Monday, October 29, 2018

"பூங்கொத்து" அசோகமித்திரன்- ஜூலை-2017 -(3)









ஜூலை-2017  -
"பூங்கொத்து"  
அசோகமித்திரன்
(-அவர் மறைவுக்கு சில நாட்கள் முன்பாக மையத்தின் நோக்கம் கருதி மனமுவந்து அளித்த இதுவரை நூல் வடிவில் வெளிவராத கட்டுரைகள் )

பக்கங்கள்  176  விலை 140 /-

ISBN 978-81-940780-2-9

****************************************************************************************************
சிறுவாணி வாசகர் மைய வெளியீடு 4.
பூங்கொத்து

இலக்கிய ஜாம்பவான் அசோகமித்திரன் -
அவரே தேர்ந்தெடுத்து, தலைப்பும் தந்து,
பவித்ராவுக்கு வழங்கி, சிறுவாணி வாசகர் மையம் நமக்கு அளித்த கட்டுரைத் தொகுப்பு.
அறிமுக உரையில் ஞாநி "முதல் வாசிப்பில் அசோகமித்திரனின் படைப்புகள் சாதாரணமாகத் தோன்றுகின்றன. மறுமுறை வாசிக்கும்போதுதான் அவற்றின் சிறப்புகள் மெல்ல மெல்லப் புலப்பட ஆரம்பிக்கின்றன
என எழுதியிருக்கிறார். ஏன் அப்படி என்று யோசித்தபோது, ஒரு பதிவில் கி.ரா. இப்படிக் குறிப்பிட்டது ஞாபகத்திற்கு வந்தது :-

"எழுத்தாளர்களும் ஒரு வகையில் துர்வாசர்கள்தாம். சபலம், கர்வம், அகம்பாவம், அக்கரமம் எல்லாமே இவர்களிடம் உண்டு. இதே
சமயம் பசுப்போல குணவான்களும் இருக்கிறார்கள்."

அசோகமித்திரன் பசுப்போல குணவான். கோபத்தைக் காட்டமாட்டார், லேசா முகத்தைச் சுளிப்பார். ஓங்கி மண்டையில் குட்டமாட்டார், சின்னதா, செல்லமா இடுப்பில் நிமிண்டுவார். குலுங்கக் குலுங்க நம்மைச்
சிரிக்கவைகக மாட்டார், உதட்டோரம் ஒருசிறுநகை அரும்பச் செய்வார்.
அந்தப் பாணியில் அவர் எழுதிய கட்டுரைகள்.
"தேவ் ஆனந்த்தின் நீண்ட வாழ்க்கையில் பல ஏமாற்றங்கள் இருந்திருக்கும். வாக்குகொடுத்தவர்கள் மீறியிருப்பார்கள். முப்பது,முப்பத்தைந்து ஆண்டுகளாக அவருடைய எந்தப் புதுப்படமும் ஒழுங்காக ஓடவில்லைஆனால் அவர் எழுதிய புத்தகத்தில் ஓரிடத்தில்கூடக் கசப்பு இல்லை. குறை கூறல் இல்லை. அவருடைய இயல்பில் அவற்றுக்கு இடமில்லை."
என எழுதும் அசோகமித்திரனின் இயல்பும்அதுதான் என்பதை இந்தக் கட்டுரைகள்நிரூபிக்கின்றன.

புத்தகங்கள், எழுத்தாளர்கள், திரைப்படங்கள்,
அந்தக்காலச் சென்னை, சிங்கம் ஜெயகாந்தன் எனத் தாம் பார்த்த, கேட்ட, படித்த, சிந்தித்தவற்றையெல்லாம் சரளமாகக் கூறிக்கொண்டே போகிறார்.
நன்று,

திரு.கி.ரா.திருமலையப்பன்)

****************************************************************************************************
Suresh Venkatadri

July 24, 2017

"பிற எழுத்தாளர்களின் படைப்புகளை பற்றி அவர் மெல்லிய குரலில்தான், சொல்வார்.தான் விமர்சகன் அல்ல என்று அவர் திரும்பத் திரும்ப கூறினாலும், அவருடைய அபிப்ராயங்களுக்கு மிகுந்த மதிப்பு இருந்தது. அதனாலேயே அவருக்கு நிறைய எதிரிகளும் உண்டு.
நகுலன் ஒரு கவிதை கூட எழுதினார்:

கநாசுவா? தமிழே தெரியாதே!
அவர் சிறுகதை எழுதித் தோற்றவர்.
நாவல் சுத்தமாக வராது.
கவிதையோ படு அபத்தம்.
அது சரி. அவர் என் நாவல் பற்றி என்ன சொன்னார்?

க.நா சு, பற்றி அசோகமித்திரன்.கோவை சிறுவாணி வாசகர் மையம், வெளியிட்டிருக்கும், "பூங்கொத்து " நூலிலிருந்து. அவரே தேர்ந்தெடுத்துக் கொடுத்த கட்டுரைகளின் தொகுப்பு. முந்தாநாள் புத்தகம் கையில் கிடைத்தது. சரி சும்மா ஓரிரண்டு கட்டுரைகளை வாசிக்கலாம் என்று தொடங்கினேன். ஆனால், நூலிள்ள , 39 கட்டுரைகளையும், வாசிக்காமல், வைக்க முடியவில்லை. அவ்வளவு, சுவாரசியம், எளிமை, கூறிய நகைச்சுவை, உள்பொதிந்த சோகம் என்று,ஒரு அற்புதமான கலவை. 

சிறுவாணி வாசகர் மையத்துக்கும், பவித்ரா பதிப்பகத்துக்கும் வாழ்த்துக்கள்.

****************************************************************************************************
Akila Alexander
அன்றொருநாள் அசோகமித்திரன் ...
ஹிந்து லிட் ஃபெஸ்டிவலில் பார்க்க நினைத்து இயலாமல் போயிற்று. புத்தகக் கண்காட்சியில் திரையிடப்படுவதை அறிந்திருந்தும் அலுவலக நேரம் என்பதால் தவரவிட்டு விடுவேனோ என்று அஞ்சினேன். தென்னக ரயில்வே புண்ணியத்தில் ஆவணப்படத்தைப் பணியிடையே வந்து பார்த்து திரும்பினேன்.
நண்பர்களை அக்கறையுடன் கவனித்துக்கொண்டிருந்த பிரசன்னாம்மாவையும், கலைராணி அவர்களையும் சந்தித்து பேசிக்கொண்டிருக்கையில் அறிந்த அறியாத VIP க்கள் வர அரங்கம் நிறைந்து திரையிடல் ஆரம்பமானது.
திரை உயிர் பெற அசோகமித்திரனுக்கு பாராட்டு மற்றும் எழுத்தாளர்கள் சந்திப்பில் ஆரம்பித்து, அவருடன் அவருடை வேளச்சேரி வீட்டிலில் உரையாடல், சில குடும்ப புகைப்படங்கள், திருவல்லிக்கேணி, ஹைத்ராபாத், அங்கு அவர் படித்த கல்லூரி என பயணித்திருக்கிறார்கள்.
ஆவணப்படத்தில் பலர் அசோகமித்திரனுடன் உரையாடி இருக்கிறார்கள். உலக யுத்த, இந்திய சுதந்திரப்போர் அதன்பின் நடந்த மதக்கலவரங்களைப் பார்தவர். ஹத்ராபாத் வளர்பினால் மதங்களுக்கப்பார்பட்டவராக அவரும் அவருடைய எழுத்தும் இருக்கிறது தன் எழுதுவதில் தனக்கு உள்நோக்கம் இல்லை என்றாலும் ambition இருந்தது என்கிறார். தன் தமிழ் மற்றும் ஆங்கில எழுத்து வழி அவர் கொண்டிருக்கும் வாசகர் பரப்பு அதிகம். அரவிந்த் அடிகா அசேகமித்திரனின் எழுத்து பற்றி கூறக்கேட்டது இனிய அனுபவம்.
ஆவணப்படம் எடுக்கையில் instruction தருவது, கமிரா நகர்வது, லைட்டிங் சரிசெய்வது மற்றும் பிரசன்னாம்மா பேசுவது போன்ற காட்சிகளும் அதன் இயல்பில்வர, நம் கண்முன் shooting நடப்பது போன்றதொரு வித்யாசமா அனுபவத்தைத் தந்திருக்கிறார் Prasanna Ramaswamy .
அசோகமித்திரன் சட்டென்று திரும்பி தன் மெல்லிய குரலில் "என்னப்பா" எனக் கேட்பது போன்று இருந்தது. திரையிலும், திரைக்குப் பின்னும் இந்த ஆவணப் படத்திற்கு தம் பங்காற்றிய அனைவருக்கும் நன்றியும் பாராட்டுக்களும்.
உங்கள் கட்டுரைத்தொகுப்பான "பூங்கொத்து" வாசித்துக்கொண்டிருக்கிறேன் அசோகமித்திரன்.

