Tuesday, December 31, 2024

எட்டு ஆண்டுகளை நிறைவுசெய்து ஒன்பதாம் ஆண்டில்.........

 


அனைவருக்கும் வணக்கம்.

2017 இதே நாளில் அறிவித்துத்  துவக்கப்பட்ட சிறுவாணி வாசகர் மையம் எட்டு ஆண்டுகளை நிறைவுசெய்து ஒன்பதாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.

வாசிப்பை நேசிப்பவர்களை ஒருங்கிணைத்து "மாதம் ஒரு நூல்"எனச் சிறந்த நூல்களைத் தேர்வுசெய்து உறுப்பினர்கள் வீட்டிற்கே அனுப்பி வருகிறோம்.

இப்பணியில் எங்களை வழிநடத்திச் செல்லும் ஆலோசகர்கள், எழுத்தாளர்கள்,
உறுப்பினர்கள், அச்சகத்தார், பத்திரிகை நண்பர்கள், முகநூல் நண்பர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி.

தொடர்ந்து தங்கள் அன்பையும் ஆதரவையும் வேண்டுகிறோம்.


🙏🙏🙏
தி.சுபாஷிணி
ஜி.ஆர்.பிரகாஷ்
சிறுவாணி வாசகர் மையம்.

9940985920
8778924880

----------------------------------------------------

அறிவிப்பு

அனைவருக்கும் வணக்கம்.

2017 உலகப் புத்தக தினத்தில் தொடங்கப்பட்டு "மாதம் ஒரு நூல்" திட்டத்தில் உறுப்பினர்களுக்கு வீடுதேடிப் புத்தகங்களை அனுப்பிவருகிறோம். வணிகநோக்கமில்லாத எங்களின் முயற்சிக்குத் தொடர்ந்து ஆதரவளிக்கும் தங்களுக்கு மனமார்ந்த நன்றி.

எட்டாவது ஆண்டு நிறைவில் இருக்கிறோம். இன்னும் மூன்று புத்தகங்கள் தயாரிப்பில் உள்ளன. இவற்றோடு எட்டாவது ஆண்டு நிறைவு பெறுகிறது.

ஏப்ரல் 2025-மார்ச் 2026 (ஒன்பதாம்) ஆண்டுக்கான சந்தாவை வரும் ஜனவரி-1 முதல் பெறத் துவங்கவுள்ளோம்.

தற்போது காகித விலையேற்றத்தால், புத்தகங்களின் தயாரிப்புச் செலவு மிகவும் உயர்ந்துவிட்டது. அதோடு தபால், கூரியருக்கான தொகையையும் உயர்த்திவிட்டார்கள்.

மிகுந்த சிரமத்திற்கிடையேதான் சிறுவாணிப் புத்தகங்களைத் தயாரித்தும் அனுப்பியும் வருகிறோம். இதனாலெல்லாம் இந்த ஆண்டிற்கான சந்தாவைச் சற்றே  உயர்த்தவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

ஏப்ரல் 2025-மார்ச் 2026

தமிழகத்திற்குள் 
ரூ 2000/-

பிற மாநிலங்களுக்கு
ரூ 2400 -

"வாசிப்பை மேம்படுத்த  வீடுதேடிவரும் புத்தகங்கள்" எனும்
சிறுவாணி வாசகர் மையத்தின் முயற்சிக்குத் தொடர்ந்து ஆதரவு தருவீர்கள் என்று நம்புகிறோம்.

நன்றி


சுபாஷிணி திருமலை,
ஜி.ஆர்.பிரகாஷ்
சிறுவாணி வாசகர் மையம்,
கோவை.


2024-2025 சென்னை புத்தகத் திருவிழா- 20% சிறப்புத் தள்ளுபடி.



 https://www.facebook.com/share/p/dAMKXatMdqUx39Rj/


2024-2025 சென்னை புத்தகத் திருவிழாவை முன்னிட்டு

சிறுவாணி வாசகர் மையம், பவித்ரா பதிப்பக நூல்களுக்கு 

 டிசம்பர் 27 முதல் ஜனவரி 12 முடிய

 20% சிறப்புத் தள்ளுபடி.


வாட்ஸ்அப்பில்  தேவையான புத்தகங்களைக் குறிப்பிட்டு அனுப்பவும்.


                                                    9940985920 (Whatsapp)

                                   8778924880 (Gpay)


                                                        (அனுப்பும் செலவு தனி)



 

























Monday, December 23, 2024

கடலோடி - நரசய்யா


 

கடலோடி

நரசய்யா

விலை ரூ 180/-




சிறுவாணி வாசகர் மையத்தின் டிசம்பர் மாதப் புத்தகம் "கடலோடி"- திரு. நரசய்யா அவர்களிடம் வழங்கப்பட்டபோது.....

