சிறுவாணி வாசகர் மையம்
வழங்கும்
நாஞ்சில்நாடன் விருது 2021
வரவேற்புரை
திருமதி தி சுபாஷிணி
விருது பற்றிய அறிமுகம்
திரு.ரவீந்திரன்
தலைமை/வாழ்த்துரை
திரு நாஞ்சில் நாடன்
விருது பெறுபவர்
திரு.மு.ஹரிகிருஷ்ணன்
விருது வழங்கி உரை
பேராசிரியர் க.ரத்னம்
வாழ்த்துரை
திரு.வ ஸ்ரீநிவாசன் திரு.ஜெ.பாஸ்கரன்
5.30-6.00 மணிக்கு
செல்வி ஸ்ரீயா பாட்டும், செல்வி.வெ.ஸ்ரீநிதி பரதமும்...
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு
திருமதி.சுதா கிருஷ்ணமூர்த்தி உடன் செல்வி.பி.பவித்ரா.
கடந்த ஆண்டுகளில் நாஞ்சில்நாடன் விருதுபெற்றவர்கள்
ஓவியர் ஜீவா(2018) முனைவர் ப.சரவணன்(2019)
திரு.கா.சு.வேலாயுதன்(2020)
நாள் 11.04.2021
ஞாயிறு மாலை 5.30 முதல்....
-------------------------------------------------------------------------------------------------------------------
திரு.மு.ஹரிகிருஷ்ணன்
1974ல் சேலம் மாவட்டம் மேட்டூர் வட்டம் ஏர்வாடியில் பிறந்தவர் மு.ஹரிகிருஷ்ணன்.
எளிய பின்புலத்தில் வந்த இவர், மேட்டூர் அரசு தொழிற் பயிற்சி மையத்தில் , ஐடிஐ, படித்து, தற்போது சேலம் இரும்பாலையில் தொழில்நுட்பவியலாளராகப் பணியாற்றி வருகிறார்...
தவசி கருப்புசாமி என்றறியப்படும் இவர் கட்டுரையாளர், தொகுப்பாசிரியர், சிறந்த சிறுகதையாளர், இதழாசிரியர், தொன்மைக்கலை மீட்பாளர், ஆவணப்பட இயக்குனர் ,நிகழ்த்து கலைஞர் , தனித்துவமான படைப்பாளி போன்ற பல்வேறு பரிமாணங்கள் கொண்டவர்.
கலையும்,இலக்கியமும் சமூகத்தை செழுமைப்படுத்தவும், கட்டமைக்கவும் பெரிதும் உதவும் என்ற திண்ணிய எண்ணத்தோடு கலை,இலக்கியத் துறைகளில் பெரும் பங்கு ஆற்றி வருகிறார்..
இலக்கியப் பங்களிப்புகள் :-
• மயில்ராவணன், நாயிவாயிச்சீல, குன்னூத்தி நாயம் ஆகியன அவரது சிறுகதைத் தொகுப்புகள்.
• அருங்கூத்து கொங்குமண்டல நிகழ்த்துக் கலைஞர்களின் நேர்காணல்கள் அடங்கிய தொகை நூல் .
• அழிபசி, தாண்டுகால், அங்குசம் ஆகியவை இவரது கவிதைத் தொகுதிகள்.
•மணல்வீடு என்ற சிற்றிதழை கடின உழைப்போடும் அர்ப்பணிப்போடும் தொடர்ந்து மிகச் சிறப்பாக நடத்தி வருகிறார்.
• மணல் வீடு பதிப்பகம் மூலம் நவீன இலக்கியத்தின் முக்கியமான நூல்களை வெளியிட்டுக் கொண்டிருப்பவர் .
• மணல் வீடு இலக்கிய வட்டம் மூலமாக இலக்கிய விருதுகளும் வழங்கி வருகிறார்
தொல்லியல் கலைப் பங்களிப்புகள்:-
• கூத்து மகத்தான கலை. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முந்திய தொன்மையும் பழமையும் வாய்ந்தது மாத்திரமல்ல, அது நமது ஒப்பற்ற பண்பாட்டு அடையாளமுமாகும். மனிதனுக்கு மண் அளித்த மாபெருங்கொடையென்று திடமாக உணர்ந்திருக்கும் திரு மு.ஹரிகிருஷ்ணன் - கூத்து, பாவைக்கூத்து, மரப்பாவைகூத்து, தோற்பாவைக் கூத்து கட்டபொம்மலாட்டம்,சேவாட்டம் உள்ளிட்ட கொங்குமண்டல நாட்டார் நிகழ்த்துக்கலைகள், தொல்கலைகளை அதன் மரபார்ந்த கலைத்தொன்மத்தோடு தொடர்ந்து நிகழ்த்தியும், மறுஅறிமுகமும் செய்து வருகிறார்.