*************************************************************************************************************************************
 #சிறுவாணி_வாசகர்_மையம்-
#பவித்ரா_பதிப்பகம்
"மாதம் ஒரு நூல்"திட்டத்தில்
(ஜூலை-2017)
 வெளியீடு 
-------------

வருடம்-1       நூல் 3.பூங்கொத்து
- - - - - - - - -
இலக்கிய ஜாம்பவான் அசோகமித்திரன் -
அவரே தேர்ந்தெடுத்து, தலைப்பும் தந்து,
பவித்ராவுக்கு வழங்கி, சிறுவாணி வாசகர் மையம் நமக்கு அளித்த கட்டுரைத் தொகுப்பு.
அறிமுக உரையில் ஞாநி "முதல் வாசிப்பில் அசோகமித்திரனின் படைப்புகள் சாதாரணமாகத் தோன்றுகின்றன. மறுமுறை வாசிக்கும்போதுதான் அவற்றின் சிறப்புகள் மெல்ல மெல்லப் புலப்பட ஆரம்பிக்கின்றன
என எழுதியிருக்கிறார். ஏன் அப்படி என்று யோசித்தபோது, ஒரு பதிவில் கி.ரா. இப்படிக் குறிப்பிட்டது ஞாபகத்திற்கு வந்தது :-

"எழுத்தாளர்களும் ஒரு வகையில் துர்வாசர்கள்தாம். சபலம், கர்வம், அகம்பாவம், அக்கரமம் எல்லாமே இவர்களிடம் உண்டு. இதே
சமயம் பசுப்போல குணவான்களும் இருக்கிறார்கள்."

அசோகமித்திரன் பசுப்போல குணவான். கோபத்தைக் காட்டமாட்டார், லேசா முகத்தைச் சுளிப்பார். ஓங்கி மண்டையில் குட்டமாட்டார், சின்னதா, செல்லமா இடுப்பில் நிமிண்டுவார். குலுங்கக் குலுங்க நம்மைச்
சிரிக்கவைகக மாட்டார், உதட்டோரம் ஒருசிறுநகை அரும்பச் செய்வார்.
அந்தப் பாணியில் அவர் எழுதிய கட்டுரைகள்.
"தேவ் ஆனந்த்தின் நீண்ட வாழ்க்கையில் பல ஏமாற்றங்கள் இருந்திருக்கும். வாக்குகொடுத்தவர்கள் மீறியிருப்பார்கள். முப்பது,முப்பத்தைந்து ஆண்டுகளாக அவருடைய எந்தப் புதுப்படமும் ஒழுங்காக ஓடவில்லைஆனால் அவர் எழுதிய புத்தகத்தில் ஓரிடத்தில்கூடக் கசப்பு இல்லை. குறை கூறல் இல்லை. அவருடைய இயல்பில் அவற்றுக்கு இடமில்லை."
என எழுதும் அசோகமித்திரனின் இயல்பும்அதுதான் என்பதை இந்தக் கட்டுரைகள்நிரூபிக்கின்றன.
புத்தகங்கள், எழுத்தாளர்கள், திரைப்படங்கள்,
அந்தக்காலச் சென்னை, சிங்கம் ஜெயகாந்தன் எனத் தாம் பார்த்த, கேட்ட, படித்த, சிந்தித்தவற்றையெல்லாம் சரளமாகக் கூறிக்கொண்டே போகிறார்.
நன்று, 

