பிப்ரவரி 2020 வெளியீடு
ஆனந்த வெள்ளம்
(கி.வா.ஜ வின் தேர்ந்தெடுத்த கட்டுரைகள்)
பதிப்பாசிரியர் முனைவர் ப.சரவணன்
பக்கங்கள் 190 விலை ரூ 200/-
02. 02. 2020
நாஞ்சில்நாடன் விருது விழாவில் ஆனந்த வெள்ளம்
வெளியிடப்பட்டதன் சிறப்புகள்
1 .முதலாம் ஆண்டு நாஞ்சில் நாடன் விருது(2018) பெற்ற ஜீவா வால் அட்டைப்படம் வடிவமைக்கப்பட்டு ,இரண்டாமாண்டு நாஞ்சில்நாடன் விருது(2019) பெற்ற முனைவர் ப.சரவணன் பதிப்பாசிரியராக இருக்க, மூன்றாம் ஆண்டு(2020) விழாவில் வெளியிடப்பட்டது.
2.மகா மகோபாத்தியாய உ.வே.சா அவர்களின் பல்வேறு நூல்களை தொகுத்த முனைவர் ப. சரவணன் பதிப்பாசிரியராக இருந்து வெளிவருவது.
3.வாகீச கலாநிதி கி.வா.ஜ அவர்களிடம் சிலகாலம் மாணவராக இருந்த பேராசிரியர் கண. சிற்சபேசன் அவர்களால் வெளியிடப்பட்டது .
4.உ.வே.சா போன்ற தமிழ் அறிஞர்கள் வருகைதந்த சேக்கிழார் இல்லத்தின் சிவக்கவிமணி C.K.சுப்பிரமணிய முதலியார் அவர்களது (குருபூஜை நாளில்)
பேரர்கள் திரு.K.சிவசுப்பிரமணியன்,
திரு.K.கந்தசாமி நூலைப் பெற்றுக் கொண்டது .
----------------------------------------------------------------------------------------------------------------------
----------------------------------------------------------------------------------------------------------------------
No comments:
Post a Comment