'இன்னொரு கனவு'
சுப்ரமணிய ராஜு
சுப்ரமணிய ராஜு அவர்களின் 'இன்னொரு கனவு' சிறுகதைத் தொகுப்பை வாசித்து மகிழ்ந்து மிதந்தேன். அவரின் எழுத்து நடை, கதை நேர்த்தி , கதை மாந்தரின் அனுபவ பகிர்வு எல்லாமே வித்தியாசமான ரசிக அனுபவத்தைத் தந்தது. ஒவ்வொரு கதை முடிவிலும் ஒரு முடிச்சு, ஒரு திடுக்கிடல் பிறகு நம் மனதில் ஒரு புன்முறுவல் நிச்சயம். இதுதான் அவரைப் படிக்கும் முதல் அனுபவம்.
முன்னுரையில் அவரின் எழுத்தின் வழியே நீங்கள் சொல்லி இருந்ததைப் போல மந்தையில் முந்தைய மாட்டின் பின் செல்லும் மாட்டுத்தனம் இல்லாத , மந்தையில் இருந்து பிரிந்தவர என்பதை அவரது கதைகளின் மூலம் அறிகிறேன்.
இவரை அறிமுகம் செய்த சிறுவாணிக்கு நன்றிகள். தொடர்ந்து அவரது அனைத்து படைப்புகளையும் படிக்க ஆவலாக உள்ளேன். நன்றி.
திரு.ஜெகதீசன், நிலக்கோட்டை
------------------------------------------------------------------
இன்னொரு கனவு.
அருமையான சிறுகதைகள்...
கையில் எடுத்து விட்டேன்.
பாதிக்கு மேல் படித்து விட்டேன்.
என் அபிமானமான எழுத்தாளர்.
S.R.விஸ்வநாதன். கூடுவாஞ்சேரி
-------------------------------------------------------------------
I too read. It was nice. 🙏🙏
Saradha sundar,salem
--------------------------------------------------------------
இன்று 26.09.23 மாலை சிறுவாணி வாசகர் மையத்தின் தலைவர் சுபாஷிணி மேடம் நடிகர் சிவக்குமார் வீட்டில் சென்று "அம்மா அம்மா,இன்னொரு கனவு,குஜராத்தி சிறுகதைகள்" ஆகிய புத்தகங்களைக் கொடுத்தார்.
நடிகர் சிவக்குமார் சிறுவாணியின் உறுப்பினர்.
No comments:
Post a Comment