Thursday, December 29, 2022

கடவுளுக்கென ஒரு மூலை- (மொ.பெ) -அனுராதா கிருஷ்ணசாமி -டிசம்பர்-2022



 கடவுளுக்கென ஒரு மூலை-

(மொழிபெயர்ப்புச் சிறுகதைகள்)

-அனுராதா கிருஷ்ணசாமி

பக்கங்கள் 224   விலை  ரூ.220/-

------------------------------------------------------

கடவுளுக்கென ஒரு மூலை-

(மொழிபெயர்ப்புச் சிறுகதைகள்)

-அனுராதா கிருஷ்ணசாமி


 ரூ.220/-

(+அனுப்பும் செலவு 

தமிழ்நாட்டுக்குள் ரூ. 40/-

பிற மாநிலங்களுக்கு ரூ 50/-)


NEFT / RTGS மூலம் பணம் அனுப்ப.....


Canara Bank, H .Q.Road Branch, Coimbatore - 641018,


Current A/c no. 61211010003590


IFSC :  CNRB0001204


Beneficiary : Siruvani Vasagar Maiyam. 

****

8778924880

Google pay (siruvani vasagar maiyam) number

*****

சிறுவாணி வாசகர் மையம், 

24-5, சக்தி மஹால், சின்னம்மாள் தெரு, 

கே. கே. புதூர், 

கோவை - 641038


9940985920 /8778924880

(ஜி.ஆர்.பிரகாஷ்)


siruvanivasagar@gmail.com

----------------------------------------------------------------

நண்பர் திருமதி அனுராதா கிருஷ்ணசாமியின் சரளமான மொழிபெயர்ப்பில் மிளிர்கிறது, ‘கடவுளுக்கென ஒரு மூலை’, சிறுகதைத் தொகுப்பு.

சிறுவாணி வாசகர் மையம் வெளியீடு.

மொத்தம் 14 கதைகள் -பஞ்சாபி, ஹிந்தி, ஒடியா, உருது, டோக்ரா, வங்காளி, குஜராத்தி, கன்னடம் என்று வரும் சிறுகதைகள் அத்தனையும்  அந்தந்த மொழியில் பிரபலமான பெண் எழுத்தாளர்கள் எழுதியவை.

ஆங்கில, ஹிந்தி வழியே தமிழுக்கு மொழிபெயர்ப்பானவை.

கடைசிக் கதையான குஜராத்திச் சிறுகதை 

’கதவு’ இப்படித் தொடங்குகிறது - ஹிமான்ஷி ஷேலாட் எழுதியது-

//

முட்டாள்ப் பெண்ணே! இப்படியே தொடர்ந்தால் நீ உன் கையாலேயே சாவது நிச்சயம். நான்கு நாள் ஆகிவிட்டதே, உனக்கு வயிறு வலிக்கவில்லையா? அந்தப் பெண்களைப் பார். ஒரு கவலையும் இல்லாமல் எவ்வளவு சந்தோஷமாகக் குந்தியிருந்து விட்டு வருகிறார்கள்! உனக்கு மட்டும் ரொம்பவும்தான் நொரநாட்டியம்

//

கழிவறை இல்லாத கிராமச் சூழ்நிலையில் குந்த வைக்க இடம், நேரம் பார்த்துக் காத்திருக்கும் பெண்கள் பற்றிய  கதை.

அனுராதா மேடத்திடம்  ‘நொரநாட்டியம்’  இங்கே எப்படி வந்தது என்று கேட்டேன்.

‘ஹிந்தியிலே நக்ரா தான்  இங்கே மொழியாக்கமாக வந்திருக்கு”


 May your tribe increase!


நன்றி EraMurukan Ramasami sir

-----------------------------------------

கடவுளுக்கென ஒரு மூலை

(மொழி பெயர்ப்புச் சிறுகதைகள்)

பவித்ரா பதிப்பகம்

எல்லாக் கதைகளையும் பற்றிச் சொல்வது சாத்தியமில்லை/ தேவையுமில்லை என்பதால்  சொல்வதற்கு  நான்கு கதைகள்

அங்கூரி ( பஞ்சாபி)

அம்ரிதா ப்ரீதம்


கணவனின் திருமண பந்தத்தில் அங்கூரி இரண்டாம் மனைவி. பிரபாத்தியின் ஈமச்சடங்குகளின்போது அங்கூரியின் தந்தை அவனுடைய ஈர மேல் துண்டைப் பிழிந்து காயவைத்ததன் மூலம் தன் மகளை அவனுக்கு மணம் முடித்துத்தர மறைமுகமாக உணர்த்துகிறான்.ஆழ்ந்த கரிய நிறம்.அவள் உடல் தசைகள் விண்ணென்று இழுத்துப்பிசையப்பட்ட கோதுமை மாவு போல இருந்தன என வர்ணிக்கப்படுகிற அங்கூரி தனக்கு தேநீரில் எதையோ ராம் தாரா கலந்து கலந்து கொடுத்ததாக முடியும் அந்தக் கதையின் ஆழமும், அது நகரும் விதமும் மனதிலேயே நின்று விடுகிறது


