வாழ்த்துக்கள்
கடந்த இரண்டு ஆண்டுகளாக நான் சிறுவாணிவாசகர் மையத்தைப் பற்றியும் நல்ல வாசிப்பைத் தூண்டுவதற்காக, வாசகர் வட்டத்தை மெல்ல மெல்ல விரிவு படுத்துவதற்காக அது ஏற்று நடைமுறைப்படுத்தி வரும் திட்டங்களைப் பற்றியும் அறிந்து வியந்துவருகிறேன்.
தற்கால பிரசுரங்களின் சூறாவளியில் திக்குத் தெரியாத காற்றிலென "புக்குத் தெரியாத புத்தகக் காட்சிகளில் " புதிய வாசகர்கள் குழப்பத்தில் தடுமாறுவதை நான் உணர்கிறேன். அத்தகைய இலக்கிய தாகமுள்ள இளம் வாசகர்களுக்கு ஒரு நல்ல வழிகாட்டியாக தேர்ந்த புத்தகங்களை அவர்களுக்கு அறிமுகப்படுத்தினால் அது ஒரு நல்ல ஆரம்பமாக இருக்கலாம் .
என் இளம்பருவத்தில் எனக்கு மிக நல்ல புத்தகங்களை அறிமுகப்படுத்தி என் இலக்கிய பார்வைக்கு திசைகாட்டியாக இருந்தவர் என் சகோதரர்.. அப்படிப் பட்ட சகோதர்களின் துணை எல்லோருக்கும் கிட்டுவதில்லை.
அத்தகைய நல்ல பணியை சிறுவாணி வாசகர் மையம் செய்து வருவதாகஅறிகிறேன். மிகுந்த தீர்க்கதரிசனமான முயற்சி. இந்த தோழமையுள்ள மையம் மேலும் மேலும் சிறப்பாக வளர வேண்டுமென வாழ்த்துக்கிறேன்.
உங்களுடைய இந்த இயக்கத்தில் ஒப்புவமையற்ற தனித்த பார்வையுள்ள நாஞ்சில்நாடன் போன்ற மூத்த எழுத்தாளர் இணைந்து ஆதரவுடன் செயல்படுவதை அறிந்து எனக்குப் பெருமையாக இருக்கிறது. உங்கள் அக்கறையுள்ள இந்த வாசகர் இயக்கம் மேலும் பரவலாக வளரட்டும். வாழ்த்துக்கள்…
-வைதீஸ்வரன்
No comments:
Post a Comment