நினைவுகள் 
சௌகார் ஜானகி
எழுத்து -எஸ்.சந்திரமௌலி

* “உனக்கு எது சரி என்று தோன்றுகிறதோ அதைச் செய்யத் தயங்காதே” என்பார் அப்பா. “சரி எது? தவறு எது?’ என்பதைப் பகுத்தறியும் பக்குவமும் அவர் அளித்த பலம்தான். “சிம்பிளாய் இரு; கையில் காசில்லாவிட்டால் கடன் வாங்கியாவது செலவு செய்யணும்னு நினைக்காதே” என்று அப்பா சொன்னதை நான் மறந்ததே இல்லை.

* ஜொலிப்பும் பந்தாவும் மிக்க சினிமா உலகில் எளிமையை விரும்புகிறவளான நான் எதிர்நீச்சல் போட்டு சமாளித்தது ஒரு பக்கம் இருக்க, சின்னச் சின்ன மகிழ்ச்சிகள் பலவற்றைத் தியாகம் செய்யவும் வேண்டியிருந்தது. 

* பணத்திலும் பகட்டிலும் மிதக்கும் திரையுலகில் பணத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்த போதிலும் பணம் மட்டுமே முக்கியமல்ல, உண்மையும், உழைப்பும் மனத் திருப்தியும்தான் வாழ்க்கையின் ஜீவ நாடிகள் என்ற கொள்கையைக் கை விடாமல் என்னால் வாழ முடிந்தது.

* எதையுமே மனத்தில் வைத்துக் கொள்ளாமல் வெளிப்படையாகப் பேசி விடுகிற குணம் எனக்கு. இதனால் திரையுலகிலேயே எனக்குப் பல பிரச்னைகள் ஏற்பட்டிருக்கின்றன. இத்தகைய சுபாவமுள்ள நான் எப்படி அரசியலுக்குப் பொருத்தமாக இருக்க முடியும்?

* இந்த நாட்டின் நல்ல பிரஜையாக, அரசாங்கத்தை மதித்து, மனசாட்சிக்கு விரோதமில்லாமல் வருமான வரி கட்டினேன்; இப்போதும் கட்டிக் கொண்டு வருகிறேன்.

பத்மஸ்ரீ சௌகார் ஜானகி
----------
கல்கியில் வெளிவந்த
கட்டுரைத் தொடர்:





 

சொல்லாழி - நாஞ்சில்நாடன்





 

                                        சொல்லாழி - நாஞ்சில்நாடன்

தமிழ் நவீன கவிதை இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவரான ந. பிச்சமூர்த்தி குறிப்பிட்டது போல் இந்தக் கட்டுரைகளும் பாதையில்லாக் காட்டில் பயணம் போகும் முயற்சியே!                                                                 

சிறுவாணி வாசகர் மையத்தின் முதல் நூலாக, இருபத்தைந்தாவது நூலாக, ஐம்பதாவது நூலாக, எழுபத்தைந்தாவது நூலாக எனது புத்தகங்கள் வெளியாகி உள்ளன. தற்போது நூறாவது நூலாக 'சொல்லாழி' வெளிவருகிறது.

-நாஞ்சில்நாடன்

காவிரிக்கரையிலே திருவையாறு- வழக்குரைஞர் நா.பிரேமசாயி நீ.சீனிவாசன்



காவிரிக்கரையிலே திருவையாறு-

வழக்குரைஞர் நா.பிரேமசாயி

நீ.சீனிவாசன் 

 (ஆறும் ஊரும்-1)


விலை ரூ.200/- (+50/- அனுப்பும் செலவு)


.... ... ... இவ்வளவு பெருமைகளையும் தன் கரையிலே அடக்கிக்கொண்டு அமைதியாக ஓடிக்கொண்டிருக்கிறது திருவையாற்றுக் காவிரி. 

இக் காவிரிக்கரை திருவையாற்றின் வரலாற்றினை, காட்சிகளாக, நம் கையைப் பிடித்து அழைத்துச் சென்று காட்டுவது போல் காட்டியுள்ளது இந்நூல்.

மொத்தத்தில்,  திருவையாற்றின் வரலாற்றினை அறிய விரும்புவோருக்கு ஒரு கையேடாக இந்நூல் விளங்குகிறது. பயன் பெறுக!


-பேராசிரியர் கோ. விஜயராமலிங்கம்

என்றும் அன்புடன் - ரம்யா வாசுதேவன்



என்றும் அன்புடன் 
ரம்யா வாசுதேவன் 

விலை ரூ200/-
+(50/- அனுப்பும் செலவு)
கட்டுரைகள் 

எல்லாத் தலைப்பும் உங்களுக்குத் தெரிந்ததுதான். அனுதினமும் இலையில் பரிமாறப்படும்  நாம் அறிந்த காய்கறிகள் போன்றவைதான். ஆனால், ருசியில்  பேதமுண்டல்லவா? உங்கள்  வாழ்வு சுவையானதா? உவர்ப்பானதா? மண்டைக்கு ஏறும் காரமா? திகட்டும் இனிப்பா? முஷ்டியை மடக்கியபடி இருக்கும் வன்மமா? என இந்நூலை வாசிக்கும் கணந்தோறும் உங்களை நீங்களே பார்த்தபடி இருப்பீர்கள்.

இந்த நூல், தகிக்கின்ற கோடையில் நிழல் தரும் குடை.  திசை அறியாது பயணிப்போரின் திசைகாட்டி.
- கிருஷ்ணா 





 

வந்தே மாதரம்- சி.சு.செல்லப்பா





வந்தே மாதரம்- சி.சு.செல்லப்பா

சிறுகதைகள்


Price 200/-
-------------
சி.சு.செல்லப்பா – தமிழகம் உணராத ஒரு வாமனாவதார நிகழ்வு. 

புனைகதை எழுத்துக்கள் பொழுதுபோக்கிற்காக, வாசகர் கவனத்தை ஈர்க்க, அவர் மனம் குதூகலிக்க எழுதப்படுபவையே அல்லாது பிரபந்தங்கள், காவியங்கள், சங்க இலக்கியங்கள் வகையில் இன்று எழுதப்படுபவை என்ற எண்ணம் அன்றைய சூழலில் இருக்கவில்லை. என்றுமே இருந்ததில்லை என்றும்தான் தோன்றுகிறது.

அவர் எழுத்துக்களும், கதைகள் மாத்திரமல்ல, தீவிரமாக முனைந்து செய்த அவரது செயல்களும் பழம் மதிப்புகளை அவற்றின் சாரத்தில் நம்பிக்கை கொண்டு தன் வாழ்க்கையையும் எழுத்தையும் தீர்மானித்துக் கொண்ட வையாகவே இருந்துள்ளன.

- வெங்கட் சாமிநாதன்
-------------
 




புத்தகங்களின் விலைப்பட்டியல் (QR Code)


கோவை புத்தகத் திருவிழாவில் மட்டுமே பங்குபெறும் சிறுவாணி வாசகர் மையம், பவித்ரா பதிப்பகப் புத்தகங்களின் விலைப்பட்டியல் அறிவதற்கான க்யூ ஆர் கோடு(QR Code) இணைக்கப்பட்டுள்ளது.



 


சிட்டி (பெ.கோ. சுந்தரராஜன்) சிறுகதைகள்

சிட்டி (பெ.கோ. சுந்தரராஜன்) சிறுகதைகள் சிட்டியின் கதைகள் அக்காலத்தில் எழுதப்பட்டிருந்தாலும் இன்றைய சமூகக் கோட்பாடுகளுக்கும் நிலைக்கும் ஏற்றவ...