Friday, April 5, 2024

சிங்கப்பூர் வாசகர் வட்ட ஆண்டுவிழாவில் எழுத்தாளர் . நாஞ்சில் நாடன்

 

https://www.facebook.com/sangamam.sg/videos/427007093198709


https://www.tamilmurasu.com.sg/lifestyle/story20240318-148167?fbclid=IwAR2i5STotX-QcEP0R_zLu9jr7OuaKZjPpsLwQwrVySbLNEsWYhi6wZ-NhMg




நேற்று நடைபெற்ற வாசகர் வட்ட ஆண்டுவிழாவில் சிறப்புரையாற்றிய சாகித்ய விருதுபெற்ற எழுத்தாளர் திரு. நாஞ்சில் நாடன் அவர்கள், சிங்கப்பூர் மற்றும் மலேசியாவின் இலக்கிய வளர்ச்சியைப் பாராட்டினார். மேலும், சிறுவாணி வாசகர் மையம் நடத்திய, ரா.கி.ரங்கராஜன் நினைவுச் சிறுகதைப்போட்டிக்கு வந்திருந்த 500க்கும் மேற்பட்ட சிறுகதைகளில் பரிசுக்குரியதாக 12 சிறுகதைகளைத் தான் தேர்ந்தெடுத்ததாகவும் அவற்றில் 2 சிறுகதைகள் சிங்கப்பூரிலிருந்து வந்தவை என்றும் குறிப்பிட்டார். 

அவ்விரு சிறுகதைகள், எழுத்தாளர் தமிழ்ச்செல்வி இராஜராஜன் அவர்களது 'பெண்ணானவள்' மற்றும் என்னுடைய ‘பெருந்தீ’. 


தமிழ் இலக்கியத்தின் முக்கியப் படைப்பாளர் இதைக் குறிப்பிட்டது எனக்கு மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது. எழுத்தாளர் திரு. நாஞ்சில் நாடன் ஐயா அவர்களுக்கு  நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.


விழாவின் ஏற்பாட்டாளர்கள் திரு.ஷாநவாஸ், திருவாட்டி சித்ரா ரமேஷ் இருவருக்கும் வாழ்த்துகள்.


புகைப்பட உதவி: திரு. தியாக இரமேஷ்     Manimala mathialagan

No comments:

சிறுவாணி வாசகர் மையம் பற்றி... 2017-2025 ஒன்பதாம் ஆண்டில்....

 சிறுவாணி வாசகர் மையம் பற்றி..... கோவையில் சிறுவாணி வாசகர் மையம் 2017 உலகப் புத்தக தினம் அன்று துவக்கப்பட்டது. வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக...