சிறுவாணி வாசகர் மையம் பற்றி.....
கோவையில் சிறுவாணி வாசகர் மையம் 2017 உலகப் புத்தக தினம் அன்று துவக்கப்பட்டது. வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கவும் ,சிறந்த எழுத்தாளர்களின் எழுத்துக்களை இன்றைய தலைமுறைக்குக் கொண்டு செல்லும் பணியையும் இந்த மையம் செய்து வருகிறது .
இந்த அமைப்பின் மூலம் "மாதம் ஒரு நூல்" எனச் சிறந்த படைப்புகள் உறுப்பினர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
இதன் தலைவராக தி சுபாஷிணி, ஒருங்கிணைப்பாளராக ஜி. ஆர். பிரகாஷ் ஆகியோர் உள்ளனர்.
கௌரவ ஆலோசகர்களாக
திரு.நாஞ்சில் நாடன், திரு.வ.ஸ்ரீநிவாசன், திரு.ஆர்.ரவீந்திரன் (RAAC)ஆகியோர் வழிநடத்துகின்றனர்.ஓவியர் ஜீவா புத்தக அட்டைப்படங்களை வடிவமைத்துத் தருகிறார்.
கடந்த எட்டு ஆண்டுகளில் தமிழகம் மற்றும் மற்ற மாநிலங்களிலிருந்தும் 500+ உறுப்பினர்கள் உள்ளனர்.
தொடர்புக்கு -
9940985920
8778924880
siruvanivasagar@gmail.com
siruvaniprakash@gmail.com
https://siruvanivasagarmaiyam.blogspot.com/?m=1
----------------------------
https://drive.google.com/file/d/1ZQNwaihLBaIXhwO9x8kDzXtPoitrteAy/view?usp=drivesdk
Books List
----------------------------
நேர்காணல்:
'சிறுவாணி வாசகர் மையம்'
ஜி.ஆர். பிரகாஷ்
புத்தக வாசிப்பு: இன்று
இக்காலத்தில் வாசிப்புப் பழக்கம் குறைந்துவிட்டது போல ஒரு கருத்து உள்ளது. அது சரியில்லை என்று நினைக்கிறேன். ஆங்கிலப் புத்தகங்கள், சர்ச்சைக்குரிய புத்தகங்கள், நடிக, நடிகையர் பரிந்துரைகள் என ஆவலாக இளைய தலைமுறை பெரும்பாலும் வாசிக்கிறார்கள். அவர்களுக்கு நமது கிளாசிக் எழுத்தாளர்களின் படைப்புகளை அறிமுகம் செய்ய நமது கல்வித்திட்டத்தில் இடமில்லை. பெற்றோர்கள், ஆசிரியர்களுக்கோ விருப்பமும் நேரமுமில்லை.
அந்த இளைய தலைமுறைக்கு நமது சிறந்த எழுத்தாளர்களின் படைப்புகளை மறுஅறிமுகம் செய்வதே மையத்தின் முக்கியப்பணி. ஒரு புத்தகத்தை அவர்களிடம் கொண்டுசேர்ப்பதன் மூலம், அந்த எழுத்தாளரின் மற்ற படைப்புகளை அவர்கள் தேடி வாசிக்க வேண்டுமென்பது எங்கள் ஆசை. வணிகநோக்கமில்லாத இந்த வாசிப்பு இயக்கம், தொடர் இயக்கமாய் மாற வேண்டும். தமிழில் நல்ல நூல்களை வெளியிட்டு, புத்தக வாசிப்பால் மனித மனங்களைப் பண்படுத்தும் எங்களது முயற்சிகளுக்கு, வாசகர்களின் ஆதரவு வேண்டும்.
- ஜி.ஆர். பிரகாஷ், சிறுவாணி வாசகர் மைய ஒருங்கிணைப்பாளர்
- - - - -
இதழை தென்றல் இணைய தளத்தில் வாசிக்கலாம்/கேட்கலாம்.
வாசிக்க:
http://www.tamilonline.com/mobile/article.aspx?aid=15465
ஒலி வடிவில் கேட்க:
No comments:
Post a Comment