குகன் (தி.அ.சொக்கலிங்கம்)
கட்டுரைகள்
விலை ரூ 250/-
---------------------
நேற்றும் இன்றும் பேராசிரியர் திரு குகன் எழுதிய "பெரும் புள்ளிகள்" நூலை வாசித்து முடித்தேன்.
எவ்வளவு ஆத்மார்த்தமான ஆக்கம் தரும் வகையில் உருவாக்கப்பட்ட இந்த நூலை நமது வாசகர் மையம் சார்பில் கொண்டு வந்தமைக்கு பாராட்ட கடமைப் பட்டு உள்ளது; இந்த பதிப்பு உலகம்.
புத்தக ஆசிரியர் எந்தவொரு இடத்திலும் நேரத்திலும் நேர்மையாக இருக்க சத்தியம் செய்து விட்டுத் தான்; மொத்த நூலுக்கு தேவையான பொருத்தமான நபர்களின் வாழ்க்கை சம்பவங்களை மிக அருமையாக கொண்டு வந்து உள்ளார்.
அதுவும் நான் சுமார் 13 வருடங்கள் பணி செய்த திருநெல்வேலி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு பெரும் நாயகர்களை நினைத்து பெருமைப் படுகிறேன்!
எனக்கு என்ன வருத்தம் என்றால்; இந்த மாதிரியான புத்தகம் முன்பே கிடைத்து இருந்தால் அத்தனை இடங்களைச் சென்று மகிழ்ந்து இருப்பேன்.
குறிப்பாக திருநெல்வேலி டவுன் மற்றும் பாளையங்கோட்டை ஆகியவற்றை இணைக்கும் பாலம், தமிழகத்தில் உள்ள ஒரே ஈரடுக்கு பாலம் என்ற பெருமைக்கு உரிய
சுலோச்சனா சம்பத் முதலியார் பாலம், ஊசிக் கோபுரம் என்று தினமும் சென்று திரும்பிய இடங்களில் எவ்வளவு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தது என்று நினைக்கும் போதும் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.
உங்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள்!
பொ பரமசிவன் Retd DSP
கோவை
--------------------------
தின்னவேலி. சுலோச்சனா முதலியார் பாலம்
...........
மொழிப் பாலத்தில் சம்பாதித்த சொத்து .
ஆற்றுப்பாலத்தில் செலவழித்தது.
ஆங்கிலேய அரசாட்சி. திருநெல்வேலி மாவட்டம்.
அங்கே அப்போது சிரஸ்தாராக இருந்த அமரர் சுலோச்சனா முதலியார்.
திருநெல்வேலி பாளையங்கோட்டையைப் பிரிக்கும்
தாமிரபரணியின் வெள்ளப்பெருக்கை கட்டுப்படுத்த பாலம் அமைக்க காரணமாய் இருந்திருக்கிறார்.
ஊர் கூடி தேர் இழுக்கலாம் என்று சொன்ன ஆங்கிலேய அதிகாரிகளிடம் மௌனம் காத்து தன் பூர்வீக சொத்தை எல்லாம் பாலத்தில் செலவழித்த மாமனிதர் இவர்.
மேலும் பெருமை சேர்ப்பது அவருடைய மனைவி வடிவாம்பாள் தன் கணவருக்கு சற்றும் குறைவில்லாமல் ஒரு வெள்ளி தாம்பாளத்தில் தன்னுடைய நகைகளையும் கொஞ்சம் பணத்தையும் வைத்து இதை கொண்டு போய் பாலம் கட்ட நமது அச்சாரக் காணிக்கை என்று சொல்லி கொடுத்துவிட்டு வாருங்கள் என்றாராம்.
பல திருப்பணிகளுக்குக் கிடைத்த தனி மனிதர் நன்கொடை திருநெல்வேலி மாவட்டத்தையே திகைக்க செய்கின்றது.
மள மளவென பால வேலைகள் தொடர்கின்றன. அழகு மிகுந்த கிருஷ்ணாபுரம் கோவிலின் வெளிப்பிரகாரத்தின் கற்களை கொண்டு தான் பாளையங்கோட்டையின் கோட்டை சுவர்கள் கட்டப்பட்டன என்பது வரலாறு என்றும் பதிவு செய்கிறார் பேராசிரியர் டி அ சொக்கலிங்கம். புனை பெயர் குகன்.
சிமெண்ட் இல்லாத அந்த காலத்தில் சுண்ணாம்புடன் பதனி கருப்பட்டி இவைகளை சாந்து ஆக்கி செங்கலைக் கொண்டு பாலம் உருவானதாம். மற்றும் சிறையில் இருந்த ஆயுட் கைதிகள் 100 பேரை அப்போதைய ஆங்கில அரசாங்கம் தந்து உதவுகின்றது என்ற அரிய தகவல்களை அவருடைய இந்த கட்டுரையில் காணலாம்.
ஆனை திறந்த பாலம் .ஆம்.. சுலோச்சனா முதலியார் பாலம் கட்டி முடிக்கப்பட்ட பின் முதலில் பாலத்தில் கால் வைத்தது யானை என்றும் எழுதுகிறார்.
அது மட்டுமா சுலோச்சனா முதலியார் திருநெல்வேலி மாவட்டத்தில் ஐந்து பாலங்களை உருவாக்கிய பெருமை உடையவர். பாலத்தின் திறப்பு விழா 1848 நவம்பரில் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. அலங்கரிக்கப்பட்ட யானை ஒன்று முதல் பயணி என்ற பெருமிதத்தோடு பாலத்தில் செல்ல அதற்கு பின்னால் மற்றவர்கள்.
இவருடைய பெயரும் வள்ளல் தன்மையும் மக்கள் நினைவில் என்றும் நிற்கும்படி பாலம் தொடங்கும் இடத்தில் சதுர வடிவமான கருங்கல் தூண் எழுப்பப்பட்டு அதில் அவரது பெயரும் பெருமைகளும் எழுதப்பட்டனவாம். பின்னாளில் 1966 இல் பாலம் விரிவுபடுத்தப்பட்டபோது அந்த கல் தூண் மாயமாக மறைந்து விட்டது. அந்தத் தூணின் கற்களும் எழுதி இருந்த புகழ் மொழிகளும் எங்கே இருக்கின்றன என்று தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லை. வேதனை தான்.
ஆதங்கம் தான்.
இந்தத் தகவலை ஆனந்த விகடன் பத்திரிகை மூலம் கட்டுரைகளாக எழுதி புகழ்பெற்ற அமரர் குகனுடைய படைப்புகள் "பெரும்புள்ளிகள்" என்னும் திருநெல்வேலி நிலம் சார்ந்த மக்களைப் பற்றியது.
இந்த அரிய புத்தகம் 1994 இல் முதல் பதிப்பு கண்டு தற்போது 2024 இல் சிறுவாணி வாசகர் மையம் மூலம் நம் கைகளில் பரிமளிக்கிறது.
அரிய பெரும் விருந்து அளித்த சிறுவாணி வாசகர் மையம் ஆலோசகர் குழுவில் இருக்கும் அனைவருக்கும் எம் மனமார்ந்த நன்றிகள். இப்படிப்பட்ட அரிய கலைக்களஞ்சியங்கள் சிறுவாணியில் அநேகம் அநேகம்.
சிறுவாணி வாசகர் மையம் வாழ்க வாழ்க!!!
ஹேமமாலினி கோபாலன்
--------------------------
சிறுவாணியின் மைல் கற்களில் ஒன்று இன்னூல்.
---------------------------
வாசித்துக் கொண்டிருப்பதிலிருந்து.....
"எட்டையபுர சமஸ்தான மக்களுக்கு உள்ள ராஜ விசுவாசம் இருக்கின்றதே..அப்பப்பா! ஒரு உதாரணம் ..பள்ளிக்கூடத்தில் படிக்கும் பிள்ளைகள் 'ஒண்ணு' ' இரண்டு' என்று எண்ணும்போது' ஏழுவரை எண்ணி 'எட்டு' என்பதற்கு ' ' 'மகாராஜா ' என்று சொல்லிப் பின்' ஒன்பது' ' பத்து' என்று எண்ணுவார்கள். 88 என்பதற்கு 'எண்பது மகாராஜா' 98 என்பதற்கு 'தொண்ணூறு மகாராஜா - நெல் அளப்பவர்கள் கூட ஏழு மரக்கால் அளந்துவிட்டு எட்டாவது மரக்காலை ' மகாராஜா' என்று எண்ணிப் பின் ஒன்பது, பத்து என்று தொடர்வார்கள்- பள்ளிக்கூடத்துப் பிள்ளைகள் முதல் பெரியவர்கள் வரை ' எட்டு' என்ற வார்த்தை தங்கள் வாயில் வராமல் பார்த்துக்கொள்வார்கள்- எட்டப்பன் என்பதில் ' எட்டு' இருப்பதால், மகாராஜாவின் பெயரைச் சொல்லக்கூடாது என்பதால்"
மேற்கண்ட தகவல் சிறுவாணி வாசகர் மையம் வெளியிட்ட பெரும்புள்ளிகள் என்ற தொகுப்பில் ஏழுக்குப் பிறகு மகாராஜா என்ற பாகத்திலிருந்து.
