கல்குமிழிகள்
ந.பிச்சமூர்த்தி
விலை ரூ190/-(+50/- அனுப்பும் செலவு)
பிச்சமூர்த்தியின் கதைகள் வாழ்க்கையின் குறுக்குவெட்டுத் தோற்றத்தை நமக்குத் தருகின்றன. அத்தோற்றம், தள்ளி நின்ற ஒருவர் "பார்த்தியா, இப்படி இருக்கு கதை" என்று ஒரு புன்சிரிப்புடன் சொல்வதாகவும் படுகிறது. கதைகளும் சொல்கிறார்தான். பல சம்பவங்கள் நிறைந்து, கதா பாத்திரங்களும் நிறைந்து உள்ள கதைகளும்தான்.
பிச்சமூர்த்தியின் கதை சொல்லும் பாணியும் தனித்தது. மிகச்சிறிய வாக்கியங்கள். மிகக்குறைவான சொற்கள். மிகச் சிக்கனமான சொல்முறை 'நறுக்குத் தெறித்தாற்போல்' என்று சொல்கிறோமே. அப்படித்தான் இருக்கும்.
இக்கதை சொல்லலில் சங்கிலித் தொடர் இல்லை.மிகக் குறைந்த சொற்களில் ஒரு தாவல்.
வெங்கட் சாமிநாதன்
-ந. பிச்சமூர்த்தி கதைகள்–


No comments:
Post a Comment