வ.ரா.-வின் எழுத்துக்கள் எல்லாம் மனிதனுடைய சிந்தனையைக் கிளறுவனவாகவே அமைந்திருக்கின்றன. அவர் எழுதிய நாவல், நாடகம், அளவற்ற கட்டுரைகள், பத்திரிகைத் தலையங்கம் எதுவாயினும் சரி, குறுகிய நமது முதுகெலும்பை நிமிர்த்தாமல் போகாது.
வ.ரா, புதுமையான பல துறைகளில், ‘முதல் ஏர்’ பிடித்திருக்கிறார். தமிழுக்குப் புதிதான ‘நடைச் சித்திர'த்தை வெற்றியுடன் கையாண்டவர் இவர்தான்.
வ.ரா.-வின் நடை எளிதானது: சக்தியுள்ளது.
தற்காலத் தமிழ் இலக்கியத்தின் சரித்திரம் எழுதப்படுமானால், அவருடைய கட்டுரைகளுக்கு நிச்சயமாய் அதில் இடம் உண்டு. சிந்தனை செய்பவர்களைப் பற்றிப் பேச்செழுந்தால் வ.ரா-வை மறக்க முடியாது. வசன நடையைப் பற்றி நினைத்தால், வ.ரா-வுக்கு முன்னணியில் ஸ்தானம் கொடுத்தே தீரவேண்டும்.
வ.ரா-தான் நம்முடைய 'பெர்னார்ட் ஷா.'
ந.பிச்சமூர்த்தி
No comments:
Post a Comment