Sunday, July 7, 2024

ஆதவன் சிறுகதைகள் - மானுட உளவியலின் கலையாக்கம் - சுரேஷ் வெங்கடாத்ரி ஜூலை-2024

கோவை புத்தகத் திருவிழா வெளியீடு

நாள் 20.07.2024 மாலை 3.00 மணி....



 சிறுவாணி வாசகர் மையத்தின் ஜூலை மாதப் புத்தகம்.


ஆதவன் சிறுகதைகள் - மானுட உளவியலின் கலையாக்கம்

சுரேஷ் வெங்கடாத்ரி


வாழ்க்கையின் ஓட்டத்திலிருந்து சற்று விலகி அமர்ந்து வாழ்க்கையைப் பார்க்கும் கலையே ஆதவனின் புனைவுலகம். அதில் கசப்பும் கழிவிரக்கமும் வேடங்களைக் கலைக்க வேண்டும் என்ற பரிதவிப்பும் இருந்தாலும், அடிப்படையில் ஆதவன் வாழ்க்கையை, அதன் ‘ஆரோகண அவரோகணங்களை’  ரசித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ரசனையால், அதன் அழகுணர்வால், அவர் தன் எழுத்தைக் கொண்டு வாழ்க்கைக்கு ஏற்படுத்தித் தரும் ஒழுங்கு அவரது கதைகளுக்கும் அழகு சேர்க்கிறது. 

                                                                                                                                  “என்னுடைய ‘நானை’ இனம் கண்டு கொள்வதற்காக நான் எழுதுவதுண்டு, என்னுடைய 

‘நானி’லிருந்து விலகி இளைப்பாறவும் எழுதுவதுண்டு. இந்த இளைப்பாறல் உண்மையிலிருந்து ஒளிதல் அல்ல, வாழ்வின் பரந்துபட்ட தன்மையில், அதன் விசித்திரங்களில், மீண்டும் மீண்டும் திளைக்கும் ஆர்வமேயாகும்.”

ஆதவன் விட்டுச் சென்ற வெற்றிடம் இன்னும் நிறைக்கப்படவில்லை.


ரூ 250/-(+ 40 தபால் செலவு )

Gpay 8778924880

Whatsapp 9940985920

No comments:

சிறுவாணி வாசகர் மையம் பற்றி... 2017-2025 ஒன்பதாம் ஆண்டில்....

 சிறுவாணி வாசகர் மையம் பற்றி..... கோவையில் சிறுவாணி வாசகர் மையம் 2017 உலகப் புத்தக தினம் அன்று துவக்கப்பட்டது. வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக...