Sunday, July 12, 2020

ரா.கி.ரங்கராஜன் நினைவுச் சிறுகதைப் போட்டி-2020

சிறுவாணிவாசகர் மையம் வழங்கும்


ரா.கி.ரங்கராஜன் நினைவுச் சிறுகதைப் போட்டி- 2020
"மாதம் ஒரு நூல்" என உறுப்பினர்களுக்குச் சிறந்த நூல்களை அளித்து வரும் கோவை சிறுவாணி வாசகர் மையம், எழுத்தாளர் ரா.கி.ரங்கராஜன் அவர்கள் நினைவாகச் சிறுகதைப் போட்டி ஒன்றை நடத்துகிறது. இளம்தலைமுறையினரிடம் இருந்தும், இதர படைப்பாளிகளிடமிருந்தும் சிறந்த படைப்புகளை வரவேற்கிறது.
பரிசுகள் முறையே ரூ.10,000/-, ரூ.7500/-,ரூ.5,000/- ற்றும்10கதைகளுக்கு தலா ரூ. 1,000/- சிறப்புப் பரிசும் உண்டு.

நிபந்தனைகள்

1.தமிழில் யூனிகோட் எழுத்துருவில் டைப் செய்து மின்னஞ்சலில் அனுப்பவேண்டும். A4 Size Word Format ல் 5 அல்லது 6 பக்கங்கள் வரலாம்


2.அனுப்பிவைப்பவரின் முழு விவரங்கள்(முகவரி,தொடர்பு எண்,மின்னஞ்சல் முகவரி) மற்றும் சிறுகதை இதுவரை எந்தவடிவிலும் வேறெங்கும் பிரசுரிக்கப்படவில்லை என்ற உறுதிமொழியுடன் அனுப்பவேண்டும்.


3.சிறுகதைகள் வந்துசேர வேண்டிய கடைசி நாள்: 30 செப்டம்பர் 2020.


4.ஒருவர் எத்தனை கதைகள் வேண்டுமானாலும் அனுப்பலாம்.


5.தேசத்திற்கோ, எந்தவொரு பால், இன,மத,ஜாதி,மொழிக்கோ எதிரான கருத்துகள் இடம்பெறக்கூடாது.


6.கதைகளின் காப்புரிமை ஆசிரியர்களையும் புத்தகக் காப்புரிமை பதிப்பகத்தையும் சார்ந்தது. வெற்றி பெற்ற படைப்புகள் பற்றிய விவரம்,டிசம்பர் 2020 ல் வெளியிடப்படும்.


7.கதைகள் தொடர்பாக கடித/தொலைபேசித் தொடர்புகளைத் தவிர்க்கவும்.

8.நடுவர்களால் தேர்ந்தெடுக்கப்படும் ரா. கி ரங்கராஜன் நினைவுச் சிறுகதை போட்டி - 2020 கதைகளுக்கான பரிசுகள் நாஞ்சில்நாடன் விருது 2021 விழாவில் வழங்கப்படும். அக்கதைகள் விழாவில் புத்தகமாகவும் வெளியிடப்படும்.

9.நடுவர்களின் முடிவே இறுதியானது.

10.சிறுகதைகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் -

svmshortstories2020@gmail.com





No comments:

"தென்றல்"இணைய இதழில் சிறுவாணி வாசகர் மையம் பற்றிய நேர்காணல்.

  தென்றல் பேசுகிறது... Jan 2024 கையில் இருக்கும் செல்பேசியில் 10 வார்த்தையைத் தாண்டி வாசிக்கத் தயங்கும் இந்த யுகத்தில் சிறந்த நூல்களை வாங்கி...