சிறுவாணி வாசகர் மையம் வணிகநோக்கின்றி முழுக்கச் சிறந்த படைப்புகளை வாசகர்களிடம் கொண்டுசெல்லும் வகையில் செயல்படுவது தாங்கள் அறிந்ததே.
வாசகர் வட்டம், இலக்கியச் சிந்தனை அமைப்புகளை முன்மாதிரியாகக் கொண்டு துவங்கிய சிறுவாணி வாசகர் மையம் தொடர்ந்து நல்ல படைப்புகளைத் தரும் என உறுதியளிக்கிறோம்.
மார்ச்--2023 உடன் ஆறாம் வருடச் சந்தா முடிவடைகிறது.
(12 புத்தகங்கள்)
ஏப்ரல் 2023-மார்ச் 2024 (ஏழாம்) ஆண்டுக்கான
கட்டணம் ரூ.1800 /-
பிற மாநிலங்களுக்கு ரூ 2200 /-
(தபால் செலவு உட்பட).
தங்கள் ( ஏப்ரல் 2023-மார்ச் 2024) சந்தாவைப் புதுப்பித்துத் தொடர்ந்து ஆதரவு தருவதோடு , தங்கள் ஒவ்வொருவரும் உடன் இன்னொருவரையும் சிறுவாணி வாசகர் மையத்தில் இணைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
தங்கள் அன்புக்கும், துணையிருப்புக்கும் மீண்டும் மனமார்ந்த
நன்றி.
தி.சுபாஷிணி
ஜி.ஆர்.பிரகாஷ்
9940985920 whatsapp
8778924880 Gpay
சிறுவாணி வாசகர் மையம்.
-------------------------------------------------
சிறுவாணி வாசகர் மையத்தின் "மாதம் ஒரு நூல்"திட்டத்தில் இணையவும்,புதுப்பிக்கவும்......
ஏப்ரல் 2023-மார்ச் 2024
தமிழகம் ரூ1800/-
பிற மாநிலங்கள் ரூ 2200/-
Payment option:
1.Gpay/Paytm/Phonepe: 8778924880
2. UPI
siruvanivasagar-1@okhdfcbank
Please send following details to us through whatsapp(9940985920)
1. Name
2. Full Address and Pincode
3. Contact number
https://siruvanivasagarmaiyam.blogspot.com/?m=1
----------------------------------------
ஒரு நிமிடம் ப்ளீஸ் !
தரமான தமிழ் இலக்கியப் புத்தகங்களை விரும்புபவர்கள் என்னவெல்லாமோ செய்யலாம். ஆனால் எளிதாக செய்ய முடிவது சிறுவாணி வாசகர் மைய உறுப்பினராக சந்தா கட்டிச் சேர்தல்தான். சிறுவாணி வெளியிட்டுள்ள புத்தகப் பட்டியல் இணைப்பில் உள்ளதைப் பார்த்தாலே தெரியும். எந்தப் புத்தகத்தை வெளியிட்டால் விற்பனை ஆகும் என்று இவர்கள் வெளியிடுவதில்லை. எந்தப் புத்தகத்தை வாசகர்கள் தவற விடக்கூடாது என்று நினைத்து செயல்படுகிறார்கள். எழுத்தாளர்களே வாசகர்களாகி மகிழும் சூழல் கொண்டது சிறுவாணி புத்தக வெளியீடு. "மாதம் ஒரு நூல்" திட்டம்.
1. இது பொது விநியோகத்துக்காக அச்சிடப்படுபவை அல்ல. வாசகர் வட்ட உறுப்பினராக (சந்தா Rs.1800/- கூரியர் செலவு உட்பட) மாதம் 120 செலவுதான்... அல்ல... வாசக முதலீடு. வருடத்தில் 12 புத்தகங்கள் கிடைக்கின்றன. தவற விடமுடியாத புத்தகங்கள்.
2. நல்ல புத்தகமாக இருக்கும்போது அவற்றைப் பிற வெளியீட்டாளர்களிடமிருந்து வாங்கி அதை சந்தா தாரர்களுக்கு முன்பு தந்தார்கள் . (உதாரணமாக சாருவின் கட்டுரைத் தொகுப்பு, விலையே ரூ.600.)
3. வாசகரை மனதில் கொண்டு செயல்படும் வாசகர் மையம் இது. இதன் பல நூல்கள் வெளியே கிடைக்காது.
4. எளிதில் கிடைத்துவிட முடியாத தொகுப்புகளை இவர்கள் வெளியிட்டிருக்கிறார்கள். உதாரணமாக -
விட்டல் ராவின் போக்கிடம் நாவல் (அச்சிலேயே இல்லை). க.சுப்ரமணியனின் வேரும் விழுதும் (நம்மில் பலருக்கு இப்படி ஒரு நாவல் இருந்ததே தெரியாது)
பாரதி பற்றிய சித்திர பாரதி (தகவல் களஞ்சியம். ஒரிஜினல் போட்டோக்கள்விலை ரூ 360/-);
பாரதியை மொழிபெயர்ப்பாளராக காட்டும் தாகூர் மொழிபெயர்ப்பு; ரா.கி.ர டைம்ஸ்;
சூடாமணியின் அர்த்தங்கள் ஆயிரம்;
ஆ.மாதவனின் புனலும் மணலும்;
வழக்கறிஞர் சுமதியின் நாவல் கல் மண்டபம் (இந்தப் பின்னணியில் இதுவரை இப்படி வேறொரு நாவலே வந்ததாக தெரியவில்லை ). இவை நாம் சேகரிக்க வேண்டிய நூல்கள்.
5. எல்லாவற்றுக்கும் மேல் சிறுவாணி எழுத்தாளர்களுக்குத் தரும் கௌரவம். எழுதியதற்குப் பணம் கேட்டு நினைவூட்டு கடிதம் எழுதும் தற்போதைய தமிழ் இலக்கிய சூழலில், அப்படி ஒரு அசூசையான அவலத்தை ஒருபோதும் உண்டாக்குவதில்லை சிறுவாணி.
ஏதோ ஒரு பதிப்பகத்தை ஆதரிப்பது அல்ல இது. அதனோடு சேர்ந்து பயணிப்பது.
இதை நாம் ஆதரிக்க வேண்டும் அல்லவா ! புதிய சந்தாதாரர்களை அறிமுகப் படுத்தவேண்டும். ஏனென்றால் சிறுவாணி வணிக நோக்க செயல்பாடு அல்ல. வாசகர்கள் மட்டுமே அதன் பலம்.
(நண்பர்களை சிரமப்படுத்த கூடாது என்று தனியாக யாரையும் Tag செய்யவில்லை. ஆகவே நீங்கள் விரும்பினால் உங்கள் பக்கத்தில் இதை Share செய்யுங்கள். பலரை அறிமுகம் செய்து உதவுங்கள் )
நன்றி !
Ramesh Kalyan sir பகிர்வு
---------------------------------------------------------
No comments:
Post a Comment