அடிமரம் (ஹிந்தி)

கிருஷ்ண ஸோப்தி


மெஹ்ரானோடு பயணித்து அவள் மகள்களின் திருமணத்தில் பங்கேற்று சந்தோஷமாக இருந்தாலும், அவள் மாமியார்(பாட்டியம்மா) மற்றும் மாமனாரின் முதுமை அவர்களின் எதிர்பார்ப்புகள் அப்படியே மனதை பிசைந்துவிட அவர்கள் தங்கியிருந்த அந்த 'சாமான்கள் அறையை விட்டு வெளியே வர மனம் வரவில்லை. பாட்டிம்மாவின் இறுதி கணங்களில் 

அவள் அருகிலேயே இருந்துவிட நேரிடுகிறது. அண்மையில் வாசித்த கதைகளில் மிகவும் நெகிழ வைத்த கதை இது. இந்தக் கதையில் இருந்து மீண்டு வர நேரம் பிடித்தது.


நீ அப்படியேதான் இருக்கப் போகிறாய்.

சுதா அரோடா (ஹிந்தி)


பெண்களின் அகபுற வாழ்க்கை, அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் என தரப்படுகிற அறிமுகத்தின்போது தெரியவில்லை ஒரு அருமையான ஆனால் வித்யாசமான கதையை வாசிக்க வாய்த்திருக்கிறது என்பதை. பெண்ணின் நாட்குறிப்பு என்ற  புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட இச்சிறுகதை முழுக்க ஆண் தனக்கு வாய்த்தவளின் மீது  வார்த்தைகளால்/ கேள்விகளால் கையாள்கிற அடக்குமுறைகள். (வன்முறை என்றும் வைத்துக்கொள்ளலாம்). 


மோதிரம் (ஒடிசா)

பிரதிபா ரே


இச்சிறுகதையில் தலையில் அடிபட்ட மகன், படுக்கை வசதியின்றி மருத்துவமனையில் தரையில் கிடத்தப்பட்டதை தனக்குத்தானே சமாதானம் சொல்லி ஏற்றுக்கொள்கிற கிழவி, மகன் உயிர்பிரிந்ததும் வாழ்நாள் முழுதுக்குமான தன் துக்கத்தை ஓலங்களின் வழியே வெளிபடுத்தியபோது, அதை வேடிக்கை பார்க்கிறவர்களோடு வாசிப்பவரையும் நெக்குருகச் செய்துவிடுகிறாள். கணவனும் மகனும் பொறுப்பைத் தவிர்த்துவிட்டு பெண்களைச் சுமக்கும்படி செய்துவிட்டு மாண்டுபோன தைரியமற்ற கோழிகள் ( கோழைகள்) என தன்னை ஆற்றுப்படுத்திக்கொள்கிற

அந்தக் கிழவி மனதில் தங்கிவிடுகிறாள்


மிக நேர்த்தியான மொழிபெயர்ப்புச்

சிறுகதைகள்  என்ற 

ஆத்ம திருப்தியோடு 

கடைசிப் பக்கத்திலிருந்து வெளியே வந்தேன்


இந்தத் தொகுப்பில் மொத்தம்

14 சிறுகதைகள், இதில் ஹிந்தி 6, உருது 3, பஞ்சாபி, வங்காளி, கன்னடம், குஜராத்தி, ஒடியா தலா ஒன்று

மாற்று மொழிக்கதைகளை மிக இயல்பான வார்த்தைகளால் மொழி பெயர்த்திருப்பது இந்தத் தொகுப்பின் கூடுதல் சிறப்பு.

வாழ்த்துகள்

அனுராதா கிருஷ்ணசாமி

***

' சுதந்திரத்திற்கு முந்தைய, பிந்தைய பெண் இலக்கியவாதிகளின் வாழ்க்கை மற்றும் படைப்புச் சுதந்திரம் ஆகியவற்றின் சாரமாக இந்தக் கதைகள் விளங்குகின்றன" என்னுரையில்  அனுராதா கிருஷ்ணசாமி

Madhusudhan

------------------------------------------------

கடவுளுக்கென ஒரு மூலை - அனுராதா கிருஷ்ணசாமி :


ஆசிரியர் குறிப்பு:


சென்னையில் பிறந்து, தில்லி, மும்பை போன்ற நகரங்களில் வசித்தவர்.  மத்தியஅரசின் நிறுவனம் ஒன்றில் உயர்பதவி வகித்தவர்.  தீவிர வாசகர். இது இவரது முதல் மொழிபெயர்ப்பு சிறுகதைகளின் தொகுப்பு.