(திரு.கி.ரா.திருமலையப்பன்)
-------------
"பிற எழுத்தாளர்களின் படைப்புகளை பற்றி அவர் மெல்லிய குரலில்தான், சொல்வார்.தான் விமர்சகன் அல்ல என்று அவர் திரும்பத்  திரும்ப கூறினாலும், அவருடைய அபிப்ராயங்களுக்கு  மிகுந்த மதிப்பு இருந்தது. அதனாலேயே அவருக்கு நிறைய எதிரிகளும் உண்டு. 
நகுலன் ஒரு கவிதை கூட எழுதினார்:
கநாசுவா? தமிழே தெரியாதே!
அவர் சிறுகதை எழுதித் தோற்றவர்.
நாவல் சுத்தமாக வராது.
கவிதையோ படு அபத்தம்.
"அது சரி. அவர் என் நாவல் பற்றி என்ன சொன்னார்?"

   க.நா சு, பற்றி அசோகமித்திரன்.கோவை சிறுவாணி வாசகர் மையம், வெளியிட்டிருக்கும், "பூங்கொத்து " நூலிலிருந்து. அவரே தேர்ந்தெடுத்துக் கொடுத்த கட்டுரைகளின் தொகுப்பு. நூலிள்ள , 39 கட்டுரைகளையும், வாசிக்காமல், வைக்க முடியவில்லை. அவ்வளவு, சுவாரசியம், எளிமை, கூறிய நகைச்சுவை, உள்பொதிந்த சோகம் என்று,ஒரு அற்புதமான கலவை.
 (திரு.சுரேஷ் வெங்கடாத்ரி)
-----------------
"இலக்கியம் என்றதும் அது சராசரி மனிதர்களைப் போல இல்லாத அசாதாரணக் காவிய நாயகர்களைப் பற்றியதாக இருக்க வேண்டும் என்ற கருத்து ஏதோ ஒரு பழங்காலத்தில் இருந்திருக்கலாம். உண்மையில் இலக்கியம் என்பது தங்களுடைய சாதாரண வாழ்க்கையில் சாதாரண நிகழ்ச்சிகளின் சில தருணங்களில் எப்படி சராசரி மனிதர்கள் தங்களை அறியாமலேயே கூட காவிய நாயகர்களுக்குச் சமமானவர்களாக உயர்ந்து நிற்கிறார்கள் என்பதை நமக்கு உணர்த்துவது தான். அப்படி உணர்த்தும் எழுத்தாளர் அசோகமித்திரன்.
-பரிக்க்ஷா ஞாநி
------------------
பக்கங்கள் 176
விலை ரூ140/-

#Siruvani_vasagar_maiyam
#pavithra_pathippagam

Gpay 
8778924880






No comments:

கனவு மழை -வ.ஸ்ரீநிவாசன் சிறுகதைகள்

கனவு மழை வ.ஸ்ரீநிவாசன் சிறுகதைகள்  பக்கங்கள்;166          விலை;ரூ 180/- நாஞ்சில்நாடன் அனைத்துக் கதைகளிலுமே நேர்த்தியான முதிர்ச்சி தெரிகிறது....