மே 2019
"உரையாடும் காந்தி"
எழுத்தாளர் ஜெயமோகன்
https://m.jeyamohan.in/121174#.XMPUbh5X40M
சிறுவாணி வாசகர் மையம் பற்றியும்.......
நன்றி:திரு.ஜெயமோகன்
------------------------------------------------------------------------------------------------
lakshmi krishnamurthy- vasagar vattam
---------------------------------------------------------------------------------------------------
சகமனிதனைக் குறித்த குற்றச்சாட்டுகளும் வெறுப்புணர்ச்சிகளும் நிறைந்துபெருகி தொடர்ந்துவரும் இக்காலச்சூழலில், எதிர்தரப்புக்கும் ஒரு நியாயம் இருந்தால் அது என்னவாக இருக்கும்? எதிர்தரப்பு நியாயங்களும் மனம்கூர்ந்து கேட்கப்பட வேண்டியதே என்கிற காந்தியின் அணுகுமுறை நம்மை அமைதியை நோக்கி அழைத்துச் செல்கிறது.
காந்தியின் வாழ்வுநிகழ்வுகளையும் சாட்சி வார்த்தைகளையும் வரலாற்றுப் பின்புலத்தோடு இன்றைய இளமனங்களுக்குக் கொண்டுசேர்க்கும் நூல்களில் ஒன்றாக ஜெயமோகன் எழுதிய 'உரையாடும் காந்தி' உள்ளது. காந்தியின் மீதான உளப்புரிதலை ஆழப்படுத்தும் ஒரு படைப்பாக அது மெல்லமெல்ல உருக்கொள்கிறது.
சிறுவாணி வாசகர் மையத்தின் தோழமைகள், தன்னறம் நூல்வெளியின் உரையாடும் காந்தி புத்தகத்தை... இந்நிகழ்காலச் சூழலில் தங்களுடைய வாசிப்பு வட்டத்துக்குள் இணைத்துக்கொண்டது மிகுந்த நிறைவினையும் நம்பிக்கையினையும் அளிக்கிறது. குக்கூ நிலத்திலிருந்து, சிறுவாணி வாசகர் வட்டத் தோழமைகள் அனைவருக்குமான ஒரு பிரார்த்தனையை இவ்வெளி சேர்க்கிறோம்.
Prakash GR Subashini Tirumalai சிறுவாணி வாசகர் மையம்
27.04.2019
தன்னறம் நூல்வெளி
http://thannaram.in/
------------------------------------------------------------------------------------------
"காந்தியை
மட்டுமல்ல எந்த ஒரு ஆளுமையை அறிவதற்கும் நாம் நமது ஆன்மாவைக் கொண்டு அதன் ஆன்மாவை
உரசிப்பார்ப்பதே முறை என்று தோன்றுகிறது.
திறந்த மனதோடு
முன் முடிவுகள் ஏதும் இல்லாமல், நம் மனசாட்சிக்கு
சரி என தோன்றுவதை அந்த ஆளுமை வரலாற்றின் அந்தத் தருணத்தில் எப்படிக் கையாண்டது
என்று பார்ப்பதன் வழியாகவே நாம் அந்த ஆளுமையை மதிப்பிட முடியும்".
ஜெயமோகன்
---------------------------------------------------------------------------------------------------------------------
No comments:
Post a Comment