Saturday, June 15, 2019

ஜூலை 12 அபிமானம் உள்ளவர்களுக்கு நன்றி.



பாலாம்பாள் மாமி அவர்களுக்கு நன்றி!

சிறுவாணி வாசகர் மையத்தை  வளர்க்க ப்ரகாஷூம் சுபாஷிணி திருமலை மேடமும் எவ்வளவு பாடுபடுகிறார்கள்  என்று எனக்குத் தெரியும்.. அதற்கு  ஆலோசனைகளில். .நாஞ்சில் சாரும்.. வ.ஸ்ரீநிவாசன் சாரும்  ஓவியப் பங்களிப்பில் ஜீவா சாரும் எவ்வளவு உறுதுணையாக இருக்கிறார்கள்..என்பதும் நீங்கள் அறிவீர்கள்..

 இருந்தாலும் 1000 உறுப்பினர்கள் சேரும்வரை அது சவலைக் குழந்தைதான்... அதனால் அவ்வப்போது யாராவது அதை எடுத்துக் கொஞ்சிவிட்டு.. கொஞ்சம் ஊட்டமூட்டிவிட்டுப்போகிறார்கள்..
இதுவரை சிறுவாணியில் நடந்துகொண்டிருப்பதை ப்ரகாஷ் விரும்பாவிட்டாலும் பகிர விரும்புகிறேன்.

சிலபேர் சில புத்தகங்களை அவர்கள்செலவில் வாங்கி சிறுவாணிக்கு அன்பளிக்கிறார்கள்... 
அப்புத்தகங்களை  விரும்புவர்களின்..முன்னுரிமை அடிப்படையில்..அவர்களுக்கு அனுப்பிவைக்கிறார்கள்.
அந்தமாதிரி அன்பளிக்கப்பட்ட புத்தகங்கள்

1 யாதுமாகிநின்றாய்.....(திரு.ஆர்.ரவீந்திரன்  அன்பளிப்பு) .
2 நாமார்க்கும்குடியல்லோம்     (பாரதிபாசறை திரு.S.வேங்கடசுப்ரமணியம் அன்பளிப்பு)

3.ஹரஹர சங்கர..ஜெயகாந்தன்... (திரு.கவிதா சொக்கலிங்கம் அன்பளிப்பு.)
4. அஃகம் சுருக்கேல்.. நாஞ்சில்சார்....(திருமதி பாலாம்பாள்  அன்பளிப்பு).

சரி.. எனக்கும் ஒருஆசை ... அம்மாவின் பிறந்த... நாளைக்கு..நாமும் செய்வோம்.. என்று ஆசைப்பட்டு ப்ரகாஷ் சாரை அனுப்பி விஜயா பதிப்பகத்தில் அண்ணாச்சியைப் பார்த்து...புத்தகங்கள் வாங்கி வரச்செய்ய இருப்பதை எப்படியோ அறிந்து கொண்ட பாலாம்பாள் அம்மாள் எனக்கு உடனடியாக ஃபோன் செய்து.... 
" கண்ணன்... வாழ்கவளமுடன்.. கேள்விப்பட்டேன்...நீங்கள் வாங்கச்சொன்ன புத்தகங்களுக்கு ப்ரகாஷுடம் செக் கொடுத்துவிடுகிறேன்.. நீங்கள் என்னசொன்னாலும் கேட்கமாட்டேன்... நீங்க என்ன பண்றீங்க...நாளைக்குக் காலைல அம்மாவிடம் என் நம்பருக்கு ஃபோன் பண்ணிக்கொடுத்து ஆசிர்வாதத்தை வாங்கித்தரணும் அது மட்டும்தான் உங்கவேலை" என்று படபடத்துவிட்டு பதிலை எதிர்பார்க்காமல்... 'டொக்'.

என்னசெய்ய?...
எழுத்தின் மேலும் எழுத்தாளர்மேலும் இப்படியெல்லாம் முன் வந்து அபிமானம் உள்ளவர்களுக்கு என்னால் என்ன செய்து விடமுடியும் அவர்களை நமஸ்கரிப்பதைவிட!
நமஸ்காரம் பாலாம்பாள் மாமி!
Sabtharishi lasara fb
--------------------------------------------------------------------------------------------------------------------------



    வரும் ஜூன் 12ஆம் தேதி லா.ச.ரா  அவர்களின் மனைவியார் திருமதி.ஹைமவதி அவர்களின் 93 வது பிறந்தநாள். 
அதனை முன்னிட்டு நமது சிறுவாணி வாசகர் மைய மூத்த உறுப்பினரும் , தீவிர வாசகருமான திருமதி. பாலாம்பாள் அவர்கள்,

- ஹைமவதி அவர்கள் எழுதிய
"திருமதி லா.ச.ரா. வின் நினைவுக்குறிப்புகள்" நூலை நமது வாசகர்கள் 25 பேருக்கு அன்பளிப்பாக அளிக்க முன்வந்துள்ளார்கள்.

 இந்தக் குழுவில் முதலில் விருப்பம் தெரிவிக்கும் 25  உறுப்பினர்களுக்கு மட்டும் மேற்கண்ட நூல்  திருமதி பாலாம்பாள் அவர்களின்  சார்பில் அனுப்பி வைக்கப்படும்.

ஆகவே விருப்பமுள்ளவர்கள் நமது குழுவில் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

திருமதி.பாலாம்பாள், திரு.நாஞ்சில்நாடன் பிறந்தநாளில்
"அஃகம்சுருக்கேல்" நூலை இதேபோல வழங்கினார்.அவருக்கு நமது உறுப்பினர்கள் சார்பில் மனமார்ந்த நன்றி.
---------------------------------------------------------------------------------------------------------
11.05.2019
ஒரு சிறு சந்தேகம். 

உறுப்பினர்களுக்கு மாதம் 2 புத்தகங்கள் அனுப்பி வைக்கிறீர்கள். அந்த 2 நூல்களுமே அந்தக் குறிப்பிட்ட உறுப்பினரின் வாசக ரசனைக்கு ஏற்புடையதாக இல்லாமல் இருக்கலாம். 

(நான் படைப்பின் தரத்தை இங்கே குறிப்பிடவில்லை; மிகத் தரமான படைப்பு, மிக அழகாக எழுதப்பட்ட படைப்பு கூட, அந்தக் குறிப்பிட்ட வாசகரின் ரசனைக்கு - அல்லது அவர் ஏற்றுக்கொண்ட சமூக, அரசியல், மதக் கோட்பாடுகளுக்கு - முரணாதாக இருக்கலாம்)

அப்படி இருப்பின் அந்த உறுப்பினர், மிகவும் கண்ணியமாக, அதே நேரம் உறுதியாக, அந்த நூல்களை 'சிறுவாணி' யிடமே திரும்ப ஒப்படைக்கலாமா? அவ்வாறு - ஒரு சில எழுத்தாளர்களின் படைப்புகளை ஏறெடுத்தும் நான் பார்ப்பதில்லை - என்ற வகையில், தபாலைப் பிரித்தவுடன் மறு தபாலில் - புத்தகத்தை எந்த வகையிலும் பயன்படுத்தாமல் (பெயர் எழுதுதல்/ அடிக் கோடிடுதல் etc) புதுக் கருக்கழியாமல் திருப்பி அனுப்பினால் 'சிறுவாணி' ஏற்றுக் கொள்ளுமா? 

நான் மிகவும் ஜனநாயக பூர்வமாகவே இதைக் கேட்கிறேன். 

ஏனெனில் நான் மிகவும் வெறுத்து ஒதுக்குகிற அல்லது 'ஏற்புடைமை' கொள்ளாத ஒரு படைப்பாளி.... 

வேறு இன்னொருவருக்கு மிகவும் 'ஏற்புடையவராக' அல்லது அவர் மிக விரும்பிப் படிக்கும் படைப்பாளியாக இருக்கக் கூடும். 

எனவே என்னிடம் அந்தப் புத்தகம் படிக்கப் படாமல் - நான் கோடி ரூபாய் கொடுத்தாலும் சிலரது எழுத்துக்களைப் படிக்க மாட்டேன் - எனது அலமாரியில் அந்த நூல் உறங்குவதை விட... 

