Wednesday, February 16, 2022

ஆண்டுக் கட்டணம்- புதுப்பித்தல் அறிவிப்பு

 








சிறுவாணி  வாசகர் மையத்தின் "மாதம் ஒரு நூல் " திட்டம் பற்றி அறிவித்துத் துவங்கிய முயற்சிக்குத் தாங்கள் அளித்துவரும் ஆதரவு க்கு முதலில் நன்றி.


சிறுவாணி  வாசகர்  மையம் வணிகநோக்கின்றி முழுக்கச் சிறந்த படைப்புகளை வாசகர்களிடம் கொண்டுசெல்லும் வகையில் செயல்படுவது தாங்கள் அறிந்ததே.

வாசகர் வட்டம், இலக்கியச் சிந்தனை அமைப்புகளை முன்மாதிரியாகக் கொண்டு துவங்கிய சிறுவாணி வாசகர் மையம் தொடர்ந்து நல்ல படைப்புகளைத் தரும் என உறுதியளிக்கிறோம்.

மார்ச்--2022 உடன் ஐந்தாம் வருடச் சந்தா முடிவடைகிறது.
(12 புத்தகங்கள்)

ஏப்ரல் 2022-மார்ச் 2023 (ஆறாம்) ஆண்டுக்கான 
கட்டணம் ரூ.1800 /-
பிற மாநிலங்களுக்கு ரூ 2200 /-
(தபால் செலவு உட்பட).

தங்கள் ( ஏப்ரல் 2022-மார்ச் 2023) சந்தாவைப் புதுப்பித்துத்  தொடர்ந்து ஆதரவு தருவதோடு , தங்கள் ஒவ்வொருவரும் உடன் இன்னொருவரையும்  சிறுவாணி வாசகர் மையத்தில் இணைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தங்கள் அன்புக்கும், துணையிருப்புக்கும் மீண்டும் மனமார்ந்த 
நன்றி.

தி.சுபாஷிணி
ஜி.ஆர்.பிரகாஷ் 
9940985920
சிறுவாணி வாசகர்  மையம்.
----------------------------------------------------------------------------------------------------
அன்புள்ள சிறுவாணி வாசகர் மையம் உறுப்பினர்களுக்கு,

இம்மாத (மார்ச்) இறுதிக்குள் ஏப்ரல்2022-மார்ச் 2023 க்கான ஆண்டுக் கட்டணத்தைப் புதுப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

உறுப்பினர்களின்  வருடக் கட்டணம் ஒன்றை மட்டுமே வைத்து சிறுவாணி வாசகர் மையம்  புத்தகங்களை வெளியிடுகிறது.
இதைத் தவிர வேறு எந்த விதத்திலும் எந்தத் தொகையும் பெறுவதில்லை.

எனவே குறிப்பிட்ட கால அளவிற்குள் ஆண்டுக் கட்டணம் செலுத்தப்பட்டால் பேருதவியாக இருக்கும்.

தங்கள் ஒத்துழைப்பிற்கும், தொடர்ந்த ஆதரவிற்கும் நன்றி.

ஜி.ஆர்.பிரகாஷ்
ஒருங்கிணைப்பாளர் 
சிறுவாணி வாசகர் மையம்
99409 85920


No comments:

சிறுவாணி வாசகர் மையம் பற்றி... 2017-2025 ஒன்பதாம் ஆண்டில்....

 சிறுவாணி வாசகர் மையம் பற்றி..... கோவையில் சிறுவாணி வாசகர் மையம் 2017 உலகப் புத்தக தினம் அன்று துவக்கப்பட்டது. வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக...