கோவையிலிருந்து செயல்பட்டுவரும் "சிறுவாணி வாசகர் மையம்" ஆண்டுதோறும் சமகாலத்தில் வாழும் படைப்பாளுமையான திரு.நாஞ்சில்நாடன் பெயரில் விருதுவழங்கி வருகிறது.
2020 க்கான "நாஞ்சில்நாடன் விருது" எழுத்தாளரும், பத்திரிகையாளருமான கா.சு.வேலாயுதன் அவர்களுக்கு வழங்கப்பட உள்ளது.
2020 , பிப்ரவரி 02 இல் கோவையில் "ஆர்த்ரா ஹாலில்" நடைபெறவுள்ள "நாஞ்சில் நாடன் விருது"விழாவிற்கு
திரு.நாஞ்சில்நாடன் தலைமை ஏற்கிறார்.
விழாவில் பேராசிரியர்.கண.சிற்சபேசன் விருது வழங்குகிறார். விஜயா பதிப்பகம் திரு.மு.வேலாயுதம், திரு.வ.ஸ்ரீநிவாசன் ஆகியோர் வாழ்த்துரை வழங்குகிறார்கள்.
விருது பற்றி....
கலை, இலக்கியம் , சமூகம் ஆகிய துறைகளில் நேர்மையாகவும் துணிச்சலாகவும் தொடர்ந்து செயல்படுபவர்களுக்கு வழங்கப்படும் நாஞ்சில் நாடன் விருது , பரிசுத் தொகை ரூபாய் 50,000 , பாராட்டுப் பத்திரம் மற்றும் விருதுச் சிற்பம் அடங்கியது .
2018 இல் ஓவியர் ஜீவா அவர்களுக்கும்,
2019 ஆம் ஆண்டு
முனைவர் ப. சரவணன் அவர்களுக்கும் நாஞ்சில்நாடன் விருது வழங்கப்பட்டது.
------------------
சிறுவாணி வாசகர் மையம் பற்றி.....
கோவையில் சிறுவாணி வாசகர் மையம் 2017 உலகப் புத்தக தினம் அன்று துவக்கப்பட்டது. வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிப்பதையும், சிறந்த எழுத்தாளர்களின் எழுத்துக்களை இன்றைய தலைமுறைக்குக் கொண்டு செல்லும் பணியையும் இந்த மையம் செய்து வருகிறது .
இந்த அமைப்பின் மூலம் "மாதம் ஒரு நூல்" எனச் சிறந்த படைப்புகள் உறுப்பினர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. இதன் தலைவராக
தி சுபாஷிணி, ஒருங்கிணைப்பாளராக ஜி ஆர் பிரகாஷ் ஆகியோர் உள்ளனர்.
கௌரவ ஆலோசகர்களாக
திரு.நாஞ்சில் நாடன், திரு.வ.ஸ்ரீநிவாசன், திரு.ஆர்.ரவீந்திரன் (RAAC)ஆகியோர் வழிநடத்துகின்றனர்.
-------------
நன்றி- அந்தி மழை
2020 க்கான "நாஞ்சில்நாடன் விருது" எழுத்தாளரும், பத்திரிகையாளருமான கா.சு.வேலாயுதன் அவர்களுக்கு வழங்கப்பட உள்ளது.
2020 , பிப்ரவரி 02 இல் கோவையில் "ஆர்த்ரா ஹாலில்" நடைபெறவுள்ள "நாஞ்சில் நாடன் விருது"விழாவிற்கு
திரு.நாஞ்சில்நாடன் தலைமை ஏற்கிறார்.
விழாவில் பேராசிரியர்.கண.சிற்சபேசன் விருது வழங்குகிறார். விஜயா பதிப்பகம் திரு.மு.வேலாயுதம், திரு.வ.ஸ்ரீநிவாசன் ஆகியோர் வாழ்த்துரை வழங்குகிறார்கள்.
விருது பற்றி....
கலை, இலக்கியம் , சமூகம் ஆகிய துறைகளில் நேர்மையாகவும் துணிச்சலாகவும் தொடர்ந்து செயல்படுபவர்களுக்கு வழங்கப்படும் நாஞ்சில் நாடன் விருது , பரிசுத் தொகை ரூபாய் 50,000 , பாராட்டுப் பத்திரம் மற்றும் விருதுச் சிற்பம் அடங்கியது .
2018 இல் ஓவியர் ஜீவா அவர்களுக்கும்,
2019 ஆம் ஆண்டு
முனைவர் ப. சரவணன் அவர்களுக்கும் நாஞ்சில்நாடன் விருது வழங்கப்பட்டது.
------------------
சிறுவாணி வாசகர் மையம் பற்றி.....
கோவையில் சிறுவாணி வாசகர் மையம் 2017 உலகப் புத்தக தினம் அன்று துவக்கப்பட்டது. வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிப்பதையும், சிறந்த எழுத்தாளர்களின் எழுத்துக்களை இன்றைய தலைமுறைக்குக் கொண்டு செல்லும் பணியையும் இந்த மையம் செய்து வருகிறது .
இந்த அமைப்பின் மூலம் "மாதம் ஒரு நூல்" எனச் சிறந்த படைப்புகள் உறுப்பினர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. இதன் தலைவராக
தி சுபாஷிணி, ஒருங்கிணைப்பாளராக ஜி ஆர் பிரகாஷ் ஆகியோர் உள்ளனர்.
கௌரவ ஆலோசகர்களாக
திரு.நாஞ்சில் நாடன், திரு.வ.ஸ்ரீநிவாசன், திரு.ஆர்.ரவீந்திரன் (RAAC)ஆகியோர் வழிநடத்துகின்றனர்.
-------------
No comments:
Post a Comment