அதை மிக விரும்பும் ரசனை கொண்ட வேறு யாருக்கோ பயன்படுமே? 

மேலும் நான் ஆண்டுக் கட்டணம் செலுத்திவிட்டேன் என்பதாலேயே எனக்கு ஒவ்வாத எழுத்தாளர் என் மீது ஏன் திணிக்கப்பட வேண்டும்? 

ஜெயகாந்தன் சொன்னது போல "இறந்தவர் எவ்வளவு பிரபலமானவர் ஆனாலும் என் வீட்டில் புகுந்து அழ ரேடியோவுக்கு என்ன உரிமை?" 

அவர் பிரபலமான, உண்மையிலேயே திறமையான, அற்புதமான எழுத்தாளுமை கொண்டவராகவே இருக்கலாம். 

எனினும் எனக்கு அவரது கொள்கைகளின்பால் 'ஏற்புடைமை' இல்லை என்னும் போது, எதற்காக அவரது புத்தகத்தை என் வீட்டு அலமாரியில் அனுமதிக்க வேண்டும்? 

எனவே அப்படி ஒரு வேளை, ஒரு குறிப்பிட்ட நூலை நான் திருப்பி அனுப்பினால், அது 'அநாகரிகம்' என்று கருதப்படாமல்... 

'எனது ரசனை சார்ந்த உரிமை'- என்று பார்க்கப்படுமா? 

நான் புதிய உறுப்பினன். யாரையும் காயப்படுத்தி விடவும் கூடாது; யாராலும் காயப் பட்டுவிடவும் கூடாது என்ற ஜாக்கிரதை எனக்கு உண்டு. 

அன்புடன் 
எஸ்.முரளி

--------------------------------------------------------------
 11/6/2019 
 வணக்கம் சார்.
நாங்கள் "மாதம் ஒரு நூல்"திட்டத்திற்கான நூல்களை  இலக்கிய அனுபவம் உடைய ஐவர் குழுவால் , பொதுத்தன்மையுள்ள ஆகச்சிறந்த படைப்புக்களைத்தான் தெரிவு செய்கிறோம்.தெரிவு செய்து அந்தந்த மாதம் புத்தகத்தை அறிவிக்கிறோம்.தபால் செலவு மற்றும் காலதாமதத்தைத் தவிர்க்க இரு புத்தகங்களாக அனுப்புகிறோம்.

350க்கும் மேற்பட்ட வாசகர்கள் கொண்டது நம் அமைப்பு. ஒருசில படைப்புக்கள் ஒரு சிலரின் ரசனைக்குள் அடங்காமல் போகலாம் . அவ்வாறு நேரின் அதன் தேவை உள்ள உங்கள் நண்பர்களுக்குப் பரிசளித்தால் அவர்கள் மகிழ்வார்கள்தானே.

எங்கள் இலக்கு வாசிப்பைப் பரவலாக்கும் வணிக எண்ணமில்லா முயற்சி. 
எங்கள் நோக்கத்தைப் புரிந்துகொண்டு தொடர்ந்து பயணிக்க வேண்டுமென்பதே வேண்டுகோள்.

மனம் திறந்தமைக்கும் 
எங்கள் முயற்சியை ஊக்குவிக்கும் உங்களைப்போன்ற  நல்ல உள்ளங்களுக்கும் நன்றி
--------------------------------------------------------------
11/6/2019 Padmanaban:
 The books which are going to be despatched by SIRUVANI VASAGAR MAIYAM is almost announced earlier with wrapper,writer name,content,etc... It can be stopped at that level and (if necessary) it can be diverted to some others/libraries/etc. It is a suggestion only.
--------------------------------------------------------------------------------




No comments:

கனவு மழை -வ.ஸ்ரீநிவாசன் சிறுகதைகள்

கனவு மழை வ.ஸ்ரீநிவாசன் சிறுகதைகள்  பக்கங்கள்;166          விலை;ரூ 180/- நாஞ்சில்நாடன் அனைத்துக் கதைகளிலுமே நேர்த்தியான முதிர்ச்சி தெரிகிறது....