நன்றி திருமதி.Subashini Tirumalai அவர்கள்.







திரு நரசைய்யா அவர்களின் "கடலோடி" புத்தகத்தை ஒரே மூச்சில் படித்து முடித்தேன்.

நேர்த்தியான இந்த புத்தகத்தை ஒவ்வொரு நிமிடமும் அனுபவித்து படித்தேன்.

இந்த மாதிரியான ஒரு வித்தியாசமான கதைக் களத்தில் ஒரு புத்தகத்தை படிக்க நேர்ந்ததே  ஒரு வரம் என்று கூறினால் அதுவே உண்மை தான்!

நன்றி!


என்றும் அன்புடன் 

பொ பரமசிவன்

Retd DSP

----------------------

ஜா.தீபா முகநூல் பதிவு


நீண்ட நாட்களாகத் தேடிக்கொண்டிருந்த புத்தகம் ‘கடலோடி’. அச்சில் இல்லை என்றார்கள். கடந்த வாரம் விஷ்ணுபுரம் நிகழ்வுக்கு சென்றிருந்தபோது என்னுடைய அண்ணன் ஜா.ராஜகோபாலன் கையில் இந்தப் புத்தகத்தைப் பார்த்ததும் “பார்த்துட்டு தர்றேன்’ என்று வாங்கினேன். தரும்போதே தயக்கத்துடன் தான் தந்தார். “பார்த்துட்டு தந்துரனும்..” சரி என்று சொன்னேன். புத்தகம் இப்போது வரை என்னிடம் தான் இருக்கிறது. 

இந்தப் புத்தகத்தை சிறுவாணி வாசகர் மையம் வெளியிட்டிருக்கிறார்கள். அரிய புத்தகங்களை அச்சுக்குக் கொண்டு வருவதை பணியாகக் கொண்டிருக்கிறார்கள். 

‘கடலோடி’ எழுதிய நரசய்யாவின் ‘மதராசப்பட்டணம்’ என்கிற புத்தகத்தை சில வருடங்களுக்கு முன்பு படித்தேன். இவருடைய மற்றொரு புத்தகம் ‘ஆலவாய்’. யார் பதிப்பித்திருக்கிறார்கள் என்று தெரிந்தவர்கள் சொல்லவும். அதைப் படிக்க வேண்டும் என்கிற ஆர்வம் இருக்கிறது.

நரசய்யா 1950களில் கப்பற்படையில் பொறியாளராக சேர்கிறார். அதற்கான நேர்காணல் நடக்கிறபோது “கப்பலைப் பற்றி என்ன தெரியும்?” என்று அவரிடம் ஆங்கில அதிகாரிகள் கேட்கிறார்கள். “கப்பலைப் படத்தில் பார்த்திருக்கிறேன்” என்கிறார். திரையில் பார்த்தது தான் இவருக்கும் கப்பலுக்குமான முதல் அறிமுகம். போர்க்கப்பல் என்பதால் அதற்கான பயிற்சி கூடத்தில் சேர்வதில் இருந்து நமக்கான வாசிப்புத் தொடங்குகிறது. அந்தப் பயிற்சிக் கூடத்தில் கடைபிடிக்கப்படுகிற ஒழுக்கம், ஊரைத் தேடுவது, எனத் தொடங்குகிறார். முதன்முதலாக பெரிய கப்பலைப் பார்க்கும்போது கொண்ட பிரமிப்பு, கடல் கொந்தளிப்பில் ஏற்படுகிற மன, உடல் கொந்தளிப்புகள் என  ஒவ்வொன்றையும் சொல்லிக் கொண்டே போகிறார்.

என்னை மிகவும் ஈர்த்தது பயிற்சிக்காக வைக்கப்படுகிற சோதனைகளை அவர் விவரித்தப் பகுதி. இரண்டு கப்பல்கள் இடையே கயிறுகளைக் கட்டி, ஒரு கப்பலில் இருந்து மற்றொன்ருக்கு பொருட்களை எடுத்து வருவது. கீழே ஆர்ப்பரிக்கும் கடலைப் பார்க்கவே கூடாது என்பது தான் அந்தப் பயிற்சியில் முதலில் கற்றுத் தருவது. தேவைப்படும் நேரத்தில் அடுத்தக் கப்பலில் இருந்து எண்ணெயைக் கூட இப்படி கயிறில் தொங்கியபடி எடுத்து வருவார்களாம். இரவில் கப்பல்களில் இருந்து கயிற்று ஏணியை வெளியே தொங்கவிட, மற்றொரு கப்பலில் இருப்பவர்கள் அதைத் திருடிக் கொண்டு வரவேண்டும். இதில் எந்தக் கப்பலில் உள்ளவர்கள் வெற்றிபெறுகிறார்கள் என்பது பந்தயம். இவையெல்லாம் நடுக்கடலில் நடப்பவை. மாலுமிகள் விழிப்பாக இருக்கிறார்களா என்பதற்கான பயிற்சி இது. இப்படி ஒவ்வொன்ருமே ஆச்சரியம் தரக்கூடியவை.