இந்த நூல், பலவகையில் முக்கியத்துவம் வாய்ந்தது.  முதலாவதாகப் பணி ஓய்வுபெற்று, பல வருடங்கள் கழித்து அனுராதா, தன் முதல் மொழிபெயர்ப்புத் தொகுப்பின் மூலம் எழுத்து வாழ்க்கையை ஆரம்பிக்கிறார்.  இரண்டாவது, இவை அனைத்துமே இந்திய மொழிகளில் இருந்து மொழிபெயர்ப்பு செய்யப்பட்டவை.  கடைசியாக இதில் இடம்பெற்றுள்ள எழுத்தாளர்கள் அனைவரும் பெண்கள். பெண்கள் என்பதற்கான எந்தவித சலுகையையும் எதிர்பார்க்காமல்,  Commonraceல் கலந்து கொண்டு, பலரையும் முந்தி இலக்கைத் தொடக்கூடியவர்கள்.


அம்ரிதா ப்ரீதம், கிருஷ்ணா ஸோப்தி, இஸ்மத் சுக்தாய், ஆஷா பூர்ணாதேவி போன்ற மாஸ்டர்கள், தமிழில் பரவலான வாசகர்களால் இன்னும் அறியப்படாமலேயே இருக்கிறார்கள். இவர்களது முக்கிய படைப்புகள் தமிழுக்கு இந்நேரம் வந்திருக்க

வேண்டும்.  நம்மில் பலருக்கு வாயில் நுழையாத பெயருள்ள நாட்டிலிருந்து எழுதுபவர் நன்றாக எழுதுவார் என்ற கற்பிதம் இருக்கின்றது.


அம்ரிதாவின் அங்கூரி பல்லடுக்குகள் கொண்ட கதை.  முதலாவதாக கிராமத்தில் பெண்கள் எவ்வாறு Exploit செய்யப்படுகின்றனர், திருமண வாழ்க்கைக்கு அவர்கள் சம்மதம் தேவையில்லை, பெண்கள் படிப்பது பாவம் என்ற பிற்போக்கு நிலை குறித்துப் பெண்ணியம் பேசுகிறது.  இரண்டாவதாக பெரிதும் உரையாடல்கள் மூலம் நகரும் கதையில் வரும் இரண்டு பெண்கள், வேறுவேறு உலகத்தைச் சார்ந்தவர்கள், ஆனாலும் அவர்களுக்குள் பகிர ஒரு அந்தரங்கம் இருக்கின்றது.  அடுத்ததாக இரு ஆண்களின் உருவ அமைப்பு குறித்த ஓரிரு வரிகள் வாசகரைத் தயார்நிலைக்குக் கொண்டு வருகின்றன.  இலக்கியப் படைப்புகளில் சிறுகுறிப்புகள் முக்கியமானவை.  நான்காவதாக, ஆசைக்கும், பாவபுண்ணியத்திற்கும் நடக்கும் நித்திய போராட்டத்தில் ஆசையே வெற்றி கொள்வது. அங்கூரியை, அம்ரிதா மாவு என்றிருப்பார். சப்பாத்தி உருண்டைக்கு, இழுத்து அப்பளம் இட, எண்ணெய்யில் பொரித்தால் உப்பி வர என்று பல மாறுதல்கள் கொள்ளும் மாவு.  பார்வைக்கு எளிமையாகத் தோன்றும் இந்தக் கதையை எழுதுவது எளிதல்ல.  இந்தியாவின் சிறந்த சிறுகதைகளில் ஒன்று.


சாதாரண மாமியார்-மருமகள் Ego clash ஆக முடிந்திருக்க வேண்டிய கதை கிருஷ்ணா ஸோப்தியின் சரிகை வேலைப்பாடுகளால் நல்ல கதையாகி இருக்கிறது.  குர்ரத்துலைன் ஹைதரின் கதையில் மனம்போன வாழ்க்கை வாழும் பெண் அவளை நியாயப்படுத்திக் கொள்கிறாள். இஸ்மத் சுக்தாயின் போர்வை கதை பெரும் சர்ச்சைக்குள்ளாகி அவரை லாகூர் நீதிமன்றத்தில் ஆஜராக வைத்த கதை. (அது ஏன் தொகுப்பின் நடுவே முகம்மூடி போர்த்தி ஒளிந்து கொண்டிருக்கிறது?) ஆஷா பூர்ணா தேவியின் கதையில் சொன்னதையே திரும்பத்திரும்ப சொல்வது எதற்காக என்பது கதையின் கடைசி வரியின் டிவிஸ்டில் தெரிகிறது. மன்னு பண்டாரி ஐம்பது வருடங்களுக்கு முன்னரே அருமையான உளவியல் கதையை எழுதி இருக்கிறார். உஷா பிரியம்வதாவின் கதை நிதர்சனம். லாட்டி பயங்கரம். 


