Saturday, July 3, 2021

அச்சமேன் மானுடவா ? -நாஞ்சில் நாடன்






யாமார்க்கும் குடியல்லோம் ! என்றார் திருவாமூர் வேளாளர் மருள்நீக்கியார் .
நான் !
இந்த மண்ணின் குடிமகன் தான் ! 
ஆனால்,,
இந்த மண் சரியாக இல்லையே ?
இந்த மண்ணை, இந்த நாட்டினை சரி செய்ய,,,
பாறக்கோலும், மம்பட்டியோடயா ? வந்து சரி செய்யணும்,,,?
இல்லை,,
இந்த வயசுக்கு,,,
என் எழுத்துக்களால் சரி செய்யப் பார்க்கிறேன் ! என,,, ஆதங்கத்தோடு மட்டுமல்ல,,,,
அங்கதத்தோடும்,,,, வந்து சொல் வீசுகிறார் ! நாஞ்சில் நாடன். அவர்கள்.

நாஞ்சில் என்றால் கலப்பை என்றொரு பொருளுண்டு !
வேளாண் மக்கள் பயன் படுத்துகிற அந்த கலப்பையானது, மண்ணைக் கிளறும்,,,
மண்னைப் புரட்டிப் போடும்,,,
இதோ,,,! நாஞ்சிலும், மனசைக் கிளறுகிறார் !
மனவெளியில்,,,நாம் சகித்துக் கொண்டே கடக்கிற நிகழ்வுகளை, மாற்றி விடத்துடிக்கிற வேளாண்மைக்காரராக,,,, அச்சமேன் மானுடவா ? என்றபடி புரட்டிப் போடுகிறார்,,,!
சென்றிடுவீர் எட்டுத்திக்கும், கலைச்செல்வங்கள் ,
யாவும் கொணர்ந்திங்குச் சேர்ப்பீர் ! என்றான் மகாகவி பாரதி !

எட்டுத்திக்கு,,,எல்லாம்,,செல்ல வேண்டாம்,,,!
இங்கே,,இந்த மண்ணில்,,,
நம் தமிழ் இலக்கியங்களில்,,இருக்கிற சொற்களைப் பேசுங்கள் ! அறிந்து கொள்ளுங்கள் , அறிந்ததைப் பகிர்ந்து கொள்ளுங்கள் என்றபடி,,பல,,,
நல்ல தமிழ்ச் சொற்களை,,,,,
நல்ல தமிழ் இலக்கிய வார்த்தைகளுடன் ஊடாடியபடியே,,,,
தண் தமிழில் 163 கவிதைகளை எழுதி விட்டேன்,,, என்று, இடையே ஒரு அங்கதமாடி, அந்த ஒளவைக்கிழவியையும், வம்பிற்கிழுத்து விட்டு,,,,,

தமிழ் வளர்க்கிறேன் என்று சொல்பவர்களும், 
தமிழ் வாழ்க என்று சொல்பவர்களும்,
பல்கலைகழகங்களும்,
தமிழ்த்துறைத் தலைவர்களும், செய்ய வேண்டிய பணியினை
வள்ளுவனிலே இருந்து,,, சமகால எழுத்தாளர்களை வரைப் படித்த ஒரு தமிழ் எழுத்தாளன் செய்கிறார்,,எனும்,,போது,,,,
அந்த தமிழ் நாற்றத்தை நுகர நமக்குச் செவி இருக்கிறதா ?
நுகர்வதற்கு செவியா ? நாசி அல்லவா ?
நாம் தான்,,, தற்போது,,நாசியை தீத்தொற்றுக் கிருமிக்காய் காப்பு செய்து மூடி அல்லவா ? வைத்துக் கொண்டிருக்கிறோம்,,,!
திறந்திருப்பது செவிதானே ?
அதன் வழியாகவாவது,,, நாஞ்சிலின் தமிழ்,,உங்கள் நெஞ்சத்தைத் தொடட்டுமே,,,,
நாற்றமா ? மணம் அல்லவா ? என்று சொல்லத் தோன்றுகிறதா ?
நாற்றத் துழாய்,,ஆண்டாள் மணமுள்ள துளசியெனச் சொல்லிய தமிழ் ஐயா !