இந்திய சுதந்திரத்துக்குப் பிறகு இவர் இந்தத்துறையில் சேர்ந்ததால், நமது நாடு எப்படி இதில் அடுத்தடுத்த இடத்துக்குத் தன்னை மேம்படுத்திக் கொண்டது என்பதையுமே எழுதுகிறார். இந்தியாவில் கோவாவில்  பயணம் தொடங்கி வெளிநாடுகள் பலவற்றுக்கும் சென்றிருக்கிறார். நாற்பது நாட்கள் கடலிலேயே இருந்துவிட்டுத் தரையில் இறங்கும்போது கொண்டிருக்கிற மனநிலை, தரையிறங்கியதும் வீட்டில் இருந்து அனுப்பபட்ட கடிதங்களை மொத்தமாகப் பெற்று  வாசிப்பது, ஒவ்வொரு நாட்டில் பழக்கவழக்கங்கள் என அருமையான டைரிக்குறிப்புகள்.

கடலையும், கடலோடிகளின் வாழ்க்கையைப் பற்றி சொல்லி சில வார்த்தைகளை சொல்கிறார். அந்த வகையில் அருமையான சுயமுன்னேற்ற புத்தகமாகவும் கருதலாம். 

போர்க்கப்பல்கலிலும், வணிகப்கப்பல்களிலும், அளவில் எப்போதும் பெரியதாக இருக்கும் எண்ணெய் ஏற்றிச் செல்லும் டாங்கர் கப்பல்களிலும் பணிபுரியும் வித்தியாசங்களை சொல்கிறார். டாங்கர் கப்பல்களில் வேலை செய்பவர்கள் மருந்துக்குக் கூட வேறு நாடுகளைப் பார்க்க முடியாது. கடலில் மட்டுமே பயணம் செய்த கொண்டே இருக்க வேண்டும். தரையில் இருந்து வெகு தூரத்துக்கு இந்தக் கப்பல்கள் நிறுத்தப்பட்டு எண்ணெயை கைமாற்றிவிட்டு மீண்டும் கடலுக்கே சென்றுவிடும். 

ஷிப்ட் சமயத்தில் புத்தகம் வாசிக்க நேரமும் இருக்காது, படிக்கவும் கூடாது என்பதால், படித்தவற்றை மனதுக்குள் ஓட்டிப் பார்க்கும் தருணம் என்கிறார். உடனிருக்கும் மற்ற நாட்டினரிடம் அவர்களது இலக்கியத்தைப் பற்றிப் பகிர்ந்து கொள்கிற நேரமாக இதனை சொல்கிறார். 

நரசய்யாவின் அப்பாவைப் பற்றி சொல்ல வேண்டும். அவர் தான யாவரை வெவ்வேறு அனுபவங்களைப் பெறுபவன் தான மனிதன் என்று இந்தப் பணிக்கு அனுப்பி வைக்கிறார். அவர் எழுதிய ஒரு கடிதம் பற்றி நரசைய்யா புத்தகத்தில்  குறிப்பிட்டிருக்கிறார். அத்தனை ஊக்கமானது அது. 

கப்பல்களைப் பற்றி எழுதும்போது புரியாமல் போய்விடுமோ என்பதாலயே யாரும் எழுதுவதில்லை என்று சொல்லும் நரசய்யா, எதுவொன்றையும் விளக்க எளிய மொழியையே கைகொள்கிறார். அதனாலேயே படிக்க சுலபமாகவும் சுவாரஸ்யமாகவும் இருக்கிறது.

கடல் ஒரு மனிதனுக்குள் என்னவாகப் பதிவாகியிருக்கிறது என்பதாகவே இதனை புரிந்து கொண்டேன். ஒரு புத்தகத்தைத் திருடுவது தவறில்லை என்று உணர்த்திய புத்தகங்களுள் ஒன்று இது. 




சிறுவாணி வாசகர் மையம் பற்றி.....


கோவையில் சிறுவாணி வாசகர் மையம் 2017 உலகப் புத்தக தினம் அன்று துவக்கப்பட்டது. வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கவும் ,சிறந்த எழுத்தாளர்களின் எழுத்துக்களை இன்றைய தலைமுறைக்குக் கொண்டு செல்லும் பணியையும் இந்த மையம் செய்து வருகிறது . 