• வளர் தலைமுறையினருக்கு நமது தொல்கலைகள் குறித்த கவனத்தையும் விழிப்புணர்வையும் உண்டாக்கும் முயற்சியாகவும், ஆதாரப்படிவம் மாறாது அவற்றை அவர்களுக்கு பயிற்றுவிக்கவும் கூத்துப்பள்ளி ஒன்றினை சேலம் மாவட்டம் ஏர்வாடியில் தொடங்கி நடத்தி வருகிறார்.
• தொன்மக் கலையான கூத்து நிலைபெற்று நிற்க வேண்டுமெனில் அதன் நிகழ்த்துனர்கள் வாழ்வியல் பொருளாதார மேம்பாடுடையதாகவும், கலைஞர்கள் உளப்பாங்கு இடுக்குகள் சிணுக்கங்களற்றதாகவும் இருக்கவேண்டுமென்பதைத் தெளிந்து - அதன் வழி அவர்தம் வாழ்வாதாரத்தை உயர்த்தும்படியான பொருளாதாரச் சூழலை உருவாக்கும் பொருட்டும் தொல்கலைகளை மீட்டெடுப்பதோடு ஒப்பற்ற நமது அடையாளங்களாக வளர் தலைமுறையினர்க்குக் கையளிக்கும் பொருட்டும் கடந்த 2007-ம் ஆண்டு “களரி தொல்கலைகள்& கலைஞர்கள் மேம்பாட்டு மையத்தைத் துவக்கினார்.
• சமூகத்தின் கடை கோடியில் வாழ்ந்துவரும் விளிம்புநிலை நிகழ்த்துக் கலைஞர்கள் மீளமுடியாத வறுமையில் உழன்றபோதிலும் தம், உடல், பொருள், ஆவி ஈந்து அந்த அரிய கலைகளுக்கு உயிரூட்டி வரும் அவர்களுக்கு உரிய அங்கீகாரத்தை வழங்கச்செய்வதுடன், அவர்தம் வாழ்வாதாரத்தை உயர்த்தும்படியான பொருளாதாரச் சூழலை உருவாக்குவதும் நமது இன்றியமையாத கடப்பாடு ஆகும்.கலைஞர்கள் வாழ்வை மேம்படுத்துவதன் மூலம் தொல்கலைகளை மீட்டெடுக்கும் முனைப்புடன் களரி தொல்கலைகள்& கலைஞர்கள் மேம்பாட்டு மையம் செயல்பட்டு வருகிறது.
• முதற்கட்டமாக கொங்கு மண்டல கலைவடிவங்களான கூத்து, பாவைக்கூத்து, கட்ட பொம்மலாட்டம் ஆகியனவற்றை கலைநுகர்வு பரப்பில் கவனப்படுத்தும்படியாக சங்கீத் நாடக அகாதமி சார்பில் சென்னை, டில்லி, கௌஹாத்தி உட்பட பிற மாநிலங்களில் நிகழ்வுகள் நடத்தப்பட்டது .
• சேலம் மண்டல கலைபண்பாட்டு மையம் வாயிலாக ஈரோடு மாவட்ட கூத்துக்கலைஞர்கள் நாற்பது பேர்களுக்கு வீட்டு மனை பெற்றுத் தந்தது.
• கலைஞர் பெருமக்களை உத்வேகப்படுத்தும் நோக்கில் கடந்த ஐந்து வருடங்களாக விழா எடுத்து பாராட்டுக்களோடு பரிசுத்தொகைகள் வழங்கி கௌரவித்திருக்கிறது.
• மூத்த கலைஞர்களுக்கு அரசு வழங்கும் நல உதவிகள் பெற்றுத்தருவது உட்பட எண்பதுக்கும் மேற்பட்ட நிகழ்த்துக்கலைஞர்களை நாட்டுப்புற கலைஞர்கள் நலவாரியத்தில் உறுப்பினர்களாகச்சேர்த்து கல்வி மற்றும் மருத்துவ உதவிகள் பெற களப்பணி ஆற்றியிருக்கிறது.