'உலகை மாற்றி அமைத்த உத்தமர்களைப் பற்றியோ அறிவியல் அறிஞர்கள் பற்றியோ அறிவியல் அறிஞர்களைப் பற்றியோ அரசியல் வித்தகர்கள் பற்றியோ இந்தப் புத்தகத்தில் நான் சொல்லவில்லை. அவர்களைப் பற்றி எழுதுவதற்குப் பலர் இருக்கிறார்கள் என்ற காரணத்தால், ஆனால் விளம்பரமே இல்லாமல் வித்யாசமாகவும் அமைதியாகவும் வாழ்ந்த நூற்றுக்கணக்கானோர் தமிழ்நாட்டில் இருந்தனர். இவர்கள் ஒரு சிலரையாவது இந்த நாடு தெரிந்து கொள்ளவேண்டும் என்பதே என் ஆசை.அதன் விளைவே 'பெரும் புள்ளிகள்'
இந்தப் பின்னட்டைக் குறிப்பைப் பார்த்ததும் பிறகு படிக்கலாம் என்று முடிவு செய்திருந்தேன். ஆனால் அதிலிருந்த வரிகள் உறுத்திக்கொண்டே இருக்கவே வாசிக்க ஆரம்பித்தேன்.
தொகுப்பில் இடம் பெற்றிருக்கும் அனைத்தும் சுவராஸ்யமான விஷயங்களே. மிகவும் சுவராஸ்யமாக எனக்குப்பட்டது சில.
தூக்குத் துரை( சிங்கம்பட்டி ஜமீனின் 24வது தலைமுறை எப்படி தூக்கு துரை ஆனார் என்பது)
14ம் நூற்றாண்டில் பெரிய சமுதாயத்தையேப் பகைத்துக்கொண்டு வாழ்ந்த சித்தரான உமாபதி தீட்சிதர்
வக்கீல் ஐயா திருநெல்வேலி என்று முகவரி எழுதினாலோ போதும்'வக்கீல் ஐயாவிற்கு'சரியாக தபால் போய்விடும் - இது எஸ்.ராமசாமிக் கோனாரைப்பற்றியது.
இது போல 42 பெரும்புள்ளிகளைக் குறித்து வெளிவந்திருக்கும் இந்தத் தொகுப்பு 2024 ஆண்டிற்கான எனது வாசிப்பை நிறைவோடும் மகிழ்வோடும் தொடர உதவுகிறது
இந்த நல்லத் தொகுப்பை தந்திருக்கும் சிறுவாணி வாசகர் மையத்திற்கு வாழ்த்துகளும், நண்பர் பிரகாஷிற்கு பாராட்டுகளும்
Madhusudhan sugumaran
சிறுவாணி வாசகர் மையம் பற்றி.....
கோவையில் சிறுவாணி வாசகர் மையம் 2017 உலகப் புத்தக தினம் அன்று துவக்கப்பட்டது. வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கவும் ,சிறந்த எழுத்தாளர்களின் எழுத்துக்களை இன்றைய தலைமுறைக்குக் கொண்டு செல்லும் பணியையும் இந்த மையம் செய்து வருகிறது .
இந்த அமைப்பின் மூலம் "மாதம் ஒரு நூல்" எனச் சிறந்த படைப்புகள் உறுப்பினர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இதன் தலைவராக தி சுபாஷிணி, ஒருங்கிணைப்பாளராக ஜி. ஆர். பிரகாஷ் ஆகியோர் உள்ளனர்.
கௌரவ ஆலோசகர்களாக
திரு.நாஞ்சில் நாடன், திரு.வ.ஸ்ரீநிவாசன், திரு.ஆர்.ரவீந்திரன் (RAAC)ஆகியோர் வழிநடத்துகின்றனர்.
கடந்த எட்டு ஆண்டுகளில் தமிழகம் மற்றும் மற்ற மாநிலங்களிலிருந்தும் 500+ உறுப்பினர்கள் உள்ளனர்.
தொடர்புக்கு -
9940985920
8778924880
siruvanivasagar@gmail.com
siruvaniprakash@gmail.com
https://siruvanivasagarmaiyam.blogspot.com/?m=1
No comments:
Post a Comment