Friday, January 3, 2020

சிறுவாணி வாசகர் மையம் - அறிவிப்பு






அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள். 

2017  புத்தாண்டு தினத்தன்று சிறுவாணி  வாசகர் மையத்தின் "மாதம் ஒருநூல் " திட்டம் பற்றி அறிவித்துத் துவங்கிய முயற்சிக்குத் தாங்கள் அளித்துவரும் ஆதரவு க்கு முதலில் நன்றி.

சிறுவாணி  வாசகர்  மையம் வணிகநோக்கின்றி முழுக்கச் சிறந்த படைப்புகளை வாசகர்களிடம் கொண்டுசெல்லும் வகையில் செயல்படுவது தாங்கள் அறிந்ததே.

வாசகர் வட்டம், இலக்கியச் சிந்தனை அமைப்புகளை முன்மாதிரியாகக் கொண்டு துவங்கிய சிறுவாணி வாசகர் மையம் தொடர்ந்து நல்ல படைப்புகளைத் தரும் என உறுதியளிக்கிறோம்.

மார்ச்--2020 உடன் மூன்றாம் வருடச் சந்தா முடிவடைகிறது.
(12 புத்தகங்கள்)

ஏப்ரல் 2020- மார்ச் 2021 க்கான நான்காம் ஆண்டுக்கான 
கட்டணம் ரூ 1600 /-
பிற மாநிலங்களுக்கு ரூ 2000 /-
(தபால் செலவு உட்பட).

இப்போதிலிருந்தே தங்கள் ( ஏப்ரல் 2020-மார்ச் 2021) சந்தாவைப் புதுப்பித்துத்  தொடர்ந்து ஆதரவு தருவதோடு , தங்கள் ஒவ்வொருவரும் உடன் இன்னொருவரையும்  சிறுவாணி வாசகர் மைய உறுப்பினர்களாகச்  சேர்க்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
பள்ளி,கல்லூரிகளின் நூலகங்களோடும் கைகோர்க்க விரும்புகிறோம்.

தங்கள் அன்புக்கும், துணையிருப்புக்கும் மீண்டும் மனமார்ந்த 
நன்றி.

தி.சுபாஷிணி
ஜி.ஆர்.பிரகாஷ் 
சிறுவாணி வாசகர்  மையம்.








நன்றி-
எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள்,

அந்திமழை ஜனவரி 2020

No comments:

கனவு மழை -வ.ஸ்ரீநிவாசன் சிறுகதைகள்

கனவு மழை வ.ஸ்ரீநிவாசன் சிறுகதைகள்  பக்கங்கள்;166          விலை;ரூ 180/- நாஞ்சில்நாடன் அனைத்துக் கதைகளிலுமே நேர்த்தியான முதிர்ச்சி தெரிகிறது....