• கலைகளோடு கலைஞர்கள் வாழ்வியலையும் ஆவணப்படுத்தும் முயற்சியில் “அருங்கூத்து” என்றதோர் தொகைநூற்பிரதியையும், வெளியிட்டிருக்கிறது.
• பெண் பொம்மலாட்டக்கலைஞர் பெரிய சீரகாப்பாடி சரோஜா-முத்துலட்சுமி அவர்கள் குறித்த ஆவணப்படத் தயாரிப்பு.
• முகவீணை, மிருதங்கம் தாளம், ஹார்மோனியம் முதலிய பக்க இசைக்கலையில் விற்பன்னரான கூத்திசை மேதை அம்மாபேட்டை செல்லப்பன் அவர்களை குறித்த "விதைத்தவசம்" என்றதோர் ஆவணப்படத் தயாரிப்பு.
• ஆதியில் புழக்கத்தில் இருந்து தற்பொழுது அருகிவிட்ட கூத்து அனுபவங்களை சேகரித்து பிரதியாக்கம் செய்யும் முயற்சியில் சபையலங்காரம், உடாங்கனையின் கனவு நிலை முதலிய பிரதிகளின் அச்சாக்கப் பணிகள் போன்ற பணிகளை இடையறாது செய்துவருகிறார்.
விருதுகள்
• 2007-ல் எழுத்தாளர் தனுஷ்கோடி ராமசாமி நினைவு விருது
• 2011-ல் சேலம் எழுத்துக்களம் சார்பில் "அருங்கூத்து" விருது
• 2011-ல் கரிசல் அறக்கட்டளையின் சார்பில், மணல்வீடு-க்கு சிறந்த இலக்கிய சிறுபத்திரிக்கை விருது
• 2011-ல் மணல்வீடு-இதழுக்கு சிறந்த இலக்கிய சிறுபத்திரிக்கைக்கான "சுஜாதா நினைவு விருது"
• சென்னை தக்ஷிண சித்ரா விருது
• 2014-ல் தொல்லியல் கலைப்பங்களிப்புகளுக்காக வாடா அமெரிக்கா FETNA விருது
• 2015-ல் "அழிபசி-க்கு சிறந்த கவிதை நூலுக்கான த.மு.எ.ச விருது
• 2013-ல் சிறந்த எழுத்தாளருக்கான "தினமணி விருது"
இவர் தம் கலை, இலக்கிய, தொல்லியல் மீட்பு முனைவுகளை அங்கீகரிக்கும் முகமாகவும், இத்தகு அரிதான பணிகளை அயராது தொடர்ந்து முனைப்போடு செய்வதற்கான ஊக்கியாக செயல்படும் முகமாகவும் திரு மு. ஹரிகிருஷ்ணன் அவர்களுக்கு "நாஞ்சில்நாடன் விருது" வழங்கிக் கௌரவிப்பதில் "சிறுவாணி வாசகர் மையம்" பெருமை கொள்கிறது.
--------------------------------------------------------------------------------------------------------------------
11.04.2021 அன்று நடைபெற்ற நாஞ்சில்நாடன் விருது-2021 விழாவின் புகைப்படத் தொகுப்பு-1
நன்றி- திரு Iyyappa Madhavan
---------------------------------------------------------------------------------------------------------------------
11.04.2021 அன்று நடைபெற்ற நாஞ்சில்நாடன் விருது-2021 விழாவின் புகைப்படத் தொகுப்பு-2
நன்றி- திரு Abi bhaskar https://photos.app.goo.gl/DgZvVXCFQ979vqqL7
----------------------------------------------------------------------------------------------------------------------
நாஞ்சில்நாடன் விருது 2020
எழுத்தாளர் நாஞ்சில்நாடன் சிறப்புரை
https://www.youtube.com/watch?v=PlPvUYISwdI
பேராசிரியர் க.ரத்னம் விருது வழங்கி உரை
எழுத்தாளர் எம்.கோபாலகிருஷ்ணன் வாழ்த்துரை
https://www.youtube.com/watch?v=1Deyf6fIHLY
டாக்டர் ஜெ.பாஸ்கரன் வாழ்த்துரை
https://m.youtube.com/watch?v=rZgPv_IZIy4
விருதாளர் மு.ஹரிகிருஷ்ணன் ஏற்புரை
https://m.youtube.com/watch?v=mR9TLYpRxyE
----------------------------------------------------------------------------------------------------------------
No comments:
Post a Comment