ஒரு முப்பத்தெட்டுக் கவிதைகள்  நாற்பத்தியாறு  பக்கங்களில் விதைத்திருக்கிறார்,,,
முதல் விதை,,,!
ஆம் முதல் கவிதை முள் மரம் என்கிறது !
வள்ளுவன் சொன்ன இளையதாக முள்மரம் கொல்,,என்ற சொல்லோடு ஆரம்பித்து,,,
இப்போது முள் மரம் முறிக்க,,முடியுமா ?
முடியுமெனச் சொன்னால்,,,,,?
அழுகிய முட்டை குஞ்சு பொரித்தால்,,,?
வாக்குச் சீட்டால் முள்மரம் வெட்டலாம்,,,

தமக்கான பகையினை வேரறுக்க,,,
நிகும்பலை யாகம்,,,செய்ய புகுகிறார் ராவணன் மகன் இந்திரஜித் ! அந்த நிகும்பலை யாகம்,,,முழுதாக முடியுமுன்னே,,,, வீபிஷனன் உஇதவியால், இலக்குவனால்,,நிகும்பலை யாகம்,குலைக்கப்பட்டது,,,!
அரக்கன் நம்மை
வருந்திட மாயஞ்செய்து நிகும்பலை மருங்கு புக்கான்
முருங்கழல் வேள்வி முற்றி முதலற முடிக்க மூண்டான்’’
இது கம்பராமாயணம் !
நாம்,,, நல்லது செய்ய வேண்டுமென நினைத்துச் செய்கிற நிகும்பலை யாகங்களும்,,,இப்படித்தான்,,முடிகிறதெனச் சொல்கிறார்,,நாஞ்சில் நாடன்.

இனி என் செய்ய ? எனும் கேள்வி வரும் பொழுது,,, ?
நம் கைகளால்,,,பேன் வேண்டுமானால் பார்க்கலாம்,,,, என்கிற அங்கதம்,,, இடிக்கிறது,,,நம் நெஞ்சை,,
இதில் களைகள் இருக்குமோ ?
இல்லை,,,
முப்பத்தியெட்டு கவிதைத் தலைப்புகளுமே,,,, ! கலைகள் தான்,,
களைகள் அல்ல,,,

உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே,,
என்றொரு விதை,,,,
இன்றைய நாட்டு நடப்பு,,, !
2016 ல் உயிர் எழுத்து இதழில் எழுதிய கவிதை,,,,
அன்றும், அது தான் நடப்பு,, !
‘’ அரசு மருந்தகமா ?
ஏழையான் நோய்க்கு மாத்திரை இராது !
சோதனைக் கருவி பழுதாய்க் கிடக்கும் !
சமோசா பேடா வாங்கிய வகையில் ,
அமைச்சரவைக்கு அறுபது கோடி !
நகைக்கடை துணிக்கடை கதவு திறக்க
கவர்னர் என்றொரு பதவி உண்டிங்கே !
குத்து விளக்கைக் குனிந்து ஏற்ற
குலுங்கும் கவர்ச்சி நடிகை வருவாள்  !


வாளோர் ஆடும் அமலை,,, !
இல்லையில்லை,,,
சாட்டையோடு,,ஆராசனை ஆடுகிரார் !,நாஞ்சில்,,,
பின்னும்,,
பின்னரும்,,,,
புலம்பி என்னாம் ? பொருமி என்னாம்
புகைச்சல் இருமல் பூமியைக் குலுக்குமோ ?
ஆதலினால் அறிக நீ ஒன்று !
உலகம் என்பது உயர்ந்தார் மாட்டே,, என்றபடி

எல்லோருக்கும்,,,கொடை கொடுக்கிறார்,,,
நின்று  களமாடுகிறார் !

எழுத்துலகம், முதல் அரசியல் களம் வரை,,, காணும், இடமெல்லாம்,,நீக்கமற நிறைந்திருக்கும்,,,அவலங்களையெல்லாம்,,
நின்று கிடக்கும் இலவச வரிசையில்
நாற்சந்தியை நடந்து கடக்கும்
நாதியொன்று இன்மையால்,,,,,

என்று உயிர் எழுத்தில் எழுதி விட்டு,,அமைதியாகச் சிரிக்கிறார்,,,நமக்குத்தான் பற்றிக் கொண்டு வர வேண்டும்,,,,,?
அதெப்படி,,நமக்கு,,வரும்,,,
நாம் தான்,,,
மிக்ஸி கிரைண்டர் கூட வாங்க வக்கற்று,,இலவச வரிசையில் காத்து நின்று வாங்கியவர்களாயிற்றே,,,,?

வாசிப்பு உயர்வானது தான் !
ஆனால்,,,
வாசகன் ! உயர்வானவன் தானா ?
வாசகனுக்கு உரிய மரியாதை கிடைக்கிறதா ?
நூல் வெளியீடு என்றால் நடக்கிற கூத்தினையும்,,,பிட்டு வைக்கத் தவறவில்லை,,,, !

இயக்குநர், நடிகர், இசையமைப்பாளர்
புரட்சி, இமையம், சிகரம், மேடையில்
வலிய தொழிலதிபர் முதற்படி பெற்றார்

எத்தனைக் கோடி செலுத்தாக் கடனோ ?
இரண்டாம் மூன்றாம் நான்காம் படிகள்
சிறுகடன் பெற்ற சிரு தொழிலதிபர்
அரும் பிறப்பெடுத்த ஆறு பேருக்கு
அன்பளிப்புப் படிகள்,,,,,,

வாசிக்க வேண்டும் அதற்கு வாங்கவும் வேண்டும்
சலுகை விலையே ஒன்பானாயிரம்
காசுப்பையில் கனமே இல்லை
செல்லாத்தாளும் இல்லை என்றிருந்தவன்
செல்லும் தாளும் சென்றவிடம் அறியான் !
அவன் எட்டாம் வரிசையின் மூத்த வாசகன் .

என்கிற கவிதையினைப் படிக்கிர போது,,,
தன் அணி வலைக்குள்ளேயே பந்து தள்ளுகிற நிலைதான் ! ? என்றாலும்,,
உண்மையினை இப்படி உரைக்கவும்,,
ஒரு எழுத்தாளன் வேண்டித்தான் இருக்கிறது ! 

கற்கை நன்றே கற்கை நன்றே,,, எனும் கவிதை அறச் சீற்றம் !

சாவகம், புட்பகம், இமய வரம்பு
எல்லாம் கடந்த எம்
தாதையர் முது சொம்

அசரிரீ போல அகல ஒலித்தன
தாதையர் குரல்கள் !
மலங்கள் என்னடா மயிராண்டி ?
பீ எனச் சொல்லேன் பேதீல போவான் !


என்ற வரிகளைப் படித்ததும்ம்,,,, சிரிப்பாணி,,,,வந்தது,,,சிரித்துச் சிரித்து,,புரையேறிற்று

நெருநல் உளன் இன்றில்லை,,, எனும்,,கவிதையிலும்,,,

மந்திணி நாலத்து மக்கள் யாவர்க்கும்
ஒரு துகள் உறுதி 
ஆதார் அட்டை இருந்தாலும்
இல்லாமற் போனாலும்,,

என்று சொல்லி,,,சுடுகிறார்,,,,

நாள் என்  செயும் ?
கோள் தான் என் செயும் ? எனும் கவிதையில்,,,,
தமிழ் மாதங்களின் , விசேசங்களை,பெளர்ணமிகளை வரிசைப்படுத்தி விட்டு,,,,, ஜகத்குருவினையும், வம்பிற்கு இழுத்து விட்டு,,,
எமக்கென்ன ?
வரவா செலவா ?
வாய்க்கரிசி நெல்லா ?

மழை பெய்யணும்
அதற்கென்ன செய்யணும்,,,?

என்று கேள்வி எழுப்புகிறார்,,,

பேய் அண்டாப் பிறவி கேட்கிறார்,,,
மதங்களைப் பட்டியலிடுகிறார்,,,


எதிர்வந்து அமர்ந்ததோர் வன்முகம்
அதிகாரம் வீங்கிப் புழுத்து வடிந்தது 
உடலெங்கும் ஊர்ந்தன ஊழல் புழுக்கள்,,
என மதிய வேளை ரயில் வண்டியில் வந்தமர்ந்த அரசு அலுவலரை அடையாளம் காட்டுகிறார்,,,!

அது ?
யாராக இருக்கலாம் ?
நானாக, நீங்களாகக் கூட இருக்கலாம்,,,

எப்படி அறிவாய் ? எப்படியோ தெரியும்,,!
ஆனால், ஒன்று தெரியாது

இவரெல்லாம் வாழும் நாட்டில் 
மழை பொழியுமா ?

என அறம் பாடுகிறார் !,,,
கவிதை வரிகள் தான்,,அறச்சீற்றம்,,கொள்கிறதெனப் பார்த்தால்,,,?

இக்கவிதைக்கு,,படம், வரைந்த ஓவியர் ஜீவா அண்ணா அவர்கள்,,
அந்த அரசு அலுவலருக்கு ரெண்டு பக்கமும் பாக்கெட் வைத்து வரைந்த சட்டையினைப் பார்த்ததும்,,,, 
அறத்திற்கு,,ஏற்ற,,,,,ஓவியம் தான்,,,என்றே நினைந்தேன்,,,

சட்டம் நீதி அதிகாரம் கடவுள்
என எவற்ரின் முன்பும்
நீயும் அவனும் சமமல்ல

சென்ற நிதியாண்டில் நாட்டுடமை
வங்கிகளில் மொத்த மோசடி எத்தனை கோடி
உனக்கும், எனக்கும் பங்குண்டா ?

பிறகெதற்கு , எவறை
எப்போதும் அஞ்சுகிறாய் ?
மரணம் நிரந்தரம் 
இன்றோ ? நாளையோ ?

அச்சமேன் மானுடவா  ? கவிதையில்,,கேட்கும்,,போது,,இந்த நாட்டின் மீது,,,
இந்த ஆளுமைகளின் மீது,,,
ஒரு தார்மீகக் கோபம்,,எழுந்து கொண்டிருக்கிறது !
ஒரு அறச் சீற்றம் என்பார்களே ? அது ,,,,,,,,,,,
எழுகிறது,,,!

அப்படி எழுந்தால்,,,, ஒரு எழுத்தாளன் வெற்றியடைகிறான் என்றே பொருள் 
அப்படி எழுவதே,,
எழுத்தாளன் விரும்புவதும்,,,,
ஆம் !
நாஞ்சில் நாடன் விரும்புவதும்,,அதுதான்,,,
அதனால் தான்,,,

எவர் எப்படியும் போகட்டும்
செத்துத்தான் போவேன் எனில்
கொடும்பாவம் சிலதைக்
குழிப்படுத்திப் போயேன் !

என்று எழுதுகிறார்,,,


அதிகாரம் கைக்கொள என்ன செய்யலாம் ?
அரசியல் ஒன்றே அறுவழிச் சாலை !
அடியாள் , ஆயுதம், வன்முறை, குற்ரம்
தரகு, பரத்தமை
மூலதனங்கள்
முயன்று பார் !
உத்தமனாக வாழ்ந்தென்ன கண்டாய் ?

அச்சமேன் மானுடவா ? எனும்,,,,
இந்நுலின்,,,
கடைக் கவிதை,,,

ஏதேனும்,,செய்தாக,,வேண்டும்,,,!
என்ன செய்யலாம் ?
இன்று பாரதத்திடை நாய்போலே ஏற்றமின்றி வாழுவாய் போ போ போ
நன்று கூறிலஞ்சுவாய் போ போ போ

வெற்றி கொண்ட கையினாய் வா வா வா !,,, என்று பாரதியைப் பாடி,,
நாஞ்சிலைப் படிப்போம்,, !


02-07-2021 அன்புடன் என்றும்,
கோவை-4 அ.வேலுப்பிள்ளை,
------------------------------------------------------------------------------------------------------------------------


 

No comments:

கனவு மழை -வ.ஸ்ரீநிவாசன் சிறுகதைகள்

கனவு மழை வ.ஸ்ரீநிவாசன் சிறுகதைகள்  பக்கங்கள்;166          விலை;ரூ 180/- நாஞ்சில்நாடன் அனைத்துக் கதைகளிலுமே நேர்த்தியான முதிர்ச்சி தெரிகிறது....