தேடித் தேடி வாசிக்கும் புத்தக நேசர்களுக்காக குறைந்த வருடக் கட்டணத்தில் "மாதம் ஒரு நூல்" என வீடுதேடி வரும் புத்தகங்கள்
Friday, September 19, 2025
9 ஆம் வருடத்தில் (மாதம் ஒரு நூல்) இதுவரையிலான புத்தகங்கள்.2025-2026
நாஞ்சில் -50 & நாஞ்சில்நாடன் விருது விழா Videos 24.08.2025
பனுவல் போற்றுதும் - நாஞ்சில்நாடன் 2025
பனுவல்
போற்றுதும்
நாஞ்சில்நாடன்
கட்டுரைகள்
ரூ. 250/-
பவித்ரா பதிப்பகத்தின் புதிய /பிற வெளியீடுகள் 2025
பவித்ரா பதிப்பகத்தின்
புதிய /பிற வெளியீடுகள்
Whatsapp 9940985920
பொய்மான்கரடு
கல்கி
(கொங்குப் பகுதி நாவல்-2)
ரூ 150/-நான்
லா.ச.ரா
மகுடபதி
கல்கி
கொங்குப் பகுதி நாவல்-1
ரூ 250/-இரு நாவல்கள்
க.ரத்னம்
ரூ 300/-உருவகக் கதைகள் -
க.ரத்னம்
ரூ 150/-தரங்கிணி
லா.ச.ரா சிறுகதைகள்
ரூ 250/-
“எப்படி எனக்கு நேர்ந்ததெல்லாம் இந்தக் கதையில் நேர்ந்திருக்கின்றது? எனக்கே கூட தெரியாதபடி என்னுள் பூட்டி வைத்திருந்த என் அந்தரங்கங்கள் எப்பிடி இங்கு அம்பலமாயின. எனக்கு எழுத வராததனால் நான் எழுதாத குறை. என் எண்ணங்கள் எப்படி அவருடைய எழுத்தானது?" என்பது லா.ச. ரா.வின் மீதான வாசகனின் வியப்பு.
இந்தத் தொகுப்பிலும் இதனை உணரலாம்
-சப்தரிஷி லா -ச- ரா
பூர்வா
லா.ச.ரா சிறுகதைகள்
ரூ 220/-
எத்தனை விதங்களில் எழுதினாலும் நான் எழுதவது நான் என் பிறவியுடன் கொண்டு வந்திருக்கும் என் கதைதான். இதைச் சொல்கையில் உயிரின் சாசனத்தை வாசகர்களின் நெஞ்சில் நித்தியமாய் செதுக்கிக் கொண்டிருக்கிறேன். இதுவே என் விதி. என் விதியே என் பெருமிதம். இதுதான் நான் தேடும் என் சொல் - என் சொல்தான் என் உளி என்கிறார் லா.ச.ரா.
இக்கதைகளை வாசிப்பவர்கள் அதனை உணர்வார்கள்.
– சப்தரிஷி.லா.ச.ரா-
கங்காதரனும்
குழந்தை ராமனும்
க.சிவசுப்பிரமணியன்
பயண நூல்
ரூ 180/-
'மனித வரலாறு தோன்றுமுன்பே தோன்றிய நகரம் காசி' என்பார் மார்க் ட்வைன். ஸ்ரீ ராமருக்கும் முன் பிறந்தது அயோத்தி, காசியும், அயோத்தியும் ஹிந்து மதத்தின் உயிர். இரண்டுமே ஆயிரம் வருஷங்களாகப் பல்லாயிரம் பிரச்சினைகளை எதிர் கொண்டு இன்று பொலிவுடன் நிற்பவை.
காசி. அயோத்தி, பிரயாகராஜ். கயா,புத்தகய ஆகிய பாரதத்தின் பெருமிதமிக்க தலங்களின் வரலாறுகளை, ஆன்மீகத் தொடர்பை விரிவாக சொல்லும் இந்நூல் காசி, அயோத்தி புனிதப் பயணத்துக்குச் சிறந்த வழிகாட்டியும் கூட.
வில்லியும்
சிவனும்
இராய.சொ
ஆய்வு நூல்
கம்பனும்
சிவனும்
இராய.சொ
ஆய்வு நூல்
டாக்டர்.ரங்காச்சாரி
ராஜம் கிருஷ்ணன்
வாழ்க்கை
வரலாற்று நாவல்
ரூ 450 /-
மிகக் கருத்தோடும் பொறுப்போடும் முனைந்து ஓடிஓடி நோய் தீர்த்த டாக்டர். ரங்காச்சாரி அவர்களின் கடமையுணர்ச்சியையும், உயிர் காக்கும் அருளுணர்ச்சியையும், ஓய்வற்ற தொண்டையும், உதவியையும், அக்காலத்தார் பெற்றுப் பிழைத்த உண்மை நிகழ்ச்சிகளையும் படிப்போர் நெஞ்சம் குழையும்! மருத்துவத் தொண்டின் மாண்பும் புலப்படும்!
டாக்டர் ரங்காச்சாரி ஒருவர் போதுமா? தொடர்ந்து மனித சமுதாயத்திற்கு உதவ எண்ணற்ற ரங்காச்சாரிகள் தேவை, தேவை! நோயகற்றி வாழ்வளிக்கும் நாயகர்களை நாடு எதிர்பார்த்துக் காத்திருக்கிறது!
புதிய ரங்காச்சாரிகள் வருக, வருக என்ற வரவேற்புடன் காத்திருக்கிறோம்.
----------
ராஜம்கிருஷ்ணன் நூற்றாண்டு வெளியீடு
ஔவை பாடல் திரட்டு-
ப.சரவணன்
ஆய்வு நூல்
ரூ 250/-
"தமிழ்நாட்டின் மற்ற செல்வங்களையெல்லாம் இழந்துவிடப் பிரியமா? ஔவையின் நூல்களை இழந்துவிடப் பிரியமா?" என்று நம்மிடம் யாரேனும் கேட்பார்களாயின், 'மற்ற செல்வங் களையெல்லாம் பறிகொடுக்க நேர்ந்தாலும் பெரிதில்லை. அவற்றைத் தமிழ்நாடு மட்டும் சமைத்துக்கொள்ள வல்லது. ஒளவைப் பிராட்டியின் நூல்களை இழக்க ஒருபோதும் சம்மதப்பட மாட்டோம். அது மட்டும் சமைத்துக்கொள்ள முடியாத தனிப் பெருஞ்செல்வம்' என்று நாம் மறு மொழி உரைக்கக் கடமைப்பட்டிருக்கிறோம்.
-மகாகவி பாரதியார்
சிரஞ்சீவிக் கதை
கல்கி சிறுகதைகள்
ரூ 200/-
உயிரின் வலி - மரு.த.ரவிக்குமார் September 2025
உயிரின்
வலி
மரு.த.ரவிக்குமார்
கட்டுரைகள்
ரூ. 200/-
ஈரோடு மெடிக்கல் காலேஜ் அண்ட் ஹாஸ்பிடல் டீன் ஆக இருக்கும் டாக்டர் ரவிக்குமார் அவர்கள் அலைபேசியில் சில நாட்களுக்கு முன்பு என்னிடம் பேசிக் கொண்டிருந்த பொழுது ஒரு அனுபவத்தைச் சொன்னார்.
இளநீர் வியாபாரி ஒருவர் இளநீரை வெட்டி சீவும் பொழுது தன் கட்டை விரலையும் சேர்த்து சீவிக் கொண்டு விட்டார்.
ரத்தம் பீறிட்டு அடித்த போதும், அவர் கொஞ்சம் கூட அதைப் பொருட்படுத்தாமல், பதட்டப்படாமல் கீழே துண்டித்து விழுந்த விரலை எடுத்து, பிளாஸ்டிக் பையில் போட்டு, அதில் ஐஸ் கட்டி ஒன்றைப் போட்டுக்கொண்டு நேராக ஹாஸ்பிடலுக்கு வந்து விட்டார்.
அவருடைய மனைவியோ வாயிலும், வயிற்றிலும் அடித்துக்கொண்டு, கதறி அழுது ஒரு தடவை மயக்கம் போட்டு விழுந்து விட்டார். விரலை பறி கொடுத்தவர் சர்வசாதாரணமாக மனைவிக்கு ஆறுதல் சொன்னார்.
"இப்ப எதுக்காக இப்படி அழுது புலம்பிட்டிருக்கே. நடந்தது நடந்து போச்சு . டாக்டர்கிட்ட வந்துட்டோம்ல இனி அவர் சரி பண்ணிடுவாரு" என்று சொல்லி நான் அளித்த அந்த சிகிச்சை முறைக்கு ஒத்துழைப்பு கொடுத்து ஏற்றுக் கொண்டார்.
அடுத்த சில நாட்களில் அவருடைய கட்டை விரல் பழையபடி மற்ற விரல்களுக்கு சமமாக மகுடம் சூட்டிக் கொண்டது.
ஒவ்வொருவரும் இதே போல் எதிர்பாராமல் தங்களுக்கு ஏற்படக்கூடிய உடம்புப் பிரச்சினைகளைக் கண்டு கலங்காமல் மனரீதியாக எதிர் கொண்டால் பலன் கிடைக்கும். நடந்ததை எண்ணி புலம்பிக் கொண்டே இருந்தால் வலியும் அதிகமாக இருக்கும்.
இது போன்ற பல அனுபவங்களை அவர் தொகுத்து 'உயிரின் வலி' என்ற தலைப்பிலே ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார் என்று அவர் சொன்ன போது நான் ஆச்சரியப்பட வில்லை.
ஏனென்றால் அவர் திறமையான டாக்டர் மட்டும் அல்ல.
ஒரு நல்ல எழுத்தாளரும் கூட......
எழுத்தாளர் ராஜேஷ்குமார்
கல்லடிக்கும் உளிகளும் உப்பளப் பாறைகளும் பி.ஏ.கிருஷ்ணன் July 2025
9 ஆம் வருடத்தில் (மாதம் ஒரு நூல்) இதுவரையிலான புத்தகங்கள்.2025-2026
சிறுவாணி வாசகர் மையம் 9 ஆம் வருடத்தில் (மாதம் ஒரு நூல்) உறுப்பினர்களுக்கு இதுவரை அனுப்பியுள்ள புத்தகங்கள்.

-
2019 ஜுன் மாத நூல் "தாகூர் கதைகள்" மகாகவி பாரதியார் மொழிபெயர்ப்பில்... பக்கங்கள் விலை 130 /- I SB...
-
· செப்டம்பர்( 2018) " உருமால் கட்டு" சிறுகதைகள் எழுத்தாளர் சு.வேணுகோபால்- பக்கங்கள் 170 விலை 160 /- ...
-
ஆகஸ்ட்-2021 போக்கிடம்-விட்டல்ராவ் pages 190 price 180 Isbn-978-81-952661-7-3 -----------------------------------...