பதினான்கு கதைகள் கொண்ட தொகுப்பு.  எட்டு இந்திய மொழிகளில் எழுதப்பட்டு, இந்தி மூலமில்லாதவை, இந்திக்கு மாற்றம் செய்யப்பட்டு அதிலிருந்து தமிழுக்கு மொழிமாற்றம் செய்யப்பட்டிருக்கின்றன. எல்லாக் கதைகளும் ஒரே தரமானவை என்று சொல்ல முடியாது, ஆனால் எல்லாமே சராசரித் தரத்தை மிஞ்சியவை. இரண்டு மொழிகள் தெரிந்து மொழிபெயர்ப்பது வேறு, அந்தக் கலாச்சாரத்தின் நடுவே சிலகாலம் வாழ்ந்து பின் மொழிபெயர்ப்பது என்பது வேறு.  அந்த Advantage அனுராதாவின் மொழிபெயர்ப்புக்குக் கிடைத்திருக்கிறது.  மேலும் இந்தக் கதைகளின் தேர்வுக்காகவும் அனுராதாவிற்கு முதுகில் ஒரு ஷொட்டைத் தாராளமாகக் கொடுக்கலாம்.


பிரதிக்கு:


சிறுவாணி வாசகர் மையம் 99409 85920

முதல்பதிப்பு டிசம்பர் 2022

விலை ரூ. 220.

#மொழிபெயர்ப்புநூல்கள் 


http://saravananmanickavasagam.in/2023/01/05/%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b5%e0%af%81%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%86%e0%ae%a9-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%ae%e0%af%82%e0%ae%b2%e0%af%88-%e0%ae%85%e0%ae%a9%e0%af%81/

 Saravanan manickavasagam 

----------------------------------------------------------

Very meticulously reviewed 

Moment I received this book with the Thiru Nanjil Nadan preface I commenced reading

It had a big impact on me 

I told my wife and sisters to read

Each stories are Pearl 

What a great ladies 

Bravo to Anuradha Krishnaswamy

V N pillai IG

Chennai👆

-----------------------------------------------------

இது வரை நீங்கள் மிகவும் சிரத்தை எடுத்துத் தேர்வு செய்து அனுப்பும் புத்தகங்களுக்கு நான் விமர்சனம் அனுப்பியதில்லை. போன மாதம் தாங்கள் அனுப்பிய அனுராதா கிருஷ்ணசாமி அவர்களின் கடவுளுக்கென ஒரு மூலை புத்தகத்திற்கு நான் அனுப்பும் விமர்சனம்:

முத்தான கதைகளைத் தேர்ந்தெடுத்த அந்தக் கணமே அவரின் வேலை பாதி பூர்த்தியாகி விட்டது. இத்தனை புகழ் பெற்ற எழுத்தாளர்களின் கதைகளை எத்தனை அழகாக மொழி பெயர்த்துள்ளார். மொழி பெயர்ப்பு என்றே தெரியவில்லை. பெண் எழுத்தாளர்கள் அவர்களுக்குள்ள கட்டுப்பாடுகளையும் மீறி இவ்வளவு நேர்த்தியாக உணர்வுகளை வெளிப்படுத்த முடிகிறதென்றால் அது இறைவன் கொடுத்த வரம் அல்லாது வேறென்ன?


பத்மா சச்தேவின் தாதி மனதை விட்டு நீங்க மாட்டேனென்கிறது. அருமையான பாத்திரங்கள். கதை சொல்லும் பாங்கு, உயிரோட்டமான நடை அனைத்தும் உன்னத நிலைக்கு எடுத்துச் செல்கின்றன. 

புத்தகங்கள் உலகத்தின் சாளரங்கள்தாமே.

திருமதி அனுராதாவின் கைபேசி எண் குறிப்பிடப் படவில்லை. முடிந்தால் இந்த விமர்சனத்தை அவருக்கு அனுப்புங்கள்.

திருமதி.சாந்தி, திருவனந்தபுரம்

----------------------------------------------------------




No comments:

கனவு மழை -வ.ஸ்ரீநிவாசன் சிறுகதைகள்

கனவு மழை வ.ஸ்ரீநிவாசன் சிறுகதைகள்  பக்கங்கள்;166          விலை;ரூ 180/- நாஞ்சில்நாடன் அனைத்துக் கதைகளிலுமே நேர்த்தியான முதிர்ச்சி தெரிகிறது....