இந்த அமைப்பின் மூலம் "மாதம் ஒரு நூல்" எனச் சிறந்த படைப்புகள் உறுப்பினர்களுக்கு  அனுப்பி வைக்கப்படுகிறது. இதன் தலைவராக

தி சுபாஷிணி, ஒருங்கிணைப்பாளராக ஜி. ஆர். பிரகாஷ் ஆகியோர் உள்ளனர்.

கௌரவ ஆலோசகர்களாக திரு.நாஞ்சில் நாடன், திரு.வ.ஸ்ரீநிவாசன், திரு.ஆர்.ரவீந்திரன் (RAAC)ஆகியோர் வழிநடத்துகின்றனர்.


 கடந்த எட்டு ஆண்டுகளில் தமிழகம் மற்றும் மற்ற மாநிலங்களிலிருந்தும் 500+  உறுப்பினர்கள் உள்ளனர். 


தொடர்புக்கு -

9940985920

8778924880


siruvanivasagar@gmail.com

siruvaniprakash@gmail.com

https://siruvanivasagarmaiyam.blogspot.com/?m=1

பெரும்புள்ளிகள் - குகன்











 பெரும்புள்ளிகள்

குகன் (தி.அ.சொக்கலிங்கம்)


கட்டுரைகள்

விலை ரூ 250/-


---------------------

நேற்றும் இன்றும் பேராசிரியர் திரு குகன் எழுதிய "பெரும் புள்ளிகள்" நூலை வாசித்து முடித்தேன்.

எவ்வளவு ஆத்மார்த்தமான ஆக்கம் தரும் வகையில் உருவாக்கப்பட்ட இந்த நூலை நமது வாசகர்  மையம் சார்பில் கொண்டு வந்தமைக்கு பாராட்ட கடமைப் பட்டு உள்ளது; இந்த பதிப்பு உலகம்.

புத்தக ஆசிரியர் எந்தவொரு இடத்திலும் நேரத்திலும் நேர்மையாக இருக்க சத்தியம் செய்து விட்டுத் தான்; மொத்த நூலுக்கு தேவையான பொருத்தமான நபர்களின் வாழ்க்கை சம்பவங்களை மிக அருமையாக கொண்டு வந்து உள்ளார்.


அதுவும் நான் சுமார் 13 வருடங்கள் பணி செய்த திருநெல்வேலி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு பெரும் நாயகர்களை நினைத்து பெருமைப் படுகிறேன்!

எனக்கு என்ன வருத்தம் என்றால்; இந்த மாதிரியான புத்தகம் முன்பே கிடைத்து இருந்தால் அத்தனை இடங்களைச் சென்று மகிழ்ந்து இருப்பேன்.

குறிப்பாக திருநெல்வேலி டவுன் மற்றும் பாளையங்கோட்டை ஆகியவற்றை இணைக்கும் பாலம், தமிழகத்தில் உள்ள ஒரே ஈரடுக்கு பாலம் என்ற பெருமைக்கு உரிய 

சுலோச்சனா சம்பத் முதலியார் பாலம், ஊசிக் கோபுரம் என்று தினமும் சென்று திரும்பிய இடங்களில் எவ்வளவு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தது என்று நினைக்கும் போதும் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.

உங்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள்!


பொ பரமசிவன் Retd DSP

கோவை

--------------------------

தின்னவேலி. சுலோச்சனா முதலியார் பாலம்

...........

மொழிப் பாலத்தில் சம்பாதித்த சொத்து .

ஆற்றுப்பாலத்தில் செலவழித்தது. 


ஆங்கிலேய அரசாட்சி. திருநெல்வேலி மாவட்டம்.

 அங்கே அப்போது சிரஸ்தாராக இருந்த அமரர் சுலோச்சனா முதலியார். 


திருநெல்வேலி பாளையங்கோட்டையைப் பிரிக்கும்

தாமிரபரணியின் வெள்ளப்பெருக்கை கட்டுப்படுத்த பாலம் அமைக்க காரணமாய் இருந்திருக்கிறார். 


 ஊர் கூடி தேர் இழுக்கலாம் என்று சொன்ன ஆங்கிலேய அதிகாரிகளிடம் மௌனம் காத்து தன் பூர்வீக சொத்தை எல்லாம் பாலத்தில் செலவழித்த மாமனிதர் இவர். 


மேலும் பெருமை சேர்ப்பது அவருடைய மனைவி வடிவாம்பாள் தன் கணவருக்கு சற்றும் குறைவில்லாமல் ஒரு வெள்ளி தாம்பாளத்தில் தன்னுடைய நகைகளையும் கொஞ்சம் பணத்தையும் வைத்து இதை கொண்டு போய் பாலம் கட்ட நமது அச்சாரக் காணிக்கை என்று சொல்லி கொடுத்துவிட்டு வாருங்கள் என்றாராம். 


பல திருப்பணிகளுக்குக் கிடைத்த தனி மனிதர் நன்கொடை திருநெல்வேலி மாவட்டத்தையே திகைக்க செய்கின்றது. 


 மள மளவென  பால வேலைகள் தொடர்கின்றன.  அழகு மிகுந்த கிருஷ்ணாபுரம் கோவிலின் வெளிப்பிரகாரத்தின் கற்களை கொண்டு தான் பாளையங்கோட்டையின் கோட்டை சுவர்கள் கட்டப்பட்டன என்பது வரலாறு என்றும் பதிவு செய்கிறார் பேராசிரியர் டி அ சொக்கலிங்கம்.  புனை பெயர் குகன்.


சிமெண்ட் இல்லாத அந்த காலத்தில் சுண்ணாம்புடன் பதனி கருப்பட்டி இவைகளை சாந்து ஆக்கி செங்கலைக் கொண்டு பாலம் உருவானதாம்.   மற்றும் சிறையில் இருந்த ஆயுட் கைதிகள் 100 பேரை அப்போதைய ஆங்கில அரசாங்கம் தந்து உதவுகின்றது என்ற அரிய தகவல்களை அவருடைய இந்த கட்டுரையில் காணலாம்.  


ஆனை திறந்த பாலம் .‌‌ஆம்.. சுலோச்சனா முதலியார் பாலம் கட்டி முடிக்கப்பட்ட பின் முதலில் பாலத்தில் கால் வைத்தது யானை என்றும் எழுதுகிறார்.


அது மட்டுமா சுலோச்சனா முதலியார் திருநெல்வேலி மாவட்டத்தில் ஐந்து பாலங்களை உருவாக்கிய பெருமை உடையவர்.  பாலத்தின் திறப்பு விழா 1848 நவம்பரில் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. அலங்கரிக்கப்பட்ட யானை ஒன்று முதல் பயணி என்ற பெருமிதத்தோடு பாலத்தில் செல்ல அதற்கு பின்னால் மற்றவர்கள். 


இவருடைய பெயரும் வள்ளல் தன்மையும் மக்கள் நினைவில் என்றும் நிற்கும்படி பாலம் தொடங்கும் இடத்தில் சதுர வடிவமான கருங்கல் தூண் எழுப்பப்பட்டு அதில் அவரது பெயரும் பெருமைகளும் எழுதப்பட்டனவாம்.  பின்னாளில் 1966 இல் பாலம் விரிவுபடுத்தப்பட்டபோது அந்த கல் தூண் மாயமாக மறைந்து விட்டது. அந்தத் தூணின்  கற்களும் எழுதி இருந்த புகழ் மொழிகளும் எங்கே இருக்கின்றன என்று தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லை.‌ வேதனை தான். 

ஆதங்கம் தான்.


இந்தத் தகவலை ஆனந்த விகடன் பத்திரிகை மூலம் கட்டுரைகளாக எழுதி புகழ்பெற்ற  அமரர் குகனுடைய  படைப்புகள் "பெரும்புள்ளிகள்" என்னும் திருநெல்வேலி நிலம் சார்ந்த மக்களைப் பற்றியது.   


இந்த அரிய புத்தகம் 1994 இல் முதல் பதிப்பு கண்டு தற்போது 2024 இல் சிறுவாணி வாசகர் மையம் மூலம் நம் கைகளில் பரிமளிக்கிறது. 


அரிய பெரும் விருந்து அளித்த சிறுவாணி வாசகர் மையம் ஆலோசகர் குழுவில் இருக்கும் அனைவருக்கும் எம் மனமார்ந்த நன்றிகள்.  இப்படிப்பட்ட அரிய கலைக்களஞ்சியங்கள் சிறுவாணியில் அநேகம் அநேகம். 


சிறுவாணி வாசகர் மையம் வாழ்க வாழ்க!!!


ஹேமமாலினி கோபாலன்

--------------------------

சிறுவாணியின் மைல் கற்களில் ஒன்று இன்னூல்.

---------------------------

வாசித்துக் கொண்டிருப்பதிலிருந்து.....

"எட்டையபுர சமஸ்தான மக்களுக்கு உள்ள ராஜ விசுவாசம் இருக்கின்றதே..அப்பப்பா! ஒரு உதாரணம் ..பள்ளிக்கூடத்தில் படிக்கும் பிள்ளைகள் 'ஒண்ணு' ' இரண்டு' என்று எண்ணும்போது' ஏழுவரை எண்ணி 'எட்டு' என்பதற்கு ' ' 'மகாராஜா ' என்று சொல்லிப் பின்' ஒன்பது' ' பத்து' என்று எண்ணுவார்கள். 88 என்பதற்கு 'எண்பது மகாராஜா' 98 என்பதற்கு 'தொண்ணூறு மகாராஜா - நெல் அளப்பவர்கள் கூட ஏழு மரக்கால் அளந்துவிட்டு எட்டாவது மரக்காலை ' மகாராஜா' என்று எண்ணிப் பின் ஒன்பது, பத்து என்று தொடர்வார்கள்- பள்ளிக்கூடத்துப் பிள்ளைகள் முதல் பெரியவர்கள் வரை ' எட்டு'  என்ற வார்த்தை தங்கள் வாயில் வராமல் பார்த்துக்கொள்வார்கள்- எட்டப்பன் என்பதில் ' எட்டு' இருப்பதால், மகாராஜாவின் பெயரைச் சொல்லக்கூடாது என்பதால்" 

மேற்கண்ட தகவல் சிறுவாணி வாசகர் மையம் வெளியிட்ட பெரும்புள்ளிகள் என்ற தொகுப்பில் ஏழுக்குப் பிறகு மகாராஜா என்ற பாகத்திலிருந்து.

'உலகை மாற்றி அமைத்த உத்தமர்களைப் பற்றியோ அறிவியல் அறிஞர்கள் பற்றியோ அறிவியல் அறிஞர்களைப் பற்றியோ அரசியல் வித்தகர்கள் பற்றியோ இந்தப் புத்தகத்தில் நான் சொல்லவில்லை. அவர்களைப் பற்றி எழுதுவதற்குப் பலர் இருக்கிறார்கள் என்ற காரணத்தால், ஆனால் விளம்பரமே இல்லாமல் வித்யாசமாகவும் அமைதியாகவும் வாழ்ந்த நூற்றுக்கணக்கானோர் தமிழ்நாட்டில் இருந்தனர். இவர்கள் ஒரு சிலரையாவது இந்த நாடு தெரிந்து கொள்ளவேண்டும் என்பதே என் ஆசை.அதன் விளைவே 'பெரும் புள்ளிகள்'

இந்தப் பின்னட்டைக் குறிப்பைப் பார்த்ததும் பிறகு படிக்கலாம் என்று முடிவு செய்திருந்தேன். ஆனால் அதிலிருந்த  வரிகள் உறுத்திக்கொண்டே இருக்கவே வாசிக்க ஆரம்பித்தேன்.

தொகுப்பில் இடம் பெற்றிருக்கும் அனைத்தும் சுவராஸ்யமான விஷயங்களே. மிகவும் சுவராஸ்யமாக எனக்குப்பட்டது சில.

தூக்குத் துரை( சிங்கம்பட்டி ஜமீனின் 24வது தலைமுறை எப்படி தூக்கு துரை ஆனார் என்பது)

14ம் நூற்றாண்டில் பெரிய சமுதாயத்தையேப் பகைத்துக்கொண்டு வாழ்ந்த சித்தரான உமாபதி தீட்சிதர்

வக்கீல் ஐயா திருநெல்வேலி என்று முகவரி எழுதினாலோ போதும்'வக்கீல் ஐயாவிற்கு'சரியாக தபால் போய்விடும் - இது எஸ்.ராமசாமிக் கோனாரைப்பற்றியது.

இது போல 42 பெரும்புள்ளிகளைக் குறித்து வெளிவந்திருக்கும் இந்தத் தொகுப்பு 2024  ஆண்டிற்கான எனது வாசிப்பை நிறைவோடும் மகிழ்வோடும் தொடர உதவுகிறது

இந்த  நல்லத் தொகுப்பை தந்திருக்கும் சிறுவாணி வாசகர் மையத்திற்கு வாழ்த்துகளும், நண்பர் பிரகாஷிற்கு பாராட்டுகளும்


Madhusudhan sugumaran



சிறுவாணி வாசகர் மையம் பற்றி.....


கோவையில் சிறுவாணி வாசகர் மையம் 2017 உலகப் புத்தக தினம் அன்று துவக்கப்பட்டது. வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கவும் ,சிறந்த எழுத்தாளர்களின் எழுத்துக்களை இன்றைய தலைமுறைக்குக் கொண்டு செல்லும் பணியையும் இந்த மையம் செய்து வருகிறது . 


