Saturday, July 3, 2021

சில நெடுங்கதைகள்- -யுவன் சந்திரசேகர்-ஜூலை 2021

 



சில நெடுங்கதைகள்

                                                             யுவன் சந்திரசேகர்

Isbn-978-81-952661-6-6

pages 268          price 260

-----------------------------------------------------------------------------------

வெவ்வேறு களங்களில், வெவ்வேறு தளங்களில், சில ஆண்டு இடைவெளியில் எழுதப்பட்டவை என்றாலும், இவை அனைத்திலுமே 'கதை பற்றிய கதை’ என்ற அம்சம் பொதுத்தன்மையாக நிலவுவது இந்தத் தொகுப்புக்கான நியாயம் என்று பட்டது - ஓரிரு கதைகள் விதிவிலக்கு என்றபோதிலும்.


யுவன் சந்திரசேகர்

------------------------------------------------------------------------------------------------------------------

இது புதுசு :

இந்த ஆண்டு (2021) யுவனின்  சில கதைகளை  “சில நெடுங்கதைகள்” என்ற தலைப்பில் தனது சிறுவாணி வாசகர் மையம் மூலம் பதிப்பித்துள்ளார் அருமை நண்பர்  ஜீ.ஆர். பிரகாஷ். G R Prakash Iyer

நூலை வாசித்துக் கொண்டிருக்கிறேன். ‘யுவனுக்குள்’ தொலைந்து போகிறேன்.

எவ்வளவு விதம் விதமான சிறுகதைகள், பாத்திரங்கள்... சொல் வழக்குகள்... 

நனறி யுவன் & பிரகாஷ்

------------------------

வெகுநாளைக்குப் பிறகு வாசித்த, நினைவுகளை எங்கெங்கோ கடத்தி என்னை அலைக்கழித்த நல்லதொரு சிறுகதை. 

“மாயக்கண்ணாடி” - யுவன் சந்திரசேகர்  (சொல்வனம்.காம் (solvanam dot com))

கதையில் எனக்குப் பிடித்த, சிந்திக்க வைத்துச் சிறகுகளை விரிக்க வைத்த சில வரிகள்...

“கனவிலிருந்து நனவுக்கும் நனவிலருந்து கனவுக்கும் ஓயாமெ ஆடுற ஊசல்தானப்பா மனுச மனசு. இந்த அல்லாட்டம் நிக்கிறதெத்தான், உசுரு போயிருச்சுன்னு மனுசக் கூட்டம் அர்த்தம் செஞ்சுக்குது. வாஸ்தவத்துலெ, டக்குனு ஒரு ஆளெப் பிடிச்சு, “அட, எங்கப்பா இருக்கெ நீயி, கனவுலயா நெசத்துலயா”ன்னு கேட்டம்னா, தெகச்சுப் போவான். ஆமா, இங்குட்டு ஒரு காலு, அங்குட்டு ஒரு காலுன்னு ஊனித்தானே மனுசகொலம் நிக்கிது…!”


“வாயு வேகம் மனோ வேகம்ன்னு சொல்லுவாங்களே, அது இதுதான். இருந்துக்கிட்டே இருப்போம், டக்குன்னு இல்லாமெப் போயிருவோம். பாத்தா, வேற எடத்துலெ இருப்போம்.”

”செத்துப் போறதுன்னா என்ன பாட்டி?” என்ற என் சிறுவயதுக் கேள்விக்கு, பாட்டி சொல்வாள் : “ஊருக்குப் போனவா சேதி யாருக்குத் தெரியுங்கற மாதிரி, அதெல்லாம் யாருக்குத் தெரியும்? இங்கேர்ந்து அங்க தள்றதும், அங்கேர்ந்து இங்க தள்றதும் தான் பிறப்பும் இறப்புமோ என்னவோ?”

மாயக்கண்ணாடியை மட்டுமல்ல; வாசிப்பில் மூழ்கித் தன்னைத் தொலைக்க விரும்புபவர்களுக்கு Yuvan Chandrasekar யுவன் சந்திரசேகரின் “வேதாளம் சொன்ன கதை” யையும் பரிந்துரை செய்கிறேன். (காலச்சுவடு வெளியீடு).

யுவனின், இந்த ஆண்டிற்கான புதிய படைப்புகளை ஆவலுடன் எதிர்நோக்கிக் காத்திருக்கிறேன்.

Aravind swaminathan

--------------------------------------------------------------------------------------------------------------




No comments:

கனவு மழை -வ.ஸ்ரீநிவாசன் சிறுகதைகள்

கனவு மழை வ.ஸ்ரீநிவாசன் சிறுகதைகள்  பக்கங்கள்;166          விலை;ரூ 180/- நாஞ்சில்நாடன் அனைத்துக் கதைகளிலுமே நேர்த்தியான முதிர்ச்சி தெரிகிறது....