Tuesday, October 16, 2018

Siruvani Vasagar maiyam-2017

சிறுவாணி வாசகர் மைய'த்தின் முதல் நூல் நாஞ்சில் நாடன் அவர்களின் 'நவம்' 
உலக புத்தக தினமாகிய நேற்று (23.04.2017)வெளியாகி விட்டது. 
விரைவில் மேலும் பல மகத்தான எழுத்தாளர்களின் சிறந்த நூல்கள் ஒவ்வொரு மாதமும்.
************************************************************************************************************

Siruvani Vasagarmaiyam
February 9, 2017
அன்பு நண்பர்களே
வணக்கம்.
திருமதி லக்ஷ்மி கிருஷ்ணமூர்த்தி அவர்கள் நடத்திய வாசகர் வட்டம், திரு. ப. லக்ஷ்மணன்அவர்கள் நடத்தி வரும் இலக்கிய சிந்தனை ஆகியவற்றினை முன்மாதிரியாகக் கொண்டுதான் சிறுவாணி வாசகர் மையம் தொடங்கி இருக்கிறோம்.

இலக்கிய சமூக நற்சிந்தனை உள்ள நூல்களை லாப நோக்கின்றி மாதம் ஒரு நூலாக வாசகர் இருக்கும் இடத்திற்கே அனுப்புகின்றோம்.
அவைகள் ஆகச்சிறந்த படைப்புகளின் புதியவைகளாகவோ அல்லது மறுபதிப்புப் பாராத சிறந்த படைப்புகளாகவும் இருக்கலாம்.

முதல் நூலாக சாகித்ய விருதாளர் திரு. நாஞ்சில் நாடன் அவர்களின் புதிய படைப்பை அவரது வாழ்த்துக்களோடு அளிக்க இருக்கின்றோம்.
இவ்வாசகர் மையத்தை
மூத்த எழுத்தாளர் திரு. அசோகமித்திரன் அவர்களும்,திரு எஸ்.ரா அவர்களும் வாழ்த்தி உற்சாகப் படுத்தியிருக்கிறார்கள்.

மேலும் திரு பாரதி கிருஷ்ணகுமார்,திரு.வ.ஸ்ரீநிவாசன்,
திரு.ரவீந்திரன் ஆகியோர் தங்களது மேலான ஆலோசனைகளால் எங்களை வழிநடத்தவுள்ளார்கள்.

அதனால் நாங்கள் நம்பிக்கையாய் இதற்கான முதற் கட்டப் பணியான வாசகர்களின் சேர்க்கைப் பணியைச்
செய்து கொண்டிருக்கின்றோம்.

தாங்களும் வாழ்த்தி தங்கள் நண்பர்களுக்கும் மாணவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தி.சுபாஷிணி-தலைவர்

பிரகாஷ்-ஒருங்கிணைப்பாளர்
*******************************************************************************************************************

பொன். குமார்
புத்தக வரவு...

கவிதைகள், நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள் என பல தளத்தில் இயங்கி வந்தாலும் படைப்புகளுக்கு ஈடாக கட்டுரைகளையும் எழுதி வருகிறார். இது வரை 12 கட்டுரைத் தொகுப்புகளைத் தந்துள்ளார். 13 ஆம் தொகுப்பாக ' நவம் ' என்னும் கட்டுரைத் தொகுப்பு வந்தாலும் இத்தொகுப்பிலுள்ள கட்டுரைகள் தேர்ந்தெடுக்கப் பட்டவைகளாகும். சிறுவாணி வாசகர் மையம் சார்பாக பவித்ரா பதிப்பகம் வெளியிட்டுள்ளது
************************************************************************************

Suresh Venkatadri
May 13, 2017 ·

கோவை சிறுவாணி வாசகர் மையம்,வெளியிட்டிருக்கும்,நாஞ்சில் நாடன் அவர்களின் ' நவம்' கட்டுரைத்தொகுதி கிடைக்கப் பெற்றேன்.ஒருமை என்பதில் துவங்கி,தசம் வரை எண்கள் சார்ந்த சொற்களை அவற்றின், மரபு சார்ந்த வரலாறு அரசியல் என்று பேசும் கட்டுரைகளைக் கொண்ட தொகுதி.இதன் பல கட்டுரைகளை தமிழினி இதழ்,சொல்வனம் இணைய இதழ் ஆகியவற்றில் படித்திருந்தாலும்,ஒரு தொகுப்பாக படிப்பது வேறு ஒரு அனுபவத்தைத் தரக்கூடும்.நூலின் வடிவமைப்பும்,நிறமும் அழகாக உள்ளன.நன்றி, Raveendran Ramasamy ,Prakash GR...

**********************************************************************************













No comments:

கனவு மழை -வ.ஸ்ரீநிவாசன் சிறுகதைகள்

கனவு மழை வ.ஸ்ரீநிவாசன் சிறுகதைகள்  பக்கங்கள்;166          விலை;ரூ 180/- நாஞ்சில்நாடன் அனைத்துக் கதைகளிலுமே நேர்த்தியான முதிர்ச்சி தெரிகிறது....