இந்த அமைப்பின் மூலம் "மாதம் ஒரு நூல்" எனச் சிறந்த படைப்புகள் உறுப்பினர்களுக்கு  அனுப்பி வைக்கப்படுகிறது. இதன் தலைவராக தி சுபாஷிணி, ஒருங்கிணைப்பாளராக ஜி. ஆர். பிரகாஷ் ஆகியோர் உள்ளனர்.

கௌரவ ஆலோசகர்களாக

திரு.நாஞ்சில் நாடன், திரு.வ.ஸ்ரீநிவாசன், திரு.ஆர்.ரவீந்திரன் (RAAC)ஆகியோர் வழிநடத்துகின்றனர்.


 கடந்த எட்டு ஆண்டுகளில் தமிழகம் மற்றும் மற்ற மாநிலங்களிலிருந்தும் 500+  உறுப்பினர்கள் உள்ளனர். 


தொடர்புக்கு -

9940985920

8778924880


siruvanivasagar@gmail.com

siruvaniprakash@gmail.com

https://siruvanivasagarmaiyam.blogspot.com/?m=1

யாவுமே அவள் - மதுசூதன்




யாவுமே அவள்

மதுசூதன்

சிறுகதைகள்


விலை ரூ 150/-

 ----------------

இரு நாட்களுக்கு முன் திரு பரத்வாஜ்  என்ற வாசகர் அம்பாசமுத்திரத்திலிருந்து என்னிடம் கைபேசியில் யாவுமே அவள் தொகுப்பைக் குறித்துப் பேசினார். குறிப்பாக மயானத்தின் ஒற்றை மரம் குறித்து ஸ்லாகித்துப்பேசினார். அந்தக் கதை அவரை நிரம்பவே பாதித்திருக்கும் போலிருக்கிறது. கதைகளில் எழுத்து நடை  மிகவும் நன்றாக இருப்பதாகவும் பாராட்டினார்

நேற்று திரு விஸ்வநாதன் கோவையிலிருந்து அழைத்துப் பேசினார். மயானத்தின் ஒற்றை மரம் மிகவும் நன்றாக இருந்ததாகவும் அனிதாவின் அப்பா, உயிர் மீன் போன்ற கதைகள் பிடித்திருந்ததாகவும் பாராட்டினார். முதல் வாசிப்பு முடிந்தாலும் மறுவாசிப்பை செய்யப்போவதாகவும் கூறினார்.

இப்படி முகம் கண்டிராத வாசகர்கள் மனம் திறந்து பாராட்டுவதுதானே எழுதுபவர்க்கு கீரிடங்கள்.

----------------------------

நண்பர் Sivakumar Ganesan அவர்களுக்கு அன்பான நன்றிகள்


தனியார் நிறுவனம் ஒன்றில் மேலாளர் பதவியில் பெங்களூரில் வசிக்கும் மதுசூதன் பிறந்து வளர்ந்தது சேலத்தில்.பொய்மசியின் மிச்சம், காகிதத்தில் மூன்றாம் பக்கம், நான் என்பதும் தோற்றப் பிழை, குறுக்கு வெட்டாய் ஓர் இறகு என்கிற நான்கு கவிதைத் தொகுப்புகளும், ஏக வெளி என்ற சிறுகதை தொகுப்பும் வெளியிட்டிருக்கிற மதுசூதனின் இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு இது. 

இப்போது 50 களில் இருப்பவர்களுக்குள்ளும், 50 களை கடந்தவர்களுக்குள்ளும் பால்ய நினைவுகளின் நதி சதா அலையடித்துக் கொண்டேயிருக்கும். எத்தனை கவிதைகளிலும், கதைகளிலும், கட்டுரைகளிலும் சொல்லித் தீராத அழகு அது.இந்தத் தலைமுறை அறியாத எத்தனையோ அற்புதங்களை வாழ்ந்து அனுபவித்தவர்கள் அல்லவா நாம்.

இந்தத் தொகுப்பு முழுவதுமே, கிட்டத்தட்ட பால்யத்தின் நினைவுகளில் சலிப்பின்றி நீந்திக் கொண்டிருக்கிற ஒருவரைத் தெளிவாகப் பார்க்க முடிகிறது.இந்தக் கதைகளின் வழி, தன் அனுபவங்களை அழகாக வாசிப்பவருக்குக் கடத்தியிருக்கிறார்.

நம்மைப் போல் சமுதாயத்தில் நடிக்கத் தெரியாமல் அல்லது நடிக்க விரும்பாமல், இயல்பாக இருப்பவர்களை நாம் சுலபமாக மனநிலை பிறழ்ந்தவர்கள் என்று முத்திரை குத்தி விடுகிறோம். ஆனால் அவர்களை நெருங்கிப் பார்த்தால்தான் ஆச்சரியமான அவர்களின் குணங்களை அறிந்து கொள்ள முடிகிறது ஆண்டவனேஏஏ…ஓ  கதையில் வருகிறவரைப் போல.

காதலித்துப் பிரிந்து வேறு ஒருவரை மணந்த உங்கள் காதலியை வாழ்வில் என்றாவது சந்தித்திருக்கிறீர்களா?ஆம் என்றால் உங்களுக்கு அழியாத கோடுகள் கதை நிச்சயம் பிடிக்கும்.

குடும்பத்தைப் பார்க்க வேண்டிய கடமையிலிருந்து நழுவி, ஊருக்கு உழைத்து மரணித்த ஒருவரின் இறுதிக் காலத்தைப் பேசுகிறது மயானத்தின் ஒற்றை மரம். வாசிக்கிற யாரும் தங்களைப் பற்றி சில நிமிடங்களாவது ஒரு சுய பரிசோதனையை நிச்சயம் செய்து கொள்வார்கள்.

பெற்றோரை எதிர்த்து திருமணம் செய்து கொண்ட மகள் மீதான கோபம் தீராத தந்தை,வாழ்வில் துணையாக இருக்கும் வரை மனைவியின் அருமையை அறியாதவர்கள்,நாம் பலமுறை சந்தித்து கவனிக்காமல் கடந்து சென்ற, செல்கிற ரயில்வே சுமை தூக்கித் தொழிலாளி,லாரி கிளீனர், அரவாணிக்கு 100 ரூபாய் தருகிற விலைப் பெண், அப்பாவை இழந்து தவிக்கிற பெண்,  நண்பர்களின் மரணங்கள், மனைவியை விட்டு வயதான காலத்தில் பிரிந்து இருக்க முடியாது தவிக்கிற கணவன், துன்பத்தில் துவளும் போது உத்வேகத்தைத் தருகிற குளத்தில் நீந்துகிற மீன், காதலித்துத் தோற்றுப் போய் நண்பர்களாக இருக்கிறவர்கள், வயதான அம்மாவை குடும்ப சூழ்நிலையால் தன்னோடு வைத்து பார்த்துக் கொள்ள முடியாதவர்கள், வயது கூடக் கூட,நெருங்கிய நண்பர்களுக்குள் நிகழ்கிற உரையாடல் மாற்றங்கள், இயல்பாக நிகழ்கிற சம்பவங்களை ஒன்றோடு ஒன்று போட்டு குழப்பிக் கொள்ளுகிற மனநிலை, தனது சிக்கனத்தால் வாழ்க்கையில் மிக முக்கிய பாடம் ஒன்றைப் போதிக்கும் பட்டாபி,பெண்ணுக்கு மன ரீதியாக அழுத்தம் தந்து தான் நினைத்ததை சாதித்துக் கொள்ளும் தந்தை,சிறு வயது விளையாட்டுக்கள்,அரசியல் ஆர்வங்கள் இப்படி கதைகளில் அவர் பதிவு செய்திருக்கிற பலரை அல்லது எல்லோரையும்,எல்லாவற்றையும் நாம் வாழ்வில் எப்போதாவது கடந்து வந்திருப்போம்தானே?

அப்பாவின் நினைவுகள் நிறைந்த வீடு,அப்பாவின் நினைவாக உள்ள சுவர்க் கடிகாரம் இவையெல்லாம் நமக்கு பொக்கிஷங்கள்.இந்தத் தலைமுறைக்கு…? 

அப்பா, இதை ஸ்கிராப்ல போட்டிருங்களேன்.

இந்த ஒற்றை வரியில்,அத்தனை பெரிய தலைமுறை இடைவெளியை எவ்வளவு சுலபமாகக் கடத்துகிறார் பாருங்கள்.

விஞ்ஞான நுட்பத்தைப் பேசுகிற புறா வேட்டையும் சுவாரசியமாக இருக்கிறது.

நாணா என்கிற தி. நாராயணனின் கதையில் வருகிற, ஆதிகேசவனைப் போல், மதுசூதனும் அடிக்கடி பழைய விஷயங்களை நினைத்து பார்த்துக் கொள்கிறார். அவற்றை நேர்த்தியாகப் பதிவும் செய்கிறார்.

வாசிக்கிற யாவருக்குமே எளிதில் நெருக்கமாகி விடுகிற கதைகளின் தொகுப்பு.

--------------------------------


சிறுவாணி வாசகர் மையம் பற்றி... 2017-2025 ஒன்பதாம் ஆண்டில்....

 சிறுவாணி வாசகர் மையம் பற்றி..... கோவையில் சிறுவாணி வாசகர் மையம் 2017 உலகப் புத்தக தினம் அன்று துவக்கப்பட்டது. வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக...