நவரஸ நினைவுகள்
சௌகார் ஜானகி
எழுத்து -எஸ்.சந்திரமௌலி
* “உனக்கு எது சரி என்று தோன்றுகிறதோ அதைச் செய்யத் தயங்காதே” என்பார் அப்பா. “சரி எது? தவறு எது?’ என்பதைப் பகுத்தறியும் பக்குவமும் அவர் அளித்த பலம்தான். “சிம்பிளாய் இரு; கையில் காசில்லாவிட்டால் கடன் வாங்கியாவது செலவு செய்யணும்னு நினைக்காதே” என்று அப்பா சொன்னதை நான் மறந்ததே இல்லை.
* ஜொலிப்பும் பந்தாவும் மிக்க சினிமா உலகில் எளிமையை விரும்புகிறவளான நான் எதிர்நீச்சல் போட்டு சமாளித்தது ஒரு பக்கம் இருக்க, சின்னச் சின்ன மகிழ்ச்சிகள் பலவற்றைத் தியாகம் செய்யவும் வேண்டியிருந்தது.
* பணத்திலும் பகட்டிலும் மிதக்கும் திரையுலகில் பணத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்த போதிலும் பணம் மட்டுமே முக்கியமல்ல, உண்மையும், உழைப்பும் மனத் திருப்தியும்தான் வாழ்க்கையின் ஜீவ நாடிகள் என்ற கொள்கையைக் கை விடாமல் என்னால் வாழ முடிந்தது.
* எதையுமே மனத்தில் வைத்துக் கொள்ளாமல் வெளிப்படையாகப் பேசி விடுகிற குணம் எனக்கு. இதனால் திரையுலகிலேயே எனக்குப் பல பிரச்னைகள் ஏற்பட்டிருக்கின்றன. இத்தகைய சுபாவமுள்ள நான் எப்படி அரசியலுக்குப் பொருத்தமாக இருக்க முடியும்?
* இந்த நாட்டின் நல்ல பிரஜையாக, அரசாங்கத்தை மதித்து, மனசாட்சிக்கு விரோதமில்லாமல் வருமான வரி கட்டினேன்; இப்போதும் கட்டிக் கொண்டு வருகிறேன்.
பத்மஸ்ரீ சௌகார் ஜானகி
----------
கல்கியில் வெளிவந்த
கட்டுரைத் தொடர்:



No comments